திங்கள், 5 டிசம்பர், 2011

Dirty Picture சில்க் ஸ்மிதா படத்துக்கு பாகிஸ்தானில் தடை!


The Dirty Picture Movie
டெல்லி: தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள த டர்டி பிக்சர் படத்தை திரையிட பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
வித்யா பாலன், நஸ்ருதீன் ஷா நடித்துள்ள இந்தப் படம் இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார்.
பாகிஸ்தானில் இந்திப் படங்களுக்கு ஏக மவுசு. குறிப்பாக வித்யா பாலனுக்கு பாகிஸ்தானில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். எனவே தி டர்ட்டி பிக்சர் படத்தை 50 அரங்குகளில் வெளியிட திட்டமிட்டனர்.

ஆனால் படத்தை பார்த்த பாகிஸ்தான் தணிக்கை அதிகாரிகள் ஆபாச காட்சிகள் அதிகம் இருப்பதாக கூறி திரையிட தடை விதித்தனர்.

வித்யா பாலனுடன் நசுருதீன் ஷா, இம்ரான் ஹாஸ்மி, துச்சார் கபூர் ஆகியோர் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் மிகவும் ஆபாசமாக படமாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதனால் பாகிஸ்தானில் இந்தப் படம் வெளியாகவில்லை.

பெரிய வெற்றி

இதற்கிடையே, தி டர்ட்டி பிக்சர் இந்திய பாக்ஸ் ஆபீஸில் சூப்பர் ஹிட் ஆகியிருப்பதாக வட இந்திய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை: