ஜாகிர் நாயக்கின் போதனைகளை ஒளிபரப்பும் ’பீஸ் டிவி’ சட்டவிரோதமாக செயல்படுகிறது என்ற தகவலும் வெளியாகியது.
சர்ச்சைக்குரிய
வகையில் பேசிவரும் ஜாகிர் நாயக்கிற்கு இங்கிலாந்து, கனடாவில் தடை
விதிக்கப்பட்டு உள்ளது. மலேசியாவில் தடை விதிக்கப்பட்ட 16 இஸ்லாமிய
அறிஞர்களில் நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. வங்காளதேச உள்துறை
அமைச்சகமும் ஜாகிர் நாயக்கின் போதனை வீடியோக்களை ஆய்வு செய்தது. வங்காளதேச
பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை இதனை ஆய்வு செய்வதாக அந்நாட்டு உள்துறை
அமைச்சகம் தெரிவித்தது.
இப்போது ஜாகிர் நாயக்கின்
போதனைகளை ஒளிபரப்பும் ’பீஸ் டிவி’ சேனலுக்கு வங்காளதேசம் தடை விதித்து
உள்ளது. வங்காளதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் தொடர்பாக
அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் ’பீஸ் டிவி’ க்கு தடை விதிப்பது
என்று முடிவு எடுக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் உயர்மட்ட பாதுகாப்பு
அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். மசூதிகளில் வெள்ளிக்கிழமை அன்று தொழுகை
நடைபெறும் போது நடத்தப்படும் சொற்பொழிவுகளை கண்காணிக்கவும் உத்தரவு
பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே வங்காளதேசத்தில் ஜாகிர் நாயக்கின் பண
பரிவர்த்தனையையும் வங்காளதேச அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக