திங்கள், 3 ஜூன், 2013

சூப்பர் சிங்கரில் மீண்டும் வேதாளங்கள் வந்து விட்டன உன்னி சுஜாதா ஸ்ரீகாந்த்

மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் உன்னிகிருஷ்ணன் சுஜாதா ஸ்ரீ காந் ஆகிய மூன்று நடுவர்களும் ஆஜாராகி விட்டனர்,  நம்ம தலை எழுத்து
 இவர்களை ஏன்தான் மீண்டும் மீண்டும் சுப்பர் சிங்கர் நிகழ்சிகளுக்கு அழைக்கிறார்களோ தெரியவில்லை .
இந்த மூன்று பெரும் சென்ற முறை சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செய்த அலப்பறை மறக்க கூடியதா?
சாய் சரண் தோற்க வேண்டும் என்று தலையால் நின்று பார்த்தார்கள்  , அது முடியாமல் போகவே அவரது வெற்றியை கொச்சை படுத்தினார்கள் ,
இவர்களை மன்னிக்கவே முடியாது ,
இவர்கள் தூக்கி பிடித்த பூஜாவும் சத்யா பிரகாசும் நான்காவது மூன்றாவது இடங்களையே பிடிக்க முடிந்தது , அது மக்களின் வாக்கு அடிப்படையில் நிகழ்ந்தது ,
அதை ஏற்று கொள்ளகூடிய பண்பு இல்லாமல் மகா மட்ட ரகமாக நடந்து கொண்டார்கள். தமிழ் ரசிகர்களின் அளப்பெரிய வாக்கினையே கேலியாக்கினர் , போதாக்குறைக்கு கண்ணீர் வேறு சிந்து டிராமாவும் போட்டனர்
இவர்களை நடுவர்களாக கொண்டு நடத்தப்படும் நிகழ்ச்சியை பார்ப்பது சுத்த வேஸ்ட் . 

கருத்துகள் இல்லை: