சனி, 11 ஜூன், 2011

பத்மநாபாவை கொலைசெய்த அதே புலிகள்தான் ராஜீவ் காந்தி அவர்களின் கொலையிலும்

மேமாதம் கொடுஞ்செயல் ஏற்புநாளும் கொடுமை ஒழிக்கப்பட்ட நாளும் (3)
ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையின் பின்னர் பிரபல ஊடகவியலாளரும் அரசியல் விமர்சகருமான துக்ளக் ஆசிரியருமான சோ அவர்கள் ஒன்றைக் குறிப்பிட்டிருந்தார் அதாவது  ஈ.பி.ஆர்;எல்.எப் தலைவர் பத்மநாபாவின் கொலையாளிகளை தமிழக பொலிசார் கைது செய்திருந்தால் ராஜீவ் காந்தி அவர்கள் கொல்லப்பட்டிருக்கமாட்டார் என எழுதி இருந்தார். அவர் அப்படி எழுதியதற்கு காரணம் என்னவென்றால் ஈ.பி.ஆர்;எல்.எப் தலைவர் பத்மநாபாவை கொலைசெய்த அதே புலிகள்தான் ராஜீவ் காந்தி அவர்களின் கொலையிலும் சம்பந்தப்பட்டுள்ளமை சி.பி.ஐ விசாரணை மூலம் தெரியவந்தது.
இந்தக்கொலைகள் பற்றி இலண்டன் பி.பி.சி தமிழோசைக்கு செவ்வி அளித்த தமிழக மாநில பொலிஸ் ரைடக்டர் ஜெனரல் துரை அவர்கள் இந்தக்கொலைகள் ஈ.பி.ஆர்;எல்.எப் அமைப்பில் இருந்து முன்னர் பிரிந்து சென்ற இராணுவப்பிரிவுத்தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்தான்; நடைபெற்றிருக்கின்றது என்றும் இந்த மாநிலத்தைவிட்டு கொலையாளிகள் தப்பிப்போகாமல் பொலிஸ் கண்காணிப்பு போடப்பட்டிருப்பதாகவும் இவர்களைத்தேடி விரைவில் கைதுசெய்துவிடுவோம் எனவும் தனது செவ்வியில் கூறினார். இலங்கைப்பத்திரிகைகளிலும் இந்தச்செய்தி பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்தப்படுகொலைகளை இன்னொருவர் மீது பழியைப்போட்டு திசைதிருப்பும் நோக்கத்துடனும் கொலைசெய்த புலிகள் தப்பிச்செல்லும் வகையிலும் இவரது செவ்வி அமைந்திருந்தது. பின்னர் தேர்தலில் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியை கைப்பற்றியவுடன் கருணாநிதியின் அரசின் காலத்தில்  பலமோசடிகளில்; ஈடுபட்டிருந்த தமிழக மாநில பொலிஸ் ரைடக்டர் ஜெனரல் துரை அவர்கள் விசாரணைகளுக்கு பயந்து மதுவில் நஞ்சைக் கலந்து குடித்து தற்கொலை  செய்துகொண்டார். 
சி.பி.ஐயின் விசாரணையில் கைது செய்யப்பட்ட புலிகளின் உறுப்பினரான குண்டுசாந்தன் சின்னசாந்தன் கைதுசெய்யப்பட்டதை அடுத்து பலதகவல்கள் விசாரணையாளர்களுக்கு கிடைத்தது. அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை அடுத்து தமிழக தி.மு.க அமைச்சர் சுப்புலக்சுமி ஜெகதீசன் அவரது கணவர் ஜெகதீசன் வை.கோவின் சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர் ஈ.பி.ஆர்;எல்.எப் தலைவர்  பத்மநாபா கொலையில் தமிழக பொலிசாரை எந்த நடவடிக்கையையும் எடுக்கவேண்டாம் என்று ஆணையிட்ட தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் நாகராஐhவும் கைதுசெய்யப்பட்டார்.   
பத்மநாபாகொலையை வெற்றிகரமாக நடாத்தியதால் கொலையாளிகள் தழிழக அரசின் சிலரால் காப்பாற்றப்பட்டார்கள.;  அந்த துணிச்சலில்; பிரபாகரன் அதே தமிழகமண்ணில் வைத்து ராஜீவ் காந்தி அவர்களைப்  படுகொலை செய்தார். தமிழக அரசில் உள்ளவர்களின் ஆதரவு இருப்பதால் தமிழக மண்ணிலேயே வைத்து ராஜீவ் காந்தி அவர்களையும்  படுகொலை செய்துவிட்டு பத்மநாபாவின் கொலைiயில் தப்பியதுபோல இலகுவாகத் தப்பிவிடலாம் என்று பிரபாகரன் கனவு கண்டார். அந்த தற்கொலைத்தாக்குதல்தான் அவரது தலைவிதியை மட்டுமல்ல ஈழத்தமிழர்களின் தலைவிதியையும் மாற்றிவிட்டது.                                                     
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை புலிகள் இயக்கம் சிறிலங்கா அரசோடு கூட்டுச்சேர்ந்து தமிழர்களுக்கு என கிடைத்த மாகாண ஆட்சியை கலைக்கப்பண்ணி அதனைச்செயல் இழக்கவைத்தமைக்காக ஒட்டுமொத்த சிங்களமக்களும் புலிகளை அழித்த ஐனாதிபதி மகிந்த ராஐபக்சவுக்கு பாராட்டு தெரிவிப்பதைவிட  இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை அழித்தொழித்த வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சிலை எழுப்பி சிங்களமக்களின் தேசியவீரனான வரலாற்றில்  போற்றிப்புகழப்படவேண்டும்.  

ஏன் என்றால் தமிழ்மக்களுக்கு இலங்கை-இந்திய ஒப்பந்தம் போன்ற ஒரு தீர்வு இனிமேல் கிடைக்கப்போவதில்லை. அந்த ஓப்பந்தத்தில் எழுதிய சட்டங்களைவிட எழுதாத சட்டங்களை பல எவருக்கும் பாதிப்பில்லாமல் மெதுவாக செயல்படுத்தப்பட்டுக்கொண்டு வந்தன. அதற்கு பக்கபலமாக இந்திய அரசின் நேரடிமேற்பார்வையும் இந்திய இராணுவம் தமிழர் பிரதேசத்தில் நிலைகொண்டதும் தமிழ் மக்ககளுக்கு கிடைத்த அசுர பலமாகும் அன்று அந்த ஒப்பந்தத்தை வேலுப்பிள்ளை பிரபாகரன் எதிர்க்காமல் அல்லது ஒதுங்கிக்கூட இருந்திருந்தால் இன்று தமிழர்கள் ஐக்கிய இலங்கைக்குள் இணைந்த வடகிழக்கு மாகாணத்திற்குள் தமிழர்கள் ஒரு சுதந்திரமான வாழ்க்கையை அனுபவித்திருக்கலாம். இன்று இத்தனை அழிவுகளும் எம்மை நெருங்கியிருக்காது. பிரபாகரன் உட்பட புலிகள் இயக்கம் கூட உயிர் வாழ்ந்திருக்கும்.                                       

1987ம்ஆண்டு ஐனாதிபதி ஜே.ஆர் ஜேயவர்த்தனா அரசு வடமராட்சியில் இருந்து ஆரம்பித்து யாழ்ப்பாணத்தை கைப்பற்றும் இராணுவநடவடிக்கையை பாதுகாப்பு அமைச்சர் அத்துலக்முதலி ஒப்பரேசன் லிபரேசன் என்றுபெயரிட்டு மேற்குநாடுகளின்  பெரும்படைப்பலத்துடன் மேற்கொண்டார். அந்தநேரத்தில் அனைத்து தமிழ் இயக்களையும் புலிகள் அழித்தநிலையில் தாங்கள் தனியொரு இயக்கமாக இராணுவத்துடன் தாக்குப்பிடிக்க இயலாமல் தப்பிஒடினர் அச்சுவேலிவரை இராணுவம் முன்னேறிவிட்டது. வடமராட்சிமக்கள் இலட்சக்கணக்கில் அகதிகளாக வெளியேறினர்.   அந்தநேரத்தில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதையும் அவர்கள் இலட்சக்கணக்கில் அகதிகள் ஆக்கப்படுவதையும் பட்டினிபோட்டு பணியவைப்பதையும் மத்திய அரசு பார்த்துக்கொண்டிருக்காமல் செயலில் இறங்கவேண்டும் என தமிழகக்கட்சிகள் ஒற்றுமையாக குரல்கொடுத்தனர் பின்னர் புலிகள் சிங்கள அரசோடுசேர்ந்து தமிழர்களுக்கு கிடைக்க இருந்த உரிமையை செயல் இழக்கச் செய்தார்கள் என படுகொலைசெய்யப்பட்ட ஈ.பி.ஆர்;எல்.எப் தலைவர் பத்மநாபா அவர்களுக்கு செம்டம்பர்மாதம்- 1990ம் ஆண்டு தமிழகக்கட்சிகள் இணைந்து நடாத்திய அஞ்சலிக்கூட்டத்தில் இந்தியகம்யுனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன் அவர்கள் ஆற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரையையும் ஏனைய தலைவர்கள் ஆற்றிய உரைகளும் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டியது ஒன்றாகும்;. இவர்களின் உரையை
(Commomeration meeting for Eprlf  Leader Pathmanabha  Part-11YOUTUBE  இல் பார்க்கலாம்                
இந்தநேரத்தில் முக்கியமாக புலிகள் இராணுவத்துடன் தாக்குப்பிடிக்க இயலாமல் தப்பிஒடிய விடயத்தையும் குறிப்பிட்டாகவேண்டும் அந்தநேரத்தில் புலிகளின் மேல்மட்ட உறுப்பினர்; ஒருவர் தனது யாழ்நகரில் உள்ள உறவினர்களிடம் வந்து  இராணுவம் முன்னேறிக்கொண்டு வருகிறார்கள் உடனடியாக எல்லோரும் ஆயத்தமாக இருங்கள் வள்ளத்தில் இந்தியாவிற்கு போகவேண்டும் என்று கூறிவிட்டு அவசரஅவசரமாக சென்றுவிட்டார். (பின்னர் கடைசிகாலங்களில் புலிகளுடன் உட்பிரச்சினை காரணமாக ஒதுங்கி இருந்து வன்னியில் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு தற்போது சிறையில் இருக்கின்றார் என்று அறியமுடிகின்றது.) நானும் அந்த இ;டத்தில் நின்றபடியால் அவரின் மனநிலையையும் தன்னையும் தனது உறவினர்களையும் காப்பாற்றிக்கொண்டு தமிழ்மக்களை நடுவீதியில் விட்டுவிட்டு ஓடப்போகிறார் என்ற ஆத்திரத்தையும் எனக்குள் வரவழைத்தது. அதேநேரம் பல உறுப்பினர்கள் வள்ளங்களில் தப்பி இந்தியாவிற்கு ஒடிவிட்னர். பின்னர் இந்தியாவின் தலையீட்டினால் இவரும் இவரது உறவினர்களும் பாதுகாப்பாக தப்பியோடும் தந்திரோபாயத்தை கைவிட்டனர் பின்னர் மீண்டும் அவரை சந்திக்கும் நிலைஏற்பட்டது. அப்போது இந்திய அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் புலிகளுடன் உறவாக இருந்த காலகட்டம். அந்தபுலி இயக்க உறுப்பினரும் அடிக்கடி வந்துபோவார்.  தமிழ் மக்கள் மகிழ்ச்சியாக இருந்த காலமது. ஆப்போது இந்தபுலி உறுப்பினர் ஓரு குண்டைத்தூக்கிப்போட்டார் சனம் நினைக்குது பிரச்சினை முடிஞ்சுது எண்டு இனித்தான் பிரச்சினையே இருக்குது என்றாh.; நானும் இவர் உறவினர்களுக்கு விலாசக்கதை விடுகிறார் என்று மனதில் நினைத்து இனி என்ன பிரச்சினை வரப்போகுது என்று அப்படி ஒன்றும் நடக்க சந்தர்ப்பதே இல்லை என்று அடித்துக்கூறினேன். யாருக்கு தெரியும் தமிழ்மக்கள் ஒன்றை நினைக்க பிரபாகரன் வேறுஒன்றை நினைப்பார் என்று
 எல்லாவற்றையும் கூட்டிக்கழித்துப்பார்க்கும்போது இலங்கையில் இந்தியாவினால் அமைதி ஏற்படுவதையும் இலங்கைத்தமிழர் பிரச்சினை தீர்ந்து யுத்தமற்ற அழகியநாடாக இலங்கை பிரகாசிப்பதையும் விரும்பாத தீயசக்திகள் புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் மூலம் இந்திய அமைதிப்படையை ஆத்திரமூட்டி சண்டையைத்தொடங்கியிருக்கலாம். அன்ரன்பாலசிங்கம்தான் பலாலி இராணுவமுகாமில் உள்ள புலி உறுப்பினர்களான குமரப்பா புலேந்திரனுக்கு உணவுப்பார்சலுக்குள்  சயனைட்டை வைத்து கடத்தியவர் என்பதும் புலிகள்-இந்திய இராணுவகாலங்களில் கொழம்பில் உள்ள ஜந்துநட்சத்திர ஹோட்டலான கில்ட்டனில் உல்லாசமாக இருந்துகொண்டு புலிகள் சிறிலங்கா அரசின் இடைத்தரகராக செயல்பட்டவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

;இந்தியா அன்று உணவு அனுப்பி யுத்தத்தைநிறுத்தியபடியால்தான்; புலிகள் இயக்கமும் தமிழ்மக்களும் காப்பாற்றப்பட்டார்கள் இல்லாவிட்டால் இலட்சக்கணக்கான தமிழர்கள் உணவு இல்லாமலும் யுத்தத்தில் சிக்கியும் கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால் மேற்கத்தையநாடுகள் அன்று உரிமைக்காக போராடிய தமிழ்மக்களுக்கு ஆதரவளிக்காமல் இலங்கை அரசுக்கு உதவிசெய்தார்கள். உண்மையாகவே  அன்று  தமிழ்மக்கள்மேல் அக்கறை உடையவர்களாக இருந்திருந்தால் இந்தியாவுடன் இணைந்து இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழர்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவந்திருக்கலாம். யாழ்ப்பாணத்தில் தமிழ் எங்கள் மொழி இஸ்லாம் எங்கள் வழி என்று தமிழர்களுடன் ஒன்றாக வாழ்ந்த முஸ்லீம் மக்கள் புலிகளால் விரட்டியக்கப்பட்டபோது புலிகளுக்கு அழுத்தம் கொடுத்து நிறுத்தியிருக்கலாம்.   
    ;நூற்றுக்கணக்கான தமிழ்  விடுதலை இயக்க போராளிகளை, பொதுமக்களை படுகொலைசெய்து தமிழர்போராட்ட இயக்கங்களை அழித்து  அவர்களை டயர்போட்டுக்கொழுத்திய புலிகளின் தளபதி கிட்டுவிற்கு செங்கம்பள வரவேற்பு அளிப்பதுபோல பிரிட்டன் நாடு விசா கொடுத்து பிரிட்டனில் குடியேற்றினார்கள். ஆனால் அதே இயக்கத்தில் இருந்த தளபதி கருணா அம்மான் அகதி அந்தஸ்து கோரியபோது சிறையில் வைத்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்
வடமாகாணசபையை வழிநடத்திய ஈ.பி.ஆர்;எல்.எப் கட்சியையும் இந்தியஇராணுவத்தையும் பிரதமர் ராஜீவ்காந்தி்யையும் கொன்றுகுவித்த வேலுப்பிள்ளை பிரபாகரனை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. ஏனைய தமிழ்க்கட்சிகளோ அல்லது தமிழ்விடுதலை இயக்கங்களோ தவறுகள் செய்யாமல் இல்லை ஆனால் அந்தத்தவறுகளின் அடிப்படைகாரணம் கூட புலிகள் அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட படுகொலைகள்தான். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு என்று கூறிய யேசுக்கிறிஸ்துநாதர் கூட தேவாலயம் ஒன்றிக்கு சென்று இருந்தவேளையில் அந்த தேவாலயத்திற்குள்வைத்து  வியாபாரிகள் வியாபாரம் செய்வதைக்கண்டு என் தேவனின் ஆலயத்தை வியாபாரதலமாக பாவிக்கின்றீர்களா? என கொதிப்படைந்து  அவர்களை சவுக்கினால் அடித்து விரட்டியடித்தார் என கிறிஸ்தவர்களின் பைபிள் கூறுகின்றது.                                                                              
கொடுஞ்செயல் புரிந்தவர்களிற்கும் கொடுமையை ஒழிக்க முனைந்தவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் அநியாயமாக பலஆயிரக்கணக்கானவர்கள் பலியாகி இருக்கின்றார்கள். மேமாதம்-- 2009ம்ஆண்டுக்குப்  பின்னர் மேதகுவின் மறைவிற்கு பின்னர் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் யுவதிகள் தமிழ்மக்களின் உயிர்கள் உடமைகள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன.                                                                                      
அரசியல் தீர்வுக்கான அவசியம் எழுந்துள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறுவதுபோல புலிகளின் பிரச்சினை வேறு தமிழ்மக்களின் பிரச்சினை வேறு என்பதுபோல இப்போது புலிகளின் பிரச்சினை முடிந்துவிட்டது. தடைகள் அகற்றப்பட்டுவிட்டது. எனவே தமிழர்களின் பிரச்சினையை இனியும் தாமதப்படுத்தாமல் அரசாங்கம் தீர்க்கவேண்டும். புலிகளின் நிலைப்பாடு சம்பந்தமாக சரியான முடிவையும் புலிகள் ஒரு அழிவுசக்தி எனவும் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் எனவும்  கடந்த காலங்களில் துணிச்சலாக சொல்லிவந்த தமிழக முதல்வர் செல்வி nஐயலலிதாவும் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் என்பதில் அக்கறையுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அன்னை சோனியாவும் மத்திய அரசும் ஈழத்தமிழர்களின் எதிர்பார்ப்பை விரைவில் நிறைவேற்ற ஆவணசெய்யவேண்டும்.

கருத்துகள் இல்லை: