சனி, 11 ஜூன், 2011

கையில் டோக்கன் இருக்கு, யாரு டிவி கொடுப்பாங்க? குழம்பும் மக்கள்!

வால்பாறை:  இலவச தொலைக்காட்சி கிடைக்காதவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. ஆட்சி மாறிவிட்டதால், அவர்களுக்கு டிவி கிடைக்குமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது.

டோக்கன்

திமுக ஆட்சியில் குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைவருக்கும் இலவச கலர் டிவி வழங்கும் பணி துவங்கியது. வால்பாறை தாலுகாவில் 5 கட்டமாக இது வழங்கப்பட்டது. விடுபட்ட பயனாளிகள் 661 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதற்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், டோக்கன் வழங்கப்பட்டவர்களுக்கு டிவி கிடைக்கவில்லை.

டிவி கிடைக்குமா?

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டதால், இவர்களுக்கு தொலைக்காட்சி கிடைக்குமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இது குறித்து வால்பாறை தாசில்தார் சின்னப் பையனிடம் கேட்டபோது, "இது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்'' என்றார்.
 

English summary
661 people in Valparai who are yet to receive the free colour TV promised by DMK seem confused. Since the government has changed, they are wondering as to who'll give them the promised free colour TV.

கருத்துகள் இல்லை: