புதன், 5 ஜூன், 2013

Vijya TV புகழ் பவர் ஸ்டார் ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி!!

பவர் ஸ்டார் போலீஸ் பாதுகாப்புடன் டில்லி பயணம்! ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி!!

Viruvirupu,ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.5 கோடி கமிஷன் பெற்றுக் கொண்டு டில்லி தொழில் அதிபரை ஏமாற்றியதாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.
கோடிக்கணக்கில் கடன் வாங்கித்தர லட்சக்கணக்கில் கமிஷன் பெற்றுக் கொண்டு ஏமாற்றினார் என்பது பவர் ஸ்டார் சீனிவாசன் மீது லோக்கலில் உள்ள புகார். ஆந்திரா தொழிலதிபர் ஒருவருக்கு 20 கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.50 லட்சம் கமிஷன் பெற்றுக் கொண்டு ஏமாற்றிய குற்றச்சாட்டின் பேரில் ஏப்ரல் 26-ம் தேதி பவர்ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டார்.

இப்படி லட்சக் கணக்கில் காசு பார்த்ததாக இங்கே புகார்கள் இருக்க, திடீரென 1000 கோடி சமாச்சாரம் கிளம்பி, பவருக்கு நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், சீனிவாசன் மீது 6 வழக்குகள் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ள நிலையில், டில்லி போலீசார் வந்து பவர் சீனிவாசனை அழைத்துச் சென்றுள்ளனர்.
புளு கோஸ் கட்டமைப்பு நிறுவனம் நடத்தி வந்த திலீப் பத்வானி என்பவர் சீனிவாசனை 1,000 கோடி ரூபாய் கடன் கேட்டுள்ளார். அவரிடம் 5 கோடி ரூபாய் கமிஷன் தொகை வாங்கியுள்ளார் சீனிவாசன். ஆனால் வழக்கம் போல திலிப்பையும் பவர் ஏமாற்றிவிட்டார்.
அதையடுத்து, டில்லி போலீசில் புகார் தெரிவித்தார் திலீப். இது தொடர்பாக விசாரிப்பதற்காக டில்லி போலீசார் சீனிவாசனை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபின்னர் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.
ஆமா.. நெசமாலுமே பவர் ஸ்டார் ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவார் என்று இந்த டில்லிவாலா நம்பினாரா?
viruvirupu.com

கருத்துகள் இல்லை: