செவ்வாய், 7 ஜூன், 2011

சிவசங்கரன் வாக்குமூலம் தயாநிதிக்கு நெருக்கடி ஏர்செல் நிறுவனம் கைமாறிய

புதுடில்லி : "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., வசம் , "ஏர்செல்' நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சிவசங்கரன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். "ஏர்செல் நிறுவனத்தை மலேசிய நிறுவனத்திற்கு விற்பதற்கு, தயாநிதி கொடுத்த நெருக்கடியே காரணம்' என்று, வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பகீர் வாக்குமூலத்தால், தயாநிதிக்கு நெருக்கடி முற்றுகிறது

காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி அரசில், கடந்த 2004-07ம் ஆண்டு, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தார். அந்த காலகட்டத்தில், "டிஷ்நெட் வயர்லெசு'க்கு (ஏர்செல்)14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. கடந்த, 2006ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் சிவசங்கரன், தான் நடத்தி வந்த ஏர்செல் கம்பெனிக்கு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு விண்ணப்பித்து இருந்தார். லைசென்ஸ் கோரி தாக்கல் செய்யப்பட்ட மொத்தம், 14 மனுக்கள், 2006ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி நிலவரப்படி நிலுவையில் இருந்துள்ளன. அவர் பலமுறை முயன்றும், லைசென்ஸ் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், தொலைத்தொடர்புத் துறையில் அன்னிய நிறுவனங்கள், 74 சதவீதம் வரை முதலீடு செய்யலாம் என்று, மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, சிவசங்கரனின் ஏர்செல் கம்பெனி, மலேசியாவைச் சேர்ந்த, "மேக்சிஸ்' கம்பெனிக்கு கைமாறியது.

ஏர்செல் நிறுவனமாக இருந்த போது கோரிய லைசென்ஸ், அது மலேசிய நிறுவனத்திற்கு கைமாறிய உடனேயே, 14 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டன. இதற்கு சன்மானமாக மேக்சிஸ், தனது சக கம்பெனிகள் மூலம், "சன் டைரக்ட்' கம்பெனியில், முதலீடு செய்தது.இந்த, "சன் டைரக்ட்' நிறுவனம், வீடுகளுக்கு நேரடி, "டிவி' ஒளிபரப்பு செய்யும், "டிடிஎச்' நிறுவனம். தயாநிதியின் சகோதரர் கலாநிதி நடத்தும், "சன் டிவி' குழுமத்தின் ஒரு அங்கம். இதனால் பாதிக்கப்பட்ட சிவசங்கரன், சி.பி.ஐ.,யில் புகார் தெரிவித்தார்.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் குறித்து, சி.பி.ஐ., தீவிர விசாரணை நடத்தி வருகிறது. முதலில் வருபவர்களுக்கு முதல் வாய்ப்பு என்ற அடிப்படையில், அனுபவம் இல்லாத கம்பெனிகளுக்கு எல்லாம் ஒதுக்கீடு அள்ளிவீசப்பட்டுள்ளது.

எனவே, இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி, கடந்த 2001ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை நடந்துள்ள ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் குறித்து, முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். இதனால், இந்த விவகாரம் மேலும் விஸ்வரூபம் எடுத்தது.

இதைத்தொடர்ந்து கடந்த, 2003-04ம் ஆண்டு மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த அருண் ÷ஷாரியிடம், கடந்த பிப்ரவரி 25ம் தேதி சி.பி.ஐ., விசாரணை நடத்தி, அவரது ஆட்சிக் காலத்தில் நடந்த ஒதுக்கீடுகள் குறித்து விசாரணை நடத்தியது.இதைத்தொடர்ந்து கடந்த மாத மத்தியில், தொழில் அதிபர் சிவசங்கரன், சி.பி.ஐ., வசம் அளித்த மனுவில்,"எனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ஒதுக்கீடு கிடைக்கவில்லை. அதனால், ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவின், "மேக்சிஸ்' நிறுவனத்திற்கு விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன். இதற்கு தயாநிதி மாறனே காரணம்' என்று புகார் செய்திருந்ததாக செய்திகள் வெளியாகின. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக முழு விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால், சி.பி.ஐ., எந்நேரமும் சிவசங்கரனிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.

வாக்குமூலம்: இந்நிலையில், சிவசங்கரன் நேற்று, சி.பி.ஐ., அதிகாரிகள் முன் ஆஜராகி, தான் தெரிவித்த புகார் தொடர்பாக, சி.பி.ஐ., அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதில், ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பாக தான் விண்ணப்பித்தது முதல், உரிமம் கிடைக்காததால், மலேசிய நிறுவனத்திற்கு விற்றது வரை, நடந்த அனைத்து உண்மைகளையும் விரிவாக எடுத்துரைத்ததாக கூறப்படுகிறது. மலேசிய நிறுவனத்திற்கு, ஏர்செல் நிறுவனத்தை விற்பதற்கு, தயாநிதி கொடுத்த நெருக்கடியே காரணம்' என்று, அவர் உறுதிப்பட தெரிவித்ததாக கூறப்படுகிறது.சி.பி.ஐ., வசம் சிவசங்கரன் எங்கே வாக்குமூலம் அளித்தார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், ஏர்செல் நிறுவனம் மலேசிய நிறுவனத்திற்கு விற்கப்பட்டதற்கு பிறகு, சன் "டிவி'க்கும் மேக்சிஸ் நிறுவனத்திற்கும் இடையே நடந்த நிதி பரிவர்த்தனைகள் குறித்து, சி.பி.ஐ., பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த துவங்கியுள்ளது. இதனால், தயாநிதிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தயாநிதி மறுப்பு: இந்நிலையில், தயாநிதி தன் மீதான குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கையில்,"நான் குற்றமற்றவன் என்பதை முறையான அமைப்பிடம் நிரூபிப்பேன்' என்றார்.

பிரதமர் மவுனம் கலைந்தது : ""தயாநிதி விவகாரத்தை, சட்ட அமலாக்க நிறுவனங்கள் கவனித்து வருகின்றன. பாரபட்சம் இல்லாமல் நடுநிலையுடன் அவர்கள் செயல்பட அனுமதிக்கப்படுவர்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், தயாநிதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் பதில் அளிக்காமல், மவுனம் காத்து வருகிறார். அவர் வாய் திறக்க வேண்டும் என, பா.ஜ., உட்பட எதிர்க்கட்சிகள் கோரி வந்தன.

இந்நிலையில், நேற்று நிருபர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், ""தயாநிதி விவகாரத்தை, சட்ட அமலாக்க அமைப்பைச் சேர்ந்தவர்கள் கவனித்து வருகின்றனர். அவர்கள் நடுநிலையுடன் செயல்பட அனுமதிக்கப்படுவர். ஊழலை எதிர்த்து போராட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம். இருந்தாலும், லஞ்சத்தை ஒரே அடியாக ஒழிக்க, கையில் மந்திரக்கோல் எதுவும் கிடையாது.""யோகா குரு பாபா ராம்தேவிற்கு எதிரான போலீஸ் நடவடிக்கை துரதிருஷ்டவசமானது. இருந்தாலும், அதைத் தவிர வேறு வழியில்லை. லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை. இந்தப் பிரச்னை, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட கூட்டுக் குழுவின் பரிசீலனையில் உள்ளது,'' என்றார்.
Rayen - Singapore,சிங்கப்பூர்
2011-06-07 06:36:35 IST Report Abuse
தயாநிதி முதலில் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும், அதன் பிறகு தான் விசாரணைக்கு போக வேண்டும். தயாநிதி குடும்பம் மு க குடும்பத்தை விட பெரிய .... குடும்பம். சும்மா விட கூடாது இவங்களை, மு க வே சந்தோஷ படுவார் இவங்களை உள்ளே போட்டு சாத்தினால். அதோடு அம்மா மற்றும் சசிகலா கும்பல் செய்த ஊழல்களையும் முறையான விசாரணை செய்து அம்மாவையும் உள்ளே தள்ளி தண்டனை கொடுக்க வேண்டும், இவள்களும் பெரிய புனிதவதிகள் இல்லை. குத்தம் செய்தது எந்த கொம்பனாக இருந்தாலும் எந்த உயர் பதவியில் இருந்தாலும் தப்ப முடியாது என்ற பயம் அரசியல் வாதிக்கும் அதிகாரிகளுக்கும் வர வேண்டும்,அப்போது தான் நாடு உருப்படும். 20 வருடங்களில் இருந்து இவர்கள் சொத்து கணக்குகளை எடுத்தாலே இவர்கள் செய்த ஊழல்களை பிடித்து விடலாம்,மற்ற நாடுகளில் அப்படி தான் பிடிக்கிறார்கள்
N.Purush Bharatwaj - Cuddalore,இந்தியா
2011-06-07 06:30:59 IST Report Abuse
எனக்கென்னவோ இந்த வழக்கு, மு.க வின் நேரடி குடும்பதிலிருந்து தடம் புரண்டு, தயாநிதி குடும்பத்தை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளது போன்று தோன்றுகிறது. மு,க வின் அடுத்த பலி கடா தயாநிதியாக இருக்கலாம்.........
ஸ்ரீனி - Coimbatore,இந்தியா
2011-06-07 05:54:28 IST Report Abuse
எப்படியோ தயாநிதி உள்ளே போனால் சரி..! கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டார்...தெய்வம் நின்று கொல்லும்...!!
Indian - Tamilnadu,இந்தியா
2011-06-07 05:42:03 IST Report Abuse
இவ்வளவு அளப்பரைக்கு இடையிலே எங்கே ஆளவே காணோம். நம்ம "அஞ்சாநெஞ்சர்" !!!... உரம் வாங்க உலகநாடெலாம் பயணம் போய்ட்டாரோ ?... மேலே உள்ள செய்திய கேட்டு, அவருக்கு கண்டிப்பா வைத்துல புளிய கரைத்து இருக்கும்... இனிமே எப்படி டெல்லிக்கு போகுறது ??.. எப்படி பேசுறது !!!... "தந்தையின் பாவம் மகனுக்கு !!!" ..
Appan - London,யுனைடெட் கிங்டம்
2011-06-07 03:10:20 IST Report Abuse
இந்த சகோதர்களைப்பற்றி பேசும் முன் இவரின் தந்தை முரசொலியை .... பற்றி கொஞ்சம் பார்ப்போம். இவர் முக வின் அக்காள் பையன். மத்திய மந்திரிசபையில் அங்கம் வகித்தவர். அபோது அவர் செய்த ஒரு செயல் நீலகிரி பொலிவிழந்து , வாழ்வாதாரம் அழிந்து கமண்டலம் ஏந்தும்படி ஆகிவிட்டது.. நீலகிரியின் தேயிலையை உலகமயம் என்று விலையை அதளபாதத்திற்க்கு கொண்டு போனார். இந்த செயலில் பெரும்பணம் கைமாற்றம் நடந்ததாய் சொல்கிற்ர்கள். இபோது அவரது மகன்கள் இரண்டு தனி விமானம் வைத்து வியாபாரம் செய்கிறர்கள். சென்னை தொலைபேசில் 450 கோடி ஊழல் செய்திருக்கும் என சொல்லலாம். இந்த சிவசங்கரன் 'PC ' வந்த போது இந்திய அரசாங்கக்தில் முகியமானவர்களை நன்றாக கவணித்து, பெறிய அளவில் 'smuggle 'செய்து, விற்று பெரும் பணம் அளவில் பன்னினார். தயாநிதி மத்திய மந்திரி ஆனபோது சிவ்சங்கரனின் ஏர்செல் நிருவனத்தை முடக்கப்பார்த்தார். வேறுவழி இல்லாமல் சிவசங்கரன் விற்க்க வேண்டிவந்தது. இதில் என்ன வேடிக்கை என்ன என்றால் ஒரு திருடன் இன்னொரு திருடனை பார்த்து நீசெய்தது தப்பு என்று சொல்கிறார். தமிழர்களின் பெயர் சந்தி சிரிக்கிறது.
s.m.sajahan - nottingham,யுனைடெட் கிங்டம்
2011-06-07 02:34:24 IST Report Abuse
சிவசங்கரன், தான் தயா நிதியால் தன் ஏர் செல் நிறுவனத்தை விற்க நிர்பந்திக்கபட்டேன் என்று இப்போது சொல்கின்றார்,அனால் அவ்வாறு நிர்பந்திக்க பட்ட காலத்திற்கும் அவர் புகார் செய்யும் காலத்திற்கும் நீண்ட இடைவெளி உள்ளது. இவ்வளவு காலமும் அவர் வாய் திறக்காமல் இருந்தது ஏன்?அந்த மௌனத்திற்கு காரணம் என்ன,அல்லது வேறு ஏதானும் புகார் எங்கணும் செய்து இருகின்றாரா??அல்லது இவரின் இப்போதைய குற்ற சாட்டு குழியில் விழுந்த யானை மீது மண்ணை தள்ளும் எறும்பின் செயலை போன்றதா,சிவசங்கரந்தான் சொல்ல வேண்டும்??
தமிழ் நிலா - வந்தவாசி,இந்தியா
2011-06-07 01:36:27 IST Report Abuse
சிவசங்கரன் கேரளா மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம்.. இது கேரளா அரசாங்கத்தின் சதி. முல்லைபெரியாறு விவகாரத்தை திசை திருப்ப கேரளா அரசாங்கம் நாடகமாடுகிறது... நமது முதல்வர் இதில் கவனம் செலுத்தி முல்லைபெரியாறு விசயத்தில் கோட்டை விட்டு விடுவார்.
Vish - CA,யூ.எஸ்.ஏ
2011-06-07 05:19:01 IST Report Abuse
ஹார்வர்ட்ல் படித்தவன் பொய் சொல்ல மாட்டானா? சற்று உலக நிலவரங்களையும் தெரிந்து கொள்ளுங்கள். போன மாதம் ஹார்வர்ட்ல் படித்த நிறைய பேர் ( ராஜா ராஜாரத்தினம், ராஜா குப்தா, அநில் கோயல் உள்பட) சரியான பொய் பித்தலாட்டத்தில் அமெரிக்காவில் மாட்டிக் கொண்டார்கள். எங்கே படித்தாய் என்பது முக்கியல்ல. வள்ளுவனின் வார்த்தையில் கூறினால்... "கற்க கசடர, கற்றவை கற்ற பின் நிற்க அதற்கு தக."...

கருத்துகள் இல்லை: