செவ்வாய், 15 செப்டம்பர், 2015

குவைத்தில் கொன்றுவிடுவார்கள்! எப்படியாவது காப்பாத்துங்க! குவைத்தில் தேனி வாலிபர் குமுறல்


தேனி மாவட்டம் கம்பம் கோம்பை சாலையைச் சேர்ந்த இமாம்ஷா மகன் சதாம் உசேன் (வயது 25). குவைத்தில் டிரைவர் வேலைக்கு கடந்த ஆகஸ்ட் – 2ந் தேதி சென்றார். இதற்காக கும்பகோணம் சோலைபுரத்தைச் சேர்ந்த காஜாமைதீன் என்பவரிடம் ரூ.1 லட்சம் கொடுத்து வேலைக்கு சென்றார். டிரைவர் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சதாம் உசேன் அங்கு 65 ஒட்டகங்களை மேய்க்கும் பணியை செய்யுமாறு துன்புறுத்தப்பட்டார். அந்த வேலையை செய்ய மறுத்ததால் அவருக்கு 2 நாட்கள் உணவு மறுக்கப்பட்டது. தனது நிலை குறித்து சதாம் உசேன் நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்தார். அதில் எப்படியாவது தன்னை காப்பாற்றுங்கள், கொன்றுவிடுவார்கள் என அவர் தெரிவிக்கிறார். இந்த வாட்ஸ் அப் வீடியோவை பார்த்து அதிர்ச்சியான யாஸ்லின்பானு தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் தனது கணவரை காப்பாற்றி, அவர் திரும்பி வர உதவி செய்யுமாறு மனு அளித்துள்ளார். இதேபோல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேசிடமும் புகார் அளித்துள்ளார். அதில் குவைத்தில் கொத்தடிமையாக உள்ள தனது கணவரை மீட்டுத் தர வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்டு விரைவில் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது nakkheeran.in

கருத்துகள் இல்லை: