இதனால் சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையின் 2 பக்கமும் மஞ்சள், சிவப்பு, வெள்ளை என வண்ணங்களால் நிரம்பிய மலர் வனம் விவசாயிகளின் கடும் உழைப்புக்கு சான்றாக காட்சி தருகிறது. காடையாம்பட்டி அருகேயுள்ள வேப்பிலை ஊராட்சி செக்காரப்பட்டி பகுதியில் போதிய மழை பொழிவு இல்லாத காரணத்தால் கிணறுகளில் போதிய நீர் இல்லை. இப்பகுதியை சேர்ந்த விவசாயி சித்தப்பன் தன்னுடைய சாமந்தி பூந்தோட்டத்தில் சொட்டு நீர்ப்பாசனத்தை பயன்படுத்தியுள்ளார்.
விவசாயி சித்தப்பன் கூறுகையில், வழக்கமான முறைப்படி விவசாயத்தில் ஈடுபட்டால் 2 சென்ட் பரப்பிலான நிலத்துக்கு மட்டும்தான் என் கிணற்று நீரை பயன்படுத்த முடியும். சொட்டு நீர்ப் பாசனத்தால் 10 சென்ட் பரப்பில் சாமந்தி சாகுபடி செய்ய முடிந்துள்ளது என்றார். காடையாம்பட்டியில் இருந்து கோவை, பெங்களூர், திருப்பூர், சேலம் பகுதிகளுக்கு தினமும் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. நல்ல மணம் தரும் பூக்களை உற்பத்தி செய்த போதிலும், தங்களின் வாழ்க்கை முறை உதிர்ந்த பூக்களை போலவே உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். விளைச்சல் அதிகரித்துள்ளதால் சாமந்தி பூக்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. சென்ட் தொழிற்சாலை அமைத் தால் உரிய விலை கிடைப்பதுடன், எங்களது வாழ்வும் செழிக்கும் என்கின்றனர் சாமந்தி விவசாயிகள். - .tamilmurasu.org
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக