புதன், 13 ஜூன், 2018

ஜிண்டால் நிறுவனத்துக்காக சேலம் சென்னை 8 வழிச்சாலை .... தமிழக இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதற்கு..

பழனி ரமேஷ் குமார் : சேலம் To சென்னை விமான
சேவை 8 வழிச்சாலை
தொடக்கம்.. ஏன் தெரியுமா?
# சூழ்ச்சிகளைப் புரிந்து கொள்ளுங்கள்
# இல்லையேல் இல்லாமல் ஆக்கப்படுவீர்கள்,
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி , # சென்னை - சேலம் இடையே அரூர் வழியில் 8 வழி பசுமைச் சாலை அமையவிருப்பாதாக அறிவித்துள்ளார். இதன் மதிப்பீடு பத்தாயிரம் கோடி ரூபாய்,
தமிழ் நாட்டிற்கு # எய்ம்ஸ் மருத்துமனை அமைக்காத,
# மருத்துவ கல்லூரி அமைக்காத மத்திய அரசு ஏன் புதிய சாலையமைக்க
# பத்தாயிரம் கோடியை செலவிடுகிறது என்று ஆராய்ந்தீர்களா?
அந்த பத்தாயிரம் கோடியும் மக்கள் வரிப்பணம்
அமையவிருக்கும் சாலையானது # கார்ப்பரேட் நிறுவனமான # ஜிண்டாலுக்காக .( Jindal steel)
ஆம், # ஜிண்டால் என்ற ஒற்றை நிறுவனத்தின் தேவைக்காக
தமிழர்களின் நிலமும், கனிம வளமும் களவாடப்பட இருக்கிறது,
#ஜிண்டால் தன் நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் 7525 கோடி ரூபாயை
புதியதிட்டங்களுக்கு ஒதுக்கி உள்ளது.
அதில் முதன்மையான திட்டம் #சேலம் மாவட்டத்தில் உள்ள # கஞ்சமலையில் இருந்து இரும்புத் தாதுக்களை வெட்டி எடுப்பது. இரண்டாவது # திருவண்ணாமலை மாவட்டம் # கல்வராயன்மலையில் இருந்து # இரும்புத்தாதுக்களை வெட்டி எடுப்பது,
இவ்விரண்டு திட்டத்தின் மூலம் கைப்பற்றும் # இரும்புத்தாது வளங்களை
வெளிநாடுகளுக்கு அதிவிரைவாக ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் சென்னை துறைமுகத்துக்கு கொண்டுச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் மலைகளின் ஊடாக ஒரு அதி விரைவு சாலை அமைக்கிறார்கள்.

அது தான் இந்த #சென்னை -சேலம் விமான சேவை மற்றும் 8 வழி பசுமை சாலை.
இந்த சாலையின் மூலமாக சேலம்- சென்னைக்கு இடையிலான
பயணதூரம் 60 கிலோமீட்டர் குறையும்.
நம் வளங்கள் நம் வரிப்பணத்திலேயே களவு போக உள்ளது.
இதற்கு # தமிழக அரசும் உடந்தை.
தயவு செய்து # தமிழ் செய்தித் தாள்களை தவிர்த்து
கூடுமானவரை # ஆங்கில செய்தித்தாளை வாசியுங்கள்,
# எப்படி அழியப்போகிறோம் என்பதாதவது புரியும்.
தொடர்ந்து வரும் ஆபத்துகள்?
தப்புமா தமிழகம்! உயிர்வாழ எங்கே செல்வார்கள் தமிழர்கள்?
சேலத்தில் ஏன் விமான நிலையம் இப்போது தொடங்கப்பட்டது. இவையனைத்தும் இந்த பதிவில்...
மூனு மாதத்திற்கு ஒரு செயற்கை கோள் யாருக்காக இஸ்ரோ அனுப்புகிறது?
மிகச்சரியான இடத்தில் எப்படி மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, பிளாட்டினம் திட்டங்கள் தொடங்கபடுகிறது.
இந்தியாவிலேயே ஏன் உலக அளவில் அதிக அளவு பிளாட்டினம் நமது நாமக்கல் மற்றும் கோவை மாவட்டத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கோவை, சேலம், ஈரோடு,கரூர்,நாமக்கல் மாவட்டங்கள் தான் அடுத்த இலக்கு.
குறிப்பாக நாமக்கல் மாவட்டம் சத்தம்பூண்டியில் 27 சதுர கிலோமீட்டர் அளவிலும் மேட்டுப்பாளையத்தில் 150 சதுர கிலோமீட்டர் பரப்பளவிலும் பிளாட்டினத்தாதுக்கள் உள்ளதாக...
...இந்திய புவியியல் ஆய்வுத்துறை இஸ்ரோவின் உதவியுடன் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து தமிழக கனிம வளத்துறையுடன் (TAMIN) இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டது.
மிகக்குறைவாக 30 மீட்டர் ஆழத்திலேயே தாதுக்கள் அதிக அளவாக கிடைத்த நிலையில், 500 மீட்டர் ஆழத்தில் அதிக அளவிலான பிளாட்டினத்தாதுக்கள்
கிடைப்பது உறுதி என நம்புகிறார்கள்.
இதில் சத்தம்பூண்டியில் கிடைக்கபெற்ற
பிளாட்டினத்தாதுக்கள் 2500 முதல் 2700 மில்லியன் ஆண்டுகள் பழமையான
மதிப்புமிக்கதாகும்
பிளாட்டினத்தாதுக்கள் உள்ள பகுதிகளில் கூடிய விரைவில்
நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற இருக்கிறது.
கொங்கு மண்டலமும் கொலையாக போகிறது, கொள்ளை போகப் போகிறது
தற்காத்துத் தப்பி பிழைத்திடு எம் தமிழினமே!
காசுக்கு ஓட்டுப் போட்டு அழிந்து போகாதே!
கடலுக்குள் போகாதே கச்சதீவை
விற்றுவிட்டோம்
காட்டுக்குள் போகாதே நீயூட்ரினோக்கு விற்றுவிட்டோம்
காவேரிகரைக்கு போகாதே மணலை விற்றுவிட்டோம்
விவசாயம் செய்யாதே ஹைட்ரோகார்பனுக்கு விற்றுவிட்டோம்
மருத்துவம் படிக்காதே வடஇந்தியருக்கு(நீட்) விற்றுவிட்டோம்
TNPSC எழுதாதே தமிழே தெரியாதவனுக்கு விற்றுவிட்டோம்
நெல்லைக்கு போகாதே ரஷ்ய அனுஉலைக்கு
விற்றுவிட்டோம்
தூத்துக்குடிக்கு போகாதே ஸ்டெர்லைட்டுக்கு விற்றுவிட்டோம்
ராம்நாடு போகாதே அதானி மின்திட்டத்துக்கு விற்றுவிட்டோம்
தஞ்சாவூர்க்கு போகாதே மீத்தேனுக்கு விற்றுவிட்டோம்
நாகை போகாதே பெட்ரோகெமிக்கலுக்கு விற்றுவிட்டோம்
மலையேற போகாதே க்ரானைட் குவாரிக்கு விற்றுவிட்டோம்
வெள்ளயங்கிரி போகாதே ஜக்கிவாசுதேவ்கு விற்றுவிட்டோம்
சதுரகிரிக்கி போகாதே யாருக்கோ _______ விற்கப் போகிறோம்
எந்த கருமத்தையும் கண்டுக்காதே ஏனெனில் உன் வாக்கை நீ விற்றுவிட்டாய்...
நாங்க விலைகொடுத்து வாங்கியதை லாபத்திற்கு விற்றுவிட்டோம்...
நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தர்களை யெண்ணி

கருத்துகள் இல்லை: