செவ்வாய், 25 அக்டோபர், 2011

தலைத் தீபாவளி பெண் உயிரோடு எரித்துக் கொலை


புதுப்பெண் உயிரோடு எரித்துக் கொலை
தலைத் தீபாவளிக்கு பெற்றோர் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று கூறிய புது பெண் அவரது தாய் கண் முன்னே உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.

கடையநல்லூர் புலவர் தெருவைச் சேர்ந்த மூக்கையா மகன் சண்முகவேல் (25). கூலி தொழி லாளி. இவருக்கும் சிவகிரி வடக்குத் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் முனீஸ்வரி (21) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இதற்கிடையில் கண வன், மனைவியி டையே கருத்து வேறுபாடு காரண மாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது. திருமணத்தின் போது முனீஸ்வரிக்கு அவரது பெற்றோர் கொடுத்த சீர்வரிசை போதாது என்று சண்முகவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் அவரை கொடுமைப்படுத்தினர்.
இந்நிலையில் தலைத் தீபாவளிக்கு தனது மகள் மற்றும் மருமகனை வீட் டிற்கு அழைத்துச் செல்வதற்காக முனீஸ்வரியின் தாய் பாஞ்சாலி நேற்று கடையநல்லூர் வந்தார்.
அப்போது சண்முகவேல் அவருடன் செல்ல மறுத்ததுடன், மனைவியையும் போகக்கூடாது என்று கூறினார். ஆனால் அவர் தாயுடன் செல்வதாக கூறி னார். இதனால் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: