திங்கள், 24 அக்டோபர், 2011

தமிழ் (புலி) கூட்டமைப்பு இருக்கும் வரையில் பிரச்சனைகளும் இருந்து கொண்டே இருக்கும்

அமெரிக்கா-கனடா செல்லும் சம்பந்தன், சேனாதி, சுரேஸ் போண்றவர்கள் இன்னும் பல நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட வண்ணமே இருப்பார்கள் எமது பிரச்சனையும் தொடர்ந்து கொண்டே இருக்கும்!

-எஸ்.எஸ்.கணேந்திரன்
பாராளுமண்ற ஆசனத்தினை மட்டுமே மையமாகக்கொண்டு செயற்படும் தமிழரசுக்கட்சி தமிழர் விடுதலைக்கூட்டணி ஆகியகட்சிகள் ஆரம்பகாலம் தொட்டே பிரதேச வேறுபாடு சாதிய வேறுபாடுகளுக்கு மிகமுக்கியம் கொடுத்து செயற்பட்டார்கள் சொல்லிலடங்காத இழப்புக்களை சந்தித்ததன் பின்னரும் அதனை தொடர்ந்துகொண்டே இருக்கிண்றார்கள் என்பதே மிகவும் வேதனையான விடயம்.
சில தினகளில் அமெரிக்கா மற்றும் கனடா போண்ற நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொள்ளவிருக்கும் கூட்டமைப்பினர் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகளையோ அல்லது வன்னி மாவட்ட பிரதிநிதிகளையோ முற்றாகத்தவிர்த்திருப்பதன் மூலம் அவர்களின் பிரதேச வேறுபாடுகளை மீண்டும் மக்கள் முன் தாமாகவே அம்பலப்ப்டுத்தியுள்ளனர்.

இவர்களின் விஜத்தினுடன் சம்பந்தமான எந்த விடயங்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெறும் பாராளுமண்ற உறுப்பினர்களுக்குகூட தெரியாத பரிதாப நிலையில் பல பாராளுமண்ற உறுப்பினர்கள் இருக்கிண்றார்கள்.
யாழ்ப்பாணத்தில் உள்ள சில புத்திஜீகள் அமெரிக்க விஜயத்திற்கு முன்னர் ஒரு கலந்துரையாடலை மேற்கொள்ள விடுத்த வேண்டுகாளையும் சம்பந்தன் நிராகரித்துவிட்டார்.
இந்த விஜயத்தின் முழு விடயத்தினையும் சம்பந்தன் சேனாதிராசா மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மூவர்மட்டுமே மிகவும் இரகசியமாக கையாளுகிறார்கள்.
இத்தகைய விடயமானது மிகவும் பலத்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் பாராளுமண்ற உறுப்பினர்களே அச்சம் தெரிவிக்கும் நிலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் வன்முறை தலைவிரித்தாடுகிண்றது.
நான் கு சுவர்களுக்குள் கொழும்பில் அரச பாதுகாப்புடன் கொழும்பிலும் இந்தியாவிலும் சுகபோக வாழ்க்கையை அனுபவித்த சம்பந்தன் மற்றும் சேனாதிராசா போண்றவர்களின் கீழ்த்தரமான அரசியல் வாழ்க்கையை அம்பலப்படுத்தவேண்டிய தேவை தற்சமயம் உள்ளது.
தந்தை செல்வா அமிர்தலிங்கம் ஆகியோரின் அரசியல் வாரிசு என மார்தட்டிக் கதை சொல்லும் சேனாதிராசா தமிழர் விடுதலைக் கூட்டணியில் சம்பளம் பெற்று வேலை செய்த ஒரே நபராவார்.இவரது மரியாதையை காக்கவேண்டும் என்பதற்காக இவரது சம்பளக் கணக்கு விபரங்களில் எஸ்.ராஜா எனப்பெய ரைப்போட்டு சேனாதியின் மானம் காத்தவரான ஆனந்தசங்கரியைக்கூட இந்த சேனாதியால் இலகுவாக மறக்கமுடியும் எண்றால் வாக்களித்த மக்களையோ கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளையோ உதறி எறிவதென்பது இவருக்கு எவ்வளவு சுலபம் என்பதை நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
அமிர்தலிங்கம் இறந்தவுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவியும் பாராளுமண்ற உறுப்பினர் பதவியும் தனக்கேதரவேண்டும் எண்று கட்சிக்குள் பிரச்சனையைக் கிழப்பி ஒருவாறு ஆனந்தசங்கரியின் விட்டுக்கொடுப்பால் பின் கதவால் முதற்தடவையாக பாராளுமண்றம் செண்ற சேனாதி மக்களுக்கு செய்த ஒரே நல்லவிடயம் தனது சகோதரியை தனது செயலாளர் எனக்கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச்செண்று குடியமர்த்தியது மட்டுமே.
நீலன் திருச்செல்வத்தின் இழப்பின் பின்னர் இரண்டாவது தடவையும் ஆனந்தசங்கரியின் விட்டுக்கொடுப்பால் மீண்டும் பி கதவால் பாராளுமண்றம் செண்றார்.
பின்னர் 2000ம் ஆண்டு தன்னையே கட்சியின் முதன்மை வேட்பாளராக அறிவிக்கவேண்டும் எண்று மீண்டும் கட்சிக்குள் பிரச்சனைகளை உருவாக்கி பலத்த பிரச்சாரங்களை மேற்கொண்டும் ஆனந்தசங்கரி அவர்கள் மிக அதிகப்படையான விருப்பு வாக்குகளைப் பெற்று யாழ்ப்பாண மாவட்டத்தில் முதலாவது பாராளுமண்ற உறுப்பினராக ஒருவாறு சேனாதியும் தெரிவானர்
இம்முறை அவர் மக்களுக்கு செய்த பெரிய விடயம் தரம்பாராமல் சமாதான நீதவான் சாண்றிதல்களை பலருக்கு பெற்றுக்கொடுத்தது மட்டுமே.
அடுத்த தேர்தலில் புலிகளே மக்களின் ஏகபிரதிநிதி தந்தையும் இல்லை தளபதி அமிரும் இல்லை தலைவர் சிவசிதம்பரமும் இல்லை பிரபாகரனே மக்களின் தலைவர் எனக் கூறி களம் இறங்கிய புலிகளால் உருவாக்கம் பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த நிலையில் கச்சேரிக்குள் அளுது ஒப்பாரிவைத்து பின்னர் இளம்பருதியின் ஆசீர்வாதத்தோடு சிறிகாந்தாவை பின் தள்ளி கடைசிப்பாராளுமண்ற உறுப்பினரானார்.
இவரைப்பற்றி சொல்வதானால் பல மாதங்கள் தேவைப்படும் . இத்தகைய போலி அரசியல் வாழ்க்கை நடாத்தும் சேனாதியின் தனிமனித வாழ்வும் மிகக்கேவலமானது என்பது தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்தவர்களுக்கு மிக நண்றாகத் தெரியும். இப்படையானவர்தான் இண்று மக்களின் பிரதிநிதியாக மக்களுக்கு ந்னமை தேட அமெரிக்காவுக்கு செல்கிண்றார்.இதுதான் தமிழ் மக்களின் தலைவிதி.
அடுத்து சம்பத்தன் பக்கம் செல்வோம்.எனக்குத் தெரிந்திராத ஒரு அதிர்ச்சித் தகவலை நன்பன் அரவிந்தனின் பின்னூடலினூடாக அறிந்தேன் . அதாவது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவிடம் தனது தங்கு விடுதிக்கு மதுபான அனுமதி கேட்டாராம் சம்பந்தன்.
அதில் எனக்கு சந்தேகமே வரவில்லை காரணம் இது எல்லாம் சம்பந்தனுக்கு கைவந்த கலை.இனப்பிரச்சனை இனப்பிரச்சனை என கூறிக்கொண்டு சந்திரிக்காவிடம் குண்டு துளைக்காத வாகனத்தை வாங்கி சுகபோக வாழ்வு கண்ட சம்பந்தன் தான் செயலாளர் நாயகமாக இருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்திற்கு வருவதெண்றாலே விசேட ஜனாதிபதி கொமாண்டோ படையை அனுப்பி அலுவலகத்தை சல்லடை போட்டு சோதனை செய்த பின்னரே வர் அலுவலகம் வருவது வழமை. அப்படையான இவர் தற்போதும் தானே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் என தேர்தல் ஆனையாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த பதவிகளை தக்கவைப்பது ஒண்றும் மக்கள் ப்ரச்சனைகள் தீர்ப்பதற்கோ உரிமை பெற்று தனி மானிலம் அமைப்பதற்கோ அல்ல மாறாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் வங்கிக் கணக்கிளுள்ள பணத்தில் ஒரு பகுதியையும் கட்சிகுச் சொந்தமான யாழ்ப்பாண அலுவலகத்தின் பெறுமதியில் ஒரு தொகையும் தனக்கும் சேனாதிக்கும் பெற்றுக்கொள்ளும் முயற்சிதானம் . அவ்வாறு ஆனந்தசங்கரி தலையாட்டினால் செயலாளர் பதவியை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிண்றாராம் மக்களின் பிரதிநிதி இரா.சம்பந்தனார்.
சந்திரிக்கா கொண்டுவந்த தீர்வுப்பொதியினை பாராளுமண்றத்தில் எதிர்க்கவேண்டும் எண்ற கோரிக்கை மத்திய செயற்குழுவால் அங்கீகரிக்கப்பட்டவேளை தான் கட்சித் தீர்மானத்தை கவனத்தில் எடுக்கப்போவதில்லை எனது விருப்பப்படியே வாக்களிப்பேன் எனக் கூறி கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த சம்பந்தனை வாசல் வரை செண்று வெளிநடப்புச்செய்வதை தவிர்த்து கட்சியின் நிலைப்பாட்டில் உறுதியாய் இருங்கள் எண்று தடுத்தவன் எண்ரவகையில் சம்பந்தனின் அரசியல் வாழ்வு எப்படியானது என்பதை நான் நங்உ அறிவேன்.
பாராளுமண்றத்தில் தீர்வுப்பொதியினை தமிழர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எதிர்த்தால் தோல்விகாணும் நிலை இருந்ததினால் சந்திரிகாவின் சலுகைகளை அனுபவித்து வந்த சம்பந்தனால் அந்த நடவடிக்கையை தாங்கமுடியாமல் சந்திரிக்காவை தொடர்பு கொண்டு பாராளுமண்றத்தில் வக்கெடுப்பு நடாத்துவதை தவிர்க்குமாறு கோரிக்கை விடுத்தார் இந்த மாபெரும் தமிழ்த் தலைவன் சம்பந்தன்.
தான் அங்கம் வகித்த கட்சியின் கொள்கையையோ அல்லது தீர்மானங்களையோ கடைப்பிடிக்கத்தெரியாத சம்பந்தனுக்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளை அரவணைத்து செல்லக்கூடியவர் என கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய அமைப்புக்கள் எதிர்பார்ப்பது அவர்களின் அறியாமையே காரணம்.
சம்பந்தனோ சேனாதியோ தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளும் அல்ல புனிதர்களும் அல்ல.தங்களுடைய குடும்பம் சுகபோக வாழ்வு சுவையாக இருந்தால் தமிழ் மக்களின் நிரந்தரமான பிரச்சனைகள் இவர்கள் இருக்கும் வரை தொடர்ந்து கொண்டெ இருக்கும்.
இவர்களின் இத்தகைய கேவலமான அரசியல் வாழ்வை அஸ்த்தமனமாகுவதெண்றால் அனைத்து முற்போக்கு சக்திகளையும் உள்வாங்கிய புதிய தரப்பை ஏற்ப்டுத்துவதன் மூலமே சிறுபாண்மை மக்களின் பிரச்சனைகள் முற்றுப்பெறும் . காலம் தாமதமானால் அமெரிக்கா கனடாசெல்லும் சம்பந்தன் சேனாதிராசா சுரேஸ் பிரேமச்சந்திரன் போண்றவர்கள் இன்னும் பல நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்ட வண்ணமே இருப்பார்கள். எமது பிரச்சனையும் தொடர்ந்துகொண்டே இருக்கும்

கருத்துகள் இல்லை: