புதன், 6 பிப்ரவரி, 2019

தூத்துக்குடி சந்தியாவை துண்டு துண்டாக வெட்டி குப்பையில் வீசிய சினிமா இயக்குனர் பாலக்கிருஷ்ணன் .. (காதல் இலவசம் பட இயக்குனராம்) விடியோ

samayam.com :தன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கொலை செய்து விட்டு துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை குப்பையில் வீசி எறிந்துள்ளார் இயக்குனர் பாலகிருஷ்ணன். சமீபத்தில் குப்பைக் கிடங்கில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு உடற் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டது. குப்பைக் கிடங்கில் துண்டு துண்டாக வீசிக் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மரணத்தில், அப்பெண்ணைக் கொலை செய்தவர் அவரது கணவரும் சினிமா இயக்குனருமான பாலகிருஷ்ணன் என்பது தெரிய வந்துள்ளது. இவர் ‘காதல் இலவசம் என்ற படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார்.


சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குப்பைக் கிடங்கில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி ஒரு பெண்ணின் வலது கை மற்றும் 2 கால்கள் கண்டெடுக்கப்பட்டன. வேறு எந்த உடல் பாகங்களும் கிடைக்கவில்லை. பெண்ணின் கையில் இருந்த டாட்டூவை வைத்து, அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும், திருமணமான இவர், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இவரது கணவர் பாலகிருஷ்ணன், கடந்த 2010ஆம் ஆண்டு ‘காதல் இலவசம்என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் மனைவி சந்தியா பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அந்த படத்தை பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்த படம் ஓடாத காரணத்தினால் வாய்ப்புகள் இல்லாமல், நண்பர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் கணவன் & மனைவி இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் தமது மனைவி வேறாருவருடன் தொடர்பு இருப்பதை அறிந்த பாலகிருஷ்ணன்,சந்தியாவை கொலை செய்து விட்டு, அவரின் உடலைதுண்டு துண்டாக வெட்டி பெருங்குடியில் வீசி எறிந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை: