
(சீனக்காரர்கள், குறிப்பாக சீனப் பெண்கள் முகத்தை சாதாரணமாக வைத்திருந்தாலும்.. புன்னகைப்பது போலவேதான் எப்போதும் தோன்றும்.. அவர்களுடைய முக அமைப்பே அப்படிதானா.. எல்லோருக்கும் அப்படிதான் தோன்றுமா?)
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய இரண்டுபேர்தான் பாவம் செந்தமிழில் பேச ரொம்பவே சிரமப்பட்டார்கள். பாவமாக இருந்தது. அதை அவர்களே ''அய்யோ சாமீ முடியல'' என்று கடைசியில் ஒப்புக்கொண்டனர். ஆனால் சீனப்பெண்ணான கலைமகள் ஆங்கிலகலப்பின்றி பொறுமையாக தமிழில்மட்டுமே நிகழ்ச்சி முழுக்கப் பேசினார். வருங்காலத்தில் நல்ல தமிழை இப்படி யாராவது வெளிநாட்டிலிருந்து வருகிறவர்கள் ஃபாரினர்ஸ் பேசிக்கேட்டால்தான் உண்டு என்று ஆகிவிடும் போல்தான் இருக்கிறது. இது நிச்சயம் வருத்தப்பட வேண்டிய ஒரு விஷயம்.
சீனப்பெண்ணான கலைமகளின் இயற்பெயர் சாவோ ஜியாங். தமிழ்மேல் பற்றுக்கொண்ட இவர் தனது பெயரை கலைமகள் என மாற்றிக்கொண்டாராம். சீனசெய்தி ஊடக பல்கலைகழகத்தில் ஆர்வத்தோடு இணைந்து தமிழ் கற்றுக்கொண்டு , சீனவானொலியின் தமிழ்ப்பிரிவில் கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார்!
''சீனாவில் இன்ப உலா'' என்கிற நூலையும் இவர் தமிழில் எழுதி வெளியிட்டுள்ளார். சீனாவை சேர்ந்த ஒருவர் தமிழில் எழுதி வெளியிட்ட முதல் நூலாக இது இருக்கிறது. இந்நூலில் சீனாவின் பல சிறப்புகளை குறிப்பிட்டு எழுதியிருக்கிறாராம். நான் வாசித்ததில்லை. சென்ற ஆண்டே வெளியான இந்நூலை வாசித்தவர்கள் பெய்ஜீங் நகரம் குறித்த பல அரியதகவல்கள் கொண்ட நூல் என்று சொல்லக்கேட்டிருக்கேன். இனிமேல்தான் வாங்கி படிக்கவேண்டும்.
ஆங்கிலகலப்பின்றி நிகழ்ச்சிகளை நடத்தவேண்டும் என்பதை சீனவானொலி ஒரு கொள்கையாக வைத்திருப்பதாக பேசும்போது குறிப்பிட்டார் கலைமகள். நம்மூரில் அப்படி செய்வது மக்கள் தொலைகாட்சி மட்டும்தான் என்று நினைக்கிறேன். ஆனால் அது எல்லா நேரங்களிலும் சாத்தியமா குறிப்பாக செய்தி சார்ந்த நிகழ்ச்சிகளில் சாத்தியமாவென்பது தெரியவில்லை. ஆனால் நம்மூர் மொழியை சைனாக்கார பெண்ணொருவரின் குரலில் கேட்கவும் குஷியாகத்தான் இருக்கிறது!
நிகழ்ச்சியை பார்க்க தவறியவர்கள் இங்கே பார்க்கலாம், அதிலும் அந்தப்பெண் ''சொர்க்கமே என்றாலும் நம்மூரை போலவருமா..'' பாடலை பாடுவதை தவறவிடவேண்டாம்! செம ரகளையான நிகழ்ச்சி. thishaonline.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக