சனி, 26 மே, 2018

8 பேர் சினைப்பர்களால் சுடப்படவில்லை .. நேருக்கு நேராக அருகில் நின்றுதான் சுட்டு கொல்லப்படனர்


Kalaiwannan Kalai : எனது சந்தேகம் நிரூபணமானது. ஊர்தியில் இருந்து திசைதிருப்புவதற்காக SLR சுடுகலனால் சத்த வெடிவைத்துவிட்டு, மிக அருகில் போராட்டக்காரர்களோடு சிவில் உடையில் நின்ற வேறு கொலைகாரக் குழு ஒன்றுதான் அவர்களைச் சுட்டுக்கொன்றுள்ளது. இந்தியன் SLR சுடுகலனின் அதிகூடிய தாக்கமான தூரவீச்சு 600மீற்றர். அதாவது 600மீற்றரில் உள்ள ஒரு இலக்கை காயப்படுத்தலாமே தவிர அவ்வாறு துல்லியமாகக் கொலைசெய்ய முடியாது.
சாதாரண குறிச்சூட்டுச் சுடுகலனால் (normal sniper) 300மீற்றர் தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாகச் சுடமுடியும். அதுவும் அணை (mount) கொடுக்கப்படாமல் நின்ற நிலையில் (standing position) அவ்வாறு 300 மீற்றரில் துல்லியமாகச் சுடமுடியாது, ஆனால் காயப்படுத்தலாம்.
காவல்துறை கூறியது போன்று 800 மீற்றரில் இருந்து அந்த SLR ஆல் அவ்வாறு துல்லியமாகச் சுடமுடியாது. அவர்கள் சுட்ட அந்த SLR சுடுகலனில் குறிச்சூட்டுச் சுடுகலனுக்கு உரிய 'ஒளியியல் தொலைபார்வைக் குறிகாட்டி' (obtical scope sight) பொருத்தப்பட்டிருக்க வில்லை. அது, வெறும் குறிகாட்டியுடன் கூடிய சதாரண சுடுகலன்.


அது ஒருபுறம் இருக்க, அப்படி நின்ற நிலையில் இருந்து 100மீற்றரில் உள்ள ஒரு இலக்கைக் கூட துல்லியமாகச் சுட முடியாது.

இந்நிலையில் எப்படி 800மீற்றரில் இருந்து, 100 நாட்களாக அந்தப் போராட்டத்தை முன்நின்று வழிநடத்தியவர்களாகிய அந்த 8பேரையும் மிகத் துல்லியமாகக் குறிபார்த்துச் சுடமுடியும்??

ஆகவே, திரு.யெகத் கசுப்பர் கூறுவது போன்று, அந்த எட்டுப்பேரும் சிவில் உடையுடன் போராட்டக்காரர்கள் போல் நின்ற ஒரு கொலைக் குழுவால் மிக அருகில் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அந்த ஊர்தியில் நின்ற நிலையில் இருந்தவாறு குறைந்தது 100மீற்றரில் உள்ள ஒரு இலக்கை அவ்வாறு துல்லியமாகச் சுடமுடியாது.

ஆகவே இது இந்தியக் காவல்படையின் திட்டமிடப்பட்ட ஒரு மறைமுகக் கூட்டு நடவடிக்கை (coordinated covert operation) என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது.

இந்த உண்மையைப் புரிந்துகொண்டு, கொலைகாரக் காவல்படையை சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை வழங்கப்பட்டு, இதற்குக் காரணமான அனைத்துத் தரப்பும் மக்களுக்கு அடையாளப் படுத்தி, அவர்களுக்கான உரிய தண்டனைகள் வழங்கப்படும்வரை தமிழர்கள் தங்கள் நீதிப் போராட்டத்தை ஒருபோதும் நிறுத்தக் கூடாது.

http://www.ofbindia.gov.in/products/data/weapons/wsc/15.htm

கருத்துகள் இல்லை: