வெள்ளி, 28 அக்டோபர், 2011

மகாராணி தலைமையில் மாநாடு கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது!

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இன்று அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில்
பிரிட்டிஷ் மகராணி இரண்டாவது எலிசபத் தலைமையில்கோலாகலமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

54 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கேற்கpன்ற இந்த மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையின் சார்பில் கலந்துகொள்கிறார்.
இம்மாநாட்டில் சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 3000 ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்பதுடன் இன்றும் நாளையும் இருநாள் நிகழ்வாக இம்மாநாடு நடைபெறவுள்ளது.பொதுநலவாய நாடுகளின் அரச தலை வர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைத் தூதுக் குழுவினர் கடந்த 24ஆம் திகதி அவுஸ்திரேலியாவுக்குப் பயணமாயினர். இக்குழுவில் ஜனாதிபதியின் பாரியார் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ-வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ்- பாராளுமன்ற உறுப்பினர் சச்சின் வாஸ் குணவர்தன- ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த உலகத் தலைவர்களை அவூஸ்திரேலிய ஆதி வாசிகள் வரவேற்றனர்.

மாநாட்டின் ஆரம்ப உரையூம் ஆதி வாசிகளால் நிகழ்த்தப்பட்டதோடு அவர்கள் பங்குபற்றி கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
யுத்த காயங்களுக்கு மருந்து – ஜனாதிபதி!
யுத்த பாதிப்புக்களின் காயங்களை ஆற்றும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று வழங்கிய செவ்வி ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யுத்ததின் பின்னர், அதிகமான முன்னாள் புலிகளின் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு, சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இலங்கை மீது சர்வசே நாடுகள் போர்க்குற்றங்களை முன்வைத்து வருகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், தம்மால் நியமிக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையின் ஊடாக பதில் கிடைக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 2013ம் ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு, அனைவரையும் வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுநலவாய நாடுகளின் மாநாடு இன்று ஆரம்பமானது.

பிரித்தானிய மகாராணி எலிசபெத்தினால் இந்த மாநாடு உத்தியோகபூர்மாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்த மாநாட்டின் போது, உலக நாடுகளின் அபிவிருத்தி குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ, இன்றைய தினம் பங்களாதேஸ் பிரதமர் சேக் ஹசீனாவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் நாட்டின் பிரமர் ஷேக் ஹசீனாவை இன்று சந்தித்துள்ளார்!
பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கான உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பங்களாதேஷ் நாட்டின் பிரமர் ஷேக் ஹசீனாவை இன்று சந்தித்துள்ளார்.

பங்களாதேஷின் வெளியுறவுத்துறை அமைச்சர் திபுமோனி, இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் அட்மிரல் திசர சமரசிங்க ஆயியோரும் இச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு ஆரம்பம்!
மகாராணி இரண்டாம் எலிசபத் தலைமையில் பொதுநலவாய நாடுகளின் 22வது அரச தலைவர்களின் மாநாடு அவுஸ்திரேலியாவின் பேர்த்திலுள்ள மாநாட்டு மறறும் காட்சியக நிலையததில் இன்று ஆரம்பமாகின்றது. இம்மாநாடு இன்று முதல் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது.

புவி வெப்பமாதல் உயர்வடைந்து செல்லல். உணவு பராமரிப்பு முறையான அபிவிருத்தி இயற்கை மற்றும் வள அபிவிருத்தி உள்ளிட்ட பொதுநலவாய அமைப்பின் உறுப்பு நாடுகள் எதிர்நோக்கும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலான சலால்கள் தொடர்பில் இம்முறை மாநாட்டில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதுதவிர சர்வதேச நிதி நெருக்கடியிலிருந்து மீட்சி பெறல் மற்றும் காலநிலை மாற்றங்கள் போன்ற சர்வதேச சவால்களை வெற்றிகொள்வது குறித்தும் இந்த மாநாட்டின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

பொதுநலவாய நாடுகள் அமைபபில் அங்கம் வகிக்கும் 54 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரச தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் மூவாயிரம் பேர் இம்முறை பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: