வியாழன், 7 ஜனவரி, 2016

வட கொரியா ஹைட்ரஜன் குண்டை வெடிக்க வைத்தது...மிகவும் சக்தி வாய்ந்த..

பியாங்யாங்: ஹைட்ரஜன் அணுகுண்டை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது. இந்த சோதனை காரணமாகவே, நிலநடுக்கம் போன்ற அதிர்வை வட கொரிய மக்கள் உணர்ந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வடகொரியாவின் இந்த சோதனைக்கு சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும், ஐநா,வும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆசிய நாடான வடகொரியாவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகி இருந்தது. வடகொரியாவின் அணுஆயுத சோதனை மையத்திற்கு அருகே இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்பட்டது. சீனர்கள்தான் இவர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் தொழில் நுணுக்கத்தை கொடுத்தவர்கள்... எல்லாம் காப்பி அடிக்கும் கூட்டம்... சொந்த மூளையை வைத்து தானாக செய்யத்தெரியாது...
ஆனால் இது இயற்கையாக ஏற்பட்ட நிலஅதிர்வு இல்லை என கூறிய அமெரிக்க ஆய்வாளர்கள், வடகொரியா மீண்டும் அணுஆயுத சோதனை நடத்தி இருக்கலாம் எனவும், அதுனால் இந்த அதிர்வு உணரப்பட்டதாகவும் சந்தேகம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், அணுகுண்டை விட சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டை பூமிக்கு அடியில் வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வடகொரியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கு முன்பு வடகொரியா சோதித்த அணுகுண்டுகளை விட ஹைட்ரஜன் குண்டு சக்தி வாய்ந்தது. அமெரிக்க அச்சுறுத்தலை எதிர்கொள்ள தங்களுக்கு அணு ஆயுதம் தேவைப்படுவதாக வடகொரியா ஏற்கனவே கூறி வந்தது.
இதன் காரணமாக வடகொரியா நடத்திய ரகசிய ஹைட்ரஜ் குண்டு சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு குரல் எழுப்பி உள்ளன. dinamalar.com

வடகொரியா, 2006ம் ஆண்டு முதாலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதன்பிறகு, 2013 பிப்ரவரியில் மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தியது. இதற்காக உலக நாடுகளின் கண்டனத்தை எதிர்கொண்டது.
இந்நிலையில் வடகொரியா தற்போது நடத்தி இருக்

கருத்துகள் இல்லை: