சனி, 10 மார்ச், 2018

நாடார் முதுகில் குத்திய பாஜக .. முதுகலை படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட உரிமை நீக்கம்

அரசியல் அடையாளத்திற்காகவும், எப்படியும் தம் சமூகத்தை அடுத்த நிலைக்கு கொண்டு சென்று விட வேண்டும் என்றும் தமிழ் நாட்டில் பிஜேபியை தூக்கி சுமப்பது நாடார்கள்.
கடினமான, நேரம் காலம் பாராமல் உழைத்ததின் மூலம் பொருளாத்தார தன்னிறைவு அடைந்தப் பின் அரசியல் பங்கு என்பது இயல்பான எண்ணம்தான். குற்றம் இல்லை. ஆனால் அதற்காக சேர்ந்த இடம் தான் சொந்தக் காசில் சுனியம்.
நாடார்கள் பணம் ஈட்டி, தம் பிள்ளைகளை பல மேற்படிப்பு படிக்க வைத்தார்கள். ஆனால் அத்தகைய மேற்படிப்பு இந்திய, தமிழக அரசியல் சுழ்நிலையால்தான் சாத்தியமானாது என்பதை அறியாமல், எல்லாத்திற்கும் கடின உழைப்பு மட்டுமே காரணம் என்று நம்பினர்.
அந்த நம்பிக்கையே அரசியல் களத்தில் தவறான முடிவு எடுத்து பிஜேபிக்கு தோள் தந்தனர். அந்த பிஜேபிதான் தற்பொழுது மருத்துவ முதுகலை படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27% இட உரிமையை இரத்து செய்துள்ளார்கள். நாடார் பிள்ளைகளின் படிப்பில் மண். பிஜேபி நாடார்களை முதுகில் குத்தி உள்ளது.
சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் நாடார்கள் பற்றிய தவறான தகவலுக்காக நாடார் சங்கங்கள் நாடாளுமன்றம் வரை சென்று போராடி வெற்றிப் பெற்றனர். இப்பொழுது பாடப்புத்தகத்தை கையில் எடுப்பதற்கே தடை. நாடார் சங்கங்கள் போராடுமா? பிஜேபியை கைக் கழுவுமா?
நாடார் சமூகத்தை சேர்ந்த, பிஜேபியில் உள்ள, மாநிலத் தலைவர் டாக்டர். தமிழிசை மற்றும் ஒன்றிய அமைச்சர். பொன்.இராதாகிருஷ்ணன், உடனடியாக இதில் தலையிட்டு தீர்வு காண்பார்களா?
இனியாவது, நாடார்கள், தமக்கும், தம் பிள்ளைகளுக்கும் சரியான அரசியல் எதுவோ, அதை தேர்ந்தெடுப்பார்களா?

கருத்துகள் இல்லை: