திங்கள், 3 ஜூன், 2013

டெல்லியில் மீண்டும் மீண்டும் பாலியல் வன்முறைகள் தொடர்கிறது

டெல்லியில் நங்க்லோய் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், நேற்று
இரவு சாப்பிட்ட பின் நடைபயிற்சி சென்றார். அப்போது ஒரு காரில் வந்த 3 பேர் அந்த பெண்ணை கடத்திச் சென்று, காரிலேயே வைத்து >கற்பழித்தனர். இன்று காலை அந்த பெண்ணை அவரது வீட்டின் அருகே வீசிவிட்டு சென்று விட்டனர். இது தொடர்பாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் அன்வர் (வயது 30), சந்தீப் (32), அனீஷ் (35) என்ற 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். அந்த பெண்ணுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர் கற்பழிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தன்னை கடத்திச் சென்று கற்பழித்த நபர்கள் யார் என தனக்கு தெரியாது என்று அந்த பெண் கூறியதாகவும்போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: