செவ்வாய், 12 ஜூலை, 2016

ஜாகிர் நாயக் இந்தியா வராததால் பரபரப்பு

மும்பை,: 'பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளான தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் ஆகியோரை பிடிப்பதைவிட, இந்தியாவைச் சேர்ந்த, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஜாகிர் நாயக்கை முதலில் பிடிக்க வேண்டும்' என, மத்திய அரசை சிவசேனா வலியுறுத்திஉள்ளது. மத்தியிலும், மஹாராஷ்டிராவிலும், பா.ஜ., தலைமையிலான கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ளது சிவசேனா கட்சி. கட்சியின் பத்திரிகையான 'சாம்னா'வில் நேற்று ெவளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:பாகிஸ்தானில் உள்ள தாவூத்தை பிடிப்போம், டைகர் மேமனை பிடிப்போம் என்று சொல்வதை தற்காலிகமாக நிறுத்துங்கள். வங்கதேசத்தில், இந்திய பெண் உட்பட, 22 பேரை கொன்ற பயங்கரவாதி களை துாண்டிய, மத போதகர் ஜாகிர் நாயக்கை முதலில் பிடிக்க வேண்டும்.

முஸ்லிம் மக்களை பயங்கரவாதத்தில் ஈடுபடுவதற்குதுாண்டும் வகையில் பேசும் ஜாகிர் நாயக்கின், 'பீஸ் டிவி'க்கு உலகெங்கும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐதராபாத்தில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட, ஐ.எஸ்., பயங்கரவாதிகள், ஜாகிர் நாயக் நடத்திய, 'அமைதி முகாமில்' பங்கேற்றதாகவும் கூறியுள்ளனர்.
ெவளிநாட்டில் இருந்து கறுப்புப் பணத்தை மீட்பது; தாவூத், மேமனை கைது செய்வது போன்ற விஷயங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி, ஜாகிரை கைது செய்வதில் அக்கறை காட்ட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.


'டிமிக்கி' தந்த ஜாகிர் நாயக்: இந்தியா வராததால் பரபரப்பு

அண்டை நாடான, வங்கதேச தலைநகர் தாகாவில், கடந்த வாரம், பயங்கரவாதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில், 22 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தில் தொடர்புள்ள இரு பயங்கரவாதிகள், மும்பையை சேர்ந்த பிரபல மதபோதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சால் கவரப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதையடுத்து, ஜாகிர் நாயக் நடத்தி வரும் சர்ச்சைக்குரிய, 'பீஸ் டிவி' சேனலுக்கு, வங்கதேச அரசு தடை விதித்தது. இதற்கிடையில், சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ள ஜாகிர் நாயக், நேற்று, மும்பை திரும்புவதாக திட்டமிட்டிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் திட்டத்தை மாற்றிய அவர், இந்தியா திரும்பும் பயணத்தை ரத்து செய்துள்ளார். dinamalar.com

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ஜாகிர் நாயக் விவகாரத்தில், புதிய திருப்பம் - பங்களாதேஷ் பத்திரிகை...!!
+=+=+=+=+=+=+=+=+=+=+

கடந்த வெள்ளிக்கிழமை
ஜாகிர் நாயக் அவர்கள்
தன் மீது எழுந்துள்ள
விமர்சனம் குறித்து
விளக்கம் அளித்து பேசியதை தொடர்ந்து
'டெய்லி ஸ்டார்' பத்திரிக்கை,

”ஜாகிர் நாயக் அப்பாவிகளை கொலை செய்யுமாறு தீவிரவாதிகளை தூண்டியதாக” நாங்கள் செய்தி வெளியிடவில்லை..!
ஒரு போதும் நாங்கள் அவ்வாறு கூறவில்லை..!
மேலும் டாகா சம்பவத்தில் ஈடப்பட்ட தீவிரவாதி
ஜாகிர் நாயக்கின்
பேச்சால் தான்
தூண்டப்பட்டான் எனவும் நாங்கள் செய்தி வெளியிடவில்லை என 10-07-2016
மறுப்பு செய்தி வெளியிடுட்டுள்ளது.

மேலும் மலேசியாவில்
ஜாகிர் நாயக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது
என தவறான செய்தியை
நாங்கள்
வெளியிட்டுவிட்டோம் என்பதையும்
டெய்லி ஸ்டார் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் மலேசியாவில்
ஜாகிர் நாயக் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் அமைச்சர்களை
சந்தித்துள்ளார் என்பதையும் உறுதி செய்து செய்தி
அவதூறு பரப்பிய இந்திய மீடியாக்களுக்கு
சம்பட்டை அடியாக
மறுப்பு செய்தியை நேற்று (10.07.2016)
வெளியிட்டுள்ளது.

In a Youtube speech on Friday, India-based Islamic preacher Dr Zakir Naik accused The Daily Star of sensationalising a report by saying that he was “responsible for inspiring one of the terrorists of the attack in Dhaka”.

The Daily Star categorically denies this allegation and wants to say it did not report that any terrorist was inspired by Zakir Naik to kill innocent people.

Source : http://www.thedailystar.net/dhaka-attack/the-daily-star-protests-dr-naiks-claims-1251064

இந்த டெய்லி ஸ்டார் பத்திரிக்கை தான்
டாகா சம்பவத்திற்கு
ஜாகிர் நாயக் தான்
காரணம் என செய்தி வெளியிட்டதாக
கூறி இந்தியா
மீடியாக்கள்
ஒரு வாரகாலமாக
இதையே தலைப்பு
செய்தியாக
முழங்கி ஒளிரப்பிக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் எந்த
பத்திரிக்கையை ஆதாரம் காட்டினார்களோ
அதே பத்திரிகை
நாங்கள் அவ்வாறு
கூறவில்லை என மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளது,

தற்போது
இந்திய மீடியாக்கள்
என்ன சொல்ல
போகின்றன..?

வாய்கிழிய பேசிய,
அர்னாப்
தனது முகத்தை
எங்கு வைக்க
போகின்றார்..??

அவர் மீது
விசாரனை அமைத்த
இந்திய பாஜக அரசு
எந்த மூஞ்சியை
வைத்துக் கொண்டு
மக்களை
சந்திக்க போகின்றது..?

இதை அனைவருக்கும்
கொண்டு செல்லுங்கள்...!!

******************************