திங்கள், 30 ஜூலை, 2018

அதிமுகவின் அடியாள் பிரிவாகவே புலிகள் வலம் வந்தனர்...?

Vaali Ravi : தூத்துகுடி துப்பாக்கி சூட்டினை எதிர்த்து பேச பயப்படுவன் எல்லாம்
எங்கோ ஈழத்தில் கலைஞர் தமிழரை காப்பாற்றவில்லை என குதித்துகொண்டிருக்கின்றான்
டேய் தும்பிஸ்,
இந்த தூத்துகுடி துப்பாக்கி சூட்டுக்கு உங்க சைமனை ஏதும் உருப்படியாக சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம்
உருப்படியாக ஒரு சத்தம்? ஒரு வார்த்தை கேட்டானா அந்த "முன் ஜாமீன் முனியாண்டி"
கலைஞர் எதை செய்யவில்லை?
டெசோ என வாஜ்பாய் முதல் பரூக் அப்துல்லா வரை அவர் அகில இந்திய அளவில் அமைப்பு எடுத்து போராடிய பொழுது சபா ரத்தினத்தை கொன்று அந்த அமைப்பினையே முடக்கினான் பிரபாகரன்
புலிகளின் அத்துமீறலினால் பலர் மனம் கசந்து அமைதியானார்கள்
1989ல் கலைஞர் அமைதிபடையினை மீட்டு உதவியும் அவர் ஆட்சியிலே அதுவும் சென்னையிலே பத்மநாபாவினை கொன்று அவர் ஆட்சி கலைய வைத்தார்கள்
உச்சமாக ராஜிவ் படுகொலை செய்து திமுகவினை 1 எம்.எல்.ஏ என முடக்கினார்கள். ராஜிவ் கொலைக்கே திமுக அளித்த புலிகள் உதவி என விசாரணையின் முடிவில் திமுகவே தடை செய்யும் அளவிற்கு சென்றது
நன்றாக கவனித்தால் ஒரு உண்மை விளங்கும்
புலிகளை தன் வளர்ச்சிக்கு பயன்படுத்திய கட்சி அதிமுக. ராமசந்திரன் காலத்தில் இருந்தே அதுவே நடந்தது, பின்பு பயன்படுத்தியவர் நடராஜன்
கொஞ்சமும் அறிவற்ற , சிந்தனையற்ற பிரபாகரன் அதன் வழியே நடந்தான், அதிமுகவிற்கு சாதகமான முடிவுகளையே எடுத்தான்
இதனாலேயே 1989 திமுக ஆட்சி கலைக்கபட்டது, ராஜிவ் கொலையால் திமுக அதளபாதாளத்திற்கு சென்றது

நடராஜனின் சித்து விளையாட்டில் புலி ஆதரவு கோஷ்டிகள் பெருகின. வைகோ, சைமன், நெடுமாறன் என யாரெல்லாமோ வந்தார்கள்
வந்து என்ன செய்வார்கள்? கலைஞரை திட்டுவார்கள்
கலைஞரோ அமைதிகாப்பார், அவர் சுபாவம் அப்படி
1999ல் உண்மையில் புலிகளுக்கு ஆனையிறவில் ராணுவ வெற்றி. அப்பொழுது ஈழம் அமைவதை சாட்சாத் இந்தியா தடுத்தது
ஆனால் பிரதமர் யார்? வாஜ்பாய் அவர் ஆட்சியில் இருந்தது வைகோ, ராமதாஸ் இன்னபிற தமிழ் உணர்வாளர்கள்
ஈழம் அமைவதை தடுக்கும் வாஜ்பாயின் ஆட்சியில் இருந்து வெளியேறுவோம் என யாராவது வந்தார்களா?
இல்லை, வரமாட்டார்கள். ஏதும் தமிழக சத்தம் வந்ததா இல்லை வராது. காரணம் ஜெயா மேல் வழக்குகள் இருந்தன‌
தன் மேல் நடவடிக்கை பாயகூடாது என்பதற்காக பிரபாகரனை பிடித்து தூக்கில் போட வேண்டும் என நடிப்பார் ஜெயலலிதா
ஆனால் அவரின் அங்குசமான நடராசன் திரைக்கு பின்னால் புலிகும்பலுடன் இருப்பார், அது தெரிந்தும் ஜெயா அமைதியாக இருப்பார்
இருவரும் ஒப்பந்தம் போட்டுவிட்டே நாடகம் நடத்தினார்கள். ஜெயா அருமையாக நடித்தார். நடராசன் பின்னணியில் காய் நகர்த்தினார்
பிரபாகரனோ உலகின் ஒரே தந்திரசாலி தான் மட்டும் என நம்பிகொண்டிருந்தான், தன்னை ஒருநாள் மொத்தமாக கைவிடுவார்கள் என்ற சிந்தனை அவனிடம் சுத்தமாக இல்லை
உதாரணம் பாருங்கள், புலிகளை சந்தித்தது யாரென்றால் வைகோ, சைமன், பாரதிராஜா இன்னபிற கோஷ்டிகள்
இவை எங்கெல்லாம் இருக்குமென்றால் நடராஜன் உலாவுமிடமெல்லாம் அவர் பின்னால் இருக்கும்
இப்படி எல்லாம் புலிகளும் நடராசனின் பினாமி கும்பல்களும் ஓரணியில் இருந்தபொழுதுதான் ஈழ யுத்தம் 2006ல் வெடித்தது
அது புலிகளே வரவைத்த யுத்தம், மகிந்தாவினை வெல்ல வைத்ததும் புலிகள், வலுகட்டாயமாக சண்டையினை தொடங்கியதும் புலிகள்
லட்சுமன் கதிகாமரை கொன்று லண்டனிலும் அமெரிக்காவிலும் தடை வாங்கியதும் புலிகள்
உலகமே புலிகளை மண்டையில் போட ஒன்று சேர்ந்தவந்த பொழுதும் வெற்று கனவில் இருந்தவன் பிரபாகரன்
ராஜிவ் கொலை என்பதை வெறும் குண்டுவெடிப்பாக கருதி, இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும் என அவன் கேட்டபொழுதே அவனுக்கு மண்டையில் ஒன்றும் இல்லை என்பது விளங்கிற்று
அவன் முடிவு உறுதியானது, அவன் இனி தப்பமுடியாது என்பது அதிமுக கும்பலுக்கு விளங்கிற்று
வாழும் வரை பிரபாகரனை கலைஞரின் நிம்மதியினை கெடுக்க பயன்படுத்திய கும்பல், அவன் சாவினையும் கலைஞருக்கு எதிராக தீரா பழிபோட திட்டமிட்டது
அந்த திட்டத்தில் முளைத்த காளான்கள் சைமன், திருமுருகன் காந்தி இன்னபிற‌
ஒரு ஈழ அடிப்படை அறிவோ போராட்ட வரலாறோ, திமுகவின் ஆரம்பகால உதவிகளோ அறவே தெரியாது, காளான்களுக்கு என்று வேர் இருந்தது
பின்பு அந்த காளான்களை காணவில்லை, அந்த மழைக்கால புற்றீசல்களை யாரும் பார்க்கவே இல்லை
இப்பொழுது கலைஞர் கடைசி தருணத்தில் இருக்கும் பொழுது என்றோ அந்த புற்றீசல்களின் எச்சம் மறுபடி வருகின்றது
அவை தானாகவே அடங்கியும் போகும்
அதிமுகவினை நம்பி திமுகவிற்கு எதிராக கடும் துரோகங்களை செய்த பிரபாகரனுக்கு என்ன கொடூர முடிவு வந்தது என்பதை உலகம் அறியும்
பிரபாகரனை நம்பி அரசியல் அனாதை ஆன வைக்கோவின் நிலை தமிழகம் அறியும்
அதிமுகவின் அடியாள் பிரிவாகவே புலிகள் வலம் வந்தனர் என்ற உண்மையும் ஒரு காலத்தில் விளங்கும்
அன்று கலைஞரை புரிந்துகொள்வாவர்கள் அந்த தும்பிஸ், அவர்களின் கொசு மூளைக்கு எல்லாமே மெதுவாகத்தான் புரியும்
அப்பொழுது "முன் ஜாமீன் முனியாண்டி" அவர்கள் கையாலே அடி பின்னபட்டு தோல் உரிக்கபடுவான்.

கருத்துகள் இல்லை: