புதன், 26 அக்டோபர், 2011

யாழில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை வேலைக்கு உட்படுத்துபவர் மீது சட்ட நடவடிக்கை

யாழ். குடாநாட்டில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்தினால் அந்தத் தொழில் நிலைய உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாணப் பிரதித் தொழில் ஆணையாளர் கே. கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் தெரிவிக்கையில், யாழ். குடாநாட்டில் சிறுவர்கள் வேலைக்காக சில வியாபார நிலையங்களில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றார்கள்.
இந்த நடைமுறை இன்னும் உள்ளதனால் இந்தச் செயல் சட்டத்திற்கு முரணானதாகக் கவனத்தில் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொழில் நிலைய உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இப்படியான ஒரு முறைப்பாடுகள் எமக்குக் கிடைக்கப்பெற்றால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: