சனி, 11 ஜூன், 2011

விரைவில் இலங்கை செல்கிறார் மன்மோகன்

கொழும்பு : இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் அழைப்பைஏற்று, பிரதமர் மன்மோகன் சிங், விரைவில்இலங்கை செல்லவுள்ளார்.தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன், வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோர், இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை நேற்றுசந்தித்தனர். அப்போது, ராஜபக்ஷேவின் கோரிக்கையை ஏற்று, விரைவில் இலங்கைக்கு வர, பிரதமர் மன்மோகன் சம்மதித்துள்ளதாக அவரிடம் தெரிவித்தனர். இதற்கான கடிதத்தையும் அவரிடம்கொடுத்தனர். இருந்தாலும், பிரதமர் எப்போது சுற்றுப் பயணம் செய்கிறார் என்பது பற்றிய உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

கருத்துகள் இல்லை: