ஞாயிறு, 20 ஏப்ரல், 2014

விஜய்: ரசிகர்கள் என்னுடன் இருக்கும் வரைக்கும்.! பணம் பண்ணுவேன் ?

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான ஜில்லா திரைப்படம் நேற்று(18.04.14) 100 நாட்களைக் கண்டது. ஜில்லா திரைப்படத்தின் 100-வது நாளை ஆல்பர்ட் தியேட்டரில் கொண்டாடினர் ஜில்லா படக்குழுவினர். விழாவில் ஆர்.பி.சௌத்ரி, விஜய், ஜீவா, வைரமுத்து, இயக்குனர் நேசன், சூரி உட்பட பலர் கலந்துகொண்டனர் படக்குழுவினருக்கு நினைவுப் பரிசு வழங்கிவிட்டு பேசிய போது விஜய் “ஜில்லா டீம் கஷ்டப்பட்டு உழைத்ததால் கிடைத்த வெற்றி தான் இந்த 100-வது நாள். ஜில்லாவுக்கு முன்பு ஒரு படம் வெளியானது. அந்த படம்(தலைவா) பல பிரச்சனைகளை சந்தித்தாலும், திரையரங்குகளில் திரையிட்ட உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இந்த சமயத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். சினிமா ஒரு கனவுத்தொழிற்சாலை. கனவுத் தொழிற்சலையின் கண்கள் ரசிகர்கள். அந்த கண்கள் படங்களைப் பார்க்கவில்லையென்றால் இந்த தொழிற்சாலைகள் இயங்காது. அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர்களுக்கே சம்பளம் கொடுக்கும் கண்ணுக்குத் தெரியாத முதலாளிகள் ரசிகர்கள். எனது ஒவ்வொரு படம் ரிலீஸாகும் போதும் என்னைவிட ஆர்வமாகவும், என்னைவிட வெறியாகவும் இருக்கும் ரசிகர்கள் என்னுடன் இருக்கும் வரைக்கும்.... சரி விடுங்க” என்று சொல்லி ஒரு புதிருடன் நிறுத்திவிட்டார். பணம் பண்ணுவேன் என்சாய்  பண்ணுவேன் வேறென்ன புடுங்குவேன் ?
பேசிய போது “சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஜீவா மேலும் பல படங்களை தயாரிக்கவேண்டும். எதிர்காலத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பும் தரவேண்டும்” என்று கூறினார்.  cinema.nakkheeran.in/

கருத்துகள் இல்லை: