புதன், 16 செப்டம்பர், 2015

2000 இந்திய VIP களுக்கு இனி அமெரிக்க விமான நிலைய சலுகைகள் வழங்கப்படும்

புதுடில்லி: நம் நாட்டின் வி.ஐ.பி.,க்கள், அமெரிக்க விமான நிலையங்களில், பாதுகாப்பு சோதனையில்லாமல் செல்வதற்காக, 2,000 வி.ஐ.பி.,கள் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்படுகிறது.இங்கிருந்து, அமெரிக்கா செல்லும் வி.ஐ.பி.,கள், அந்நாட்டு விமான நிலையங்களில், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து, பாதுகாப்பு சோதனைகளை முடிக்க வேண்டி உள்ளது.
சிலரை, சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்துவதும், நாள் முழுக்க அவர்களை காத்திருக்க வைப்பதும் நடக்கிறது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாம் மற்றும் நடிகர் ஷாரூக்கான் ஆகியோரிடம், அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் நடத்திய விசாரணை பெரும் சர்ச்சைக்குள்ளானது.அதேபோல, நடிகர்கள் அமீர்கான், ஜான் ஆப்ரஹாம், முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரசை சேர்ந்தவருமான பிரபுல் படேல் மற்றும் முன்னாள் துாதரக அதிகாரியானஹர்தீப் புரி ஆகியோர், விசாரணை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்டனர்.  சினிமா நடிகர்கள், அரசியல்வியாதிகள், மற்றும் இந்திய தொழில் அதிபர்கள்  எல்லாம் யோக்கியர்கள். ஆனால் வயிற்றுப்பிழைப்புக்காக குடும்ப மேம்பாட்டிற்காக கல்விக்காக வெளிநாடு செல்லும் மேற்சொள்ளப்பட்டிருக்கும் நபர்களுக்கு அங்கீகாரம் கொடுத்த சாதாரண இந்திய குடிமக்கள் பலமணி நேரம் நின்று தான் செல்ல வேண்டும்.  அம்பானி ,அதானி ,பிரதிபா பட்டீல் ஷாருக் அமிதாப்  எல்லாம் நாட்டுக்கு ரொம்ப சேவை செஞ்சவுங்க பாருங்க?  வாழ்க  கூத்தாடிகள், வளர்க பாஜகா அரசியல்வியாதிகள்,,


இதையடுத்து, கடந்த மாதம், டில்லியில் நடந்த, இரு நாட்டு அதிகாரிகளின் கூட்டத்தில், 'குளோபல் என்ட்ரீ புரோகிராம்' என்ற திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இத்திட்டத்தின்படி, அமெரிக்காவிடம் தரப்படும், வி.ஐ.பி.,கள் பட்டியலில் இடம்பெற்றவர்கள், அந்நாட்டிற்கு செல்லும்போது, சிறப்பு சலுகையாக, அவர்களிடம் விசாரணை நடத்தப்படாது.

இதற்காக, நாட்டின் 2,000 வி.ஐ.பி.,க்களின் பட்டியலை மத்திய அரசு தயாரித்து வருகிறது.
இதில், முதல் கட்டமாக, முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி, நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ஷாரூக்கான் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன தினமலர்.com

கருத்துகள் இல்லை: