சனி, 13 அக்டோபர், 2018

மும்பை மொரிசியஸ் வங்கியில் சைபர் கொள்ளை 143 கோடி ரூபாய் சர்வரை முடக்கி ..

தினமலர் :மும்பை : மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள, 'ஸ்டேட் பேங்க் ஆப் மொரீஷியஸ்' வங்கியின் பிரதான, 'சர்வரை' முடக்கி, 143 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடான மொரீஷியஸ் நாட்டு வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைந்து, 'ஸ்டேட் பேங்க் ஆப் மொரீஷியஸ்' என்ற பெயரில் இயங்குகிறது. மும்பையில் உள்ள, ஸ்டேட் பேங்க் ஆப் மொரீஷியஸ் வங்கியின் கிளையில், இணையம் மூலம், 143 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக, மும்பை பொருளாதார குற்றப் பிரிவில், புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: