விகடன் :சின்னத்தம்பி யானையைக் கும்கியாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் போராட்டம் நடைபெற்றது.
கோவையைச் சேர்ந்த சின்னத்தம்பி
என்ற காட்டு யானையைக் கடந்த வாரம் வரகளியாறு பகுதிக்கு இடமாற்றம்
செய்தனர். குடும்பத்தை விட்டுப் பிரித்து, தந்தங்கள் உடைந்து, ரத்த
காயங்களுடன் இடமாற்றம் செய்ததால் சின்னத்தம்பி யானைக்காகப் பலரும் ஆதரவு
தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சின்னத்தம்பி யானை கடந்த சில
நாள்களுக்கு முன் தன் குடும்பத்தைத் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியில்
வந்தது.
இதனிடையே, சின்னத்தம்பியை யானையை மீண்டும் பிடித்து, கூண்டில் அடைத்து, அதைக் கும்கியாக மாற்றப்படும் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், சின்னத்தம்பி யானையைக் கும்கியாக மாற்றும் முயற்சியைக் கைவிட்டு, அதை மீண்டும் கோவை வனப்பகுதிக்குள் விடவேண்டும் என்று வலியுறுத்தி கோவையில் போராட்டம் நடைபெற்றது. இதில் சமூக நீதிக்கட்சி, ஆனைக்கட்டி பழங்குடி மக்கள், தடாகம் பகுதி இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், சூழலியல் ஆர்வலர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில்
கலந்து கொண்ட பழங்குடி மக்கள் சின்னத்தம்பியை மீண்டும் தடாகம் பகுதியில்
விடச் சொல்லி கண்ணீர் விட்டு அழுதனர். சின்னத்தம்பி யானையை மீட்பதற்காக,
சின்னத்தம்பி பாதுகாப்பு குழுவும் தொடங்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக