செவ்வாய், 31 ஜூலை, 2018

உ. பியில் எதிர்கட்சிகள் பிரமாண்ட கூட்டணி ... காங்கிரஸ் , மாயாவதி , அகிலேஷ் யாதவ் , அஜித் சிங்....

THE HINDU TAMIL : உத்தரப் பிரதேசத்தில் ஆளும் பாஜகவை தோற்கடிக்கும் வகையில், அனைத்து எதிர்கட்சிகளும் இணைந்து ‘மெகா’ கூட்டணியை உறுதி செய்துள்ளன. இதனால் மக்களவை தேர்தலில் அந்த மாநிலத்தில் பாஜக கடும் சவாலை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
உ.பி.யில் தற்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ள நிலையில் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷின் சமாஜ்வாதி கட்சியும் இணைந்து போட்டியிட்டன.
இவர்களுடன் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் அஜித்சிங்கும் இணைந்ததால் பாஜகவிற்கு தோல்வி ஏற்பட்டது.
 வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை தோல்வியடையச் செய்ய இதே வியூகத்துடன் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. இதுதொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன. நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உ.பி.யில் மொத்தம் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன.
இதில் கணிசமான தொகு

கருத்துகள் இல்லை: