புதன், 7 பிப்ரவரி, 2018

ஏரியில் மிதந்த சாமி சிலைகள் மீட்பு!

ஏரியில் மிதந்த சாமி சிலைகள் மீட்பு!மின்னம்பலம் :காஞ்சிபுரம் அருகே ஏரியில் மிதந்த எட்டு கற்சிலைகள் பத்திரமாக மீட்கப்பட்டன.
சுங்குவார்சத்திரத்தை அருகே பொடவூர் ஏரியில் பழைமையான கற்சிலைகள் கிடப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியது. இதையடுத்து அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்த சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான்விக்டர், தாசில்தார் ரமேஷ் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஏரியில் மிதந்த எட்டு சாமி சிலைகளைப் பத்திரமாக மீட்டனர். சோதனை செய்து பார்த்ததில் அதில் தங்க நிற வண்ணம் பூசியது தெரியவந்தது.
இதில் பெரும்பாலான சிலைகள் சேதமடைந்த நிலையில் இருந்தன.
இதை தங்க சிலைகள் என நினைத்து கொள்ளை கும்பல் கடத்தி, அது கற்சிலை என்று தெரிந்ததும் ஏரியில் வீசியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிலைகள் மாயமாகி உள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட சிலைகள் தற்போது தாசில்தார் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: