புதன், 8 ஜூன், 2011

ஜெயலலிதா: ஏழைகளுக்கு வழங்க தமிழகத்தில் தரிசு நிலங்கள் இல்லை

ஏழைகளுக்கு வழங்க நிலம் இல்லை: ஜெயலலிதா

ஏழைகளுக்கு வழங்க தமிழகத்தில் தரிசு நிலங்கள் இல்லை என முதல் அமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் பாலகிருஷ்ணன் உரைக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா பதில் அளித்து பேசுகையில்,
ஏழைகளுக்கு இலவசமாக இரண்டு ஏக்கர் நிலம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தரிசு நிலம் ஏதும் இல்லை. எம்ஜிஆர் ஆட்சியின்போதும், ஏற்கனவே நடந்த தமது ஆட்சியின்போதும் எல்லா தரிசு நிலங்களும் ஏழைகளுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக கூறினார்.

கருத்துகள் இல்லை: