சனி, 11 ஜூன், 2011

கனேடிய பொலிசார் முக்கியமாக தேடிவரும் தமிழ் இளைஞர்


கனேடிய பொலிஸாரால் அதிக முக்கியத்துவம் கொடுத்து தேடப்பட்டு வருகின்ற குற்றவாளிகளில் ஒருவராக இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவரும் இருந்து வருகின்றார்.

இவரின் பெயர் விஜயராஜா மாணிக்கவாசகர். 25 ஆம் திகதி ஜூன் மாதம் 1981 ஆம் ஆண்டு பிறந்தவர். அம்ரெத்தா சிங் என்கிற பெண்ணை 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி வீட்டுக்கு சென்று சுட்டுக் கொன்று இருக்கின்றார்.

அம்ரெத்தா சிங்கின் சகோதரர்கள் இருவருக்கும், இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இருவருக்கும் இடையில் கிளப் ஒன்றில் ஏற்பட்ட மோதலின் பின்னணியில் இக்கொலை இடம்பெற்று உள்ளது.

சகோதரர்களுடன் அம்ரெத்தா சிங் ரக்ஸி ஒன்றில் வீட்டுக்கு பூறப்பட்டு இருந்தார் சகபாடிகள் இருவர் சகிதம் மாணிக்கவாசகர் ரக்ஸியை பின்தொடர்ந்தார்.
அம்ரெத்தா சிங் ரக்ஸியில் இருந்து இறங்கியபோது துப்பாக்கியால் இரு தடவைகள் சுட்டார். இவருக்கு பிரபாகரன் என்று இன்னொரு பெயரும் உள்ளது. இவர் கனேடிய பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வருகின்றார்.

கருத்துகள் இல்லை: