செவ்வாய், 4 ஜூன், 2013

போட்டுத் தள்ளுங்க! மாவோயிஸ்ட்களுக்கு ரகசிய தகவல் கொடுத்த நான்கு காங்கிரஸ்காரர்கள்!

சத்தீஸ்கரில் அண்மையில் மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில் காங்கிரஸ் தலைவர்கள் 4 பேருக்கு தொடர்பு இருப்பதாக இவ்வழக்கை விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு என்.ஐ.ஏ. (NIA – National Investigation Agency) தெரிவித்துள்ளது.
கடந்த மே 25-ம் தேதியன்று, சத்தீஸ்கரில் காங்கிரஸ் பிரச்சார வாகன பேரணி மீது மாவோயிஸ்ட்கள் நடத்திய தாக்குதலில், 28 பேர் பலியானார்கள்.
அன்றைய தினம், நான்கு முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், நக்சலைட்டு அமைப்புடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள்தான், காங்கிரஸ் பேரணி பாதை மாறி வேறு வழியில் செல்வது குறித்து நக்சலைட்டுகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
காங்கிரஸ் தலைவர்களின் தொலைபேசி அழைப்புகளை விசாரித்ததில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அடடா.. உள்கட்சி விவகாரம்தானா இது! கொலை வரைக்கும் போயிருக்கிறார்களே காங்கிரஸ்காரர்கள்!
viruvirupu.com

கருத்துகள் இல்லை: