வியாழன், 2 ஆகஸ்ட், 2018

பிகார் .. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை காப்பாற்ற பட்டது மூன்று வயது ...

குழந்தை மீட்பு: நெகிழ்ச்சியில் ஊர்மக்கள்!
மின்னம்பலம்: ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை ஒன்று 31 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
பயன்படுத்தப்படாமலுள்ள ஆழ்துளைக் கிணறுகளைப் பொதுமக்கள் மூடாமல் அப்படியே விட்டுவிடுவதால் அதில் குழந்தைகள் தவறி விழுந்து உயிரிழக்க நேரிடுகிறது. இதுகுறித்து தொடர்ந்து அறிவுறுத்தியும் சிலர் அதை அஜாக்கிரதையாக விட்டுவிடுகின்றனர்.
பிகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் ஜூலை 31ஆம் தேதி மூன்று வயது பெண் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது, திறந்து கிடந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டது.

தகவலறிந்த கோட்வாலி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 110 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளைக் கிணற்றில் பக்கவாட்டில் பொக்லைன் எந்திரம் மூலம் பெரிய பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து 31 மணி நேரமாக நடைபெற்ற மீட்புப் பணிகளால் நேற்று (ஆகஸ்ட் 1) அந்தப் பெண் குழந்தை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது. இந்தத் தகவலை மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட இச்சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: