கந்துவட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழில்
செய்துவரும் நிழல் உலக தாதாக்கள் யோக் ஜெப்பி மற்றும் பாபு ஜெயனுக்கு இடையே
கடுமையான தொழில் போட்டி நடந்து வருகிறது. இதில் யோக் ஜெப்பியின்
கைத்தடியாக வரும் நடிகர் சந்தோஷ் பிரதாப் மக்களிடம் ஈவு இரக்கம் இன்றி
கறாராகப் பணம் வசூலித்து வருகிறார். ஒரு பக்கம் காணாமல் போன தன் அண்ணனைத்
தேடி வருகிறார் நடிகர் கருணாகரன். இன்னொரு பக்கம் நடிகர் அருண் ஆதிக் நடிகை
சுபிக்ஷாவை துரத்தித் துரத்திக் காதலிக்கிறார். மறுபுறம் பாபு ஜெயின்
யோக் ஜெப்பியை கொல்லத் துடிக்கிறார். இதையடுத்து இவர்கள் அனைவரும் எப்படி
ஒரு புள்ளியில் இணைகின்றனர், கந்துவட்டி கொடுப்பவர்கள் மற்றும் அந்தக்
கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன என்பதே 'பொதுநலன் கருதி'.
ஒரு நல்ல கதையை நான் லீனியர் திரைக்கதை
மூலம் ரசிக்கவைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் சீயோன். நடுத்தர
வர்க்கத்தை சார்ந்த எளிய மக்கள் சூழ்நிலை காரணமாக எப்படி கந்துவட்டி
கும்பலிடம் சிக்கி தங்களது வாழ்க்கையை சின்னாபின்னமாக்கிக் கொள்கிறார்கள்
என்பதையும், கந்துவட்டி கும்பலுக்குப் பின்னால் இருக்கும் நிழல் உலக
தாதாக்கள் எப்படி தங்களை போலியாக மக்கள் முன் நிலைநிறுத்திக் கொள்கிறார்கள்
என்பதை 'ரா'வாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குனர் சீயோன். ஒவ்வொரு
காட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லாமல் ஒரு புதுவிதமான திரைக்கதையை
கையாண்டு இருப்பது சில இடங்களில் ரசிக்க வைத்தாலும் பல இடங்களில் குழப்பம்
நிறைந்திருப்பது சற்று அயர்ச்சியை ஏற்படுத்துவதுபோல் தோன்றுகிறது.
கந்துவட்டிக் கும்பலுக்குப் பின்னால் உள்ள தாதாக்களின் பிரச்சனைகளை சற்று அதிகமாகவே விவரித்திருக்கிறார்கள், குறைத்திருக்கலாம். மேலும் காட்சிகளில் காலநேரத்தை சரியாக உணர்த்தியிருந்தால் படம் இன்னும் நம்பகத்தன்மையுடன் இருந்திருக்கும். படத்தின் நாயகிகள் தேர்வு படத்திற்கு சற்று பின்னடைவாகவே அமைந்துள்ளது. இருந்தும் திரைக்கதையின் வேகம் இதையெல்லாம் ஓரளவு மறக்க செய்து ரசிக்க செய்வதையும் மறுக்கமுடியாது.
கந்துவட்டிக் கும்பலுக்குப் பின்னால் உள்ள தாதாக்களின் பிரச்சனைகளை சற்று அதிகமாகவே விவரித்திருக்கிறார்கள், குறைத்திருக்கலாம். மேலும் காட்சிகளில் காலநேரத்தை சரியாக உணர்த்தியிருந்தால் படம் இன்னும் நம்பகத்தன்மையுடன் இருந்திருக்கும். படத்தின் நாயகிகள் தேர்வு படத்திற்கு சற்று பின்னடைவாகவே அமைந்துள்ளது. இருந்தும் திரைக்கதையின் வேகம் இதையெல்லாம் ஓரளவு மறக்க செய்து ரசிக்க செய்வதையும் மறுக்கமுடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக