ஞாயிறு, 25 நவம்பர், 2012

மத்திய அரசின் மானியத்தை நேரடியாக ரொக்கமாக வழங்கும் நடைமுறை

புனே:மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மானியத்தை, பயனாளிகளுக்கு நேரடியாக ரொக்கமாக வழங்கும் நடைமுறை, அடுத்த ஆண்டு, ஜனவரி, 1ம் தேதி அமலுக்கு வருகிறது. இதன்மூலம், ஒவ்வொரு குடும்பத்தினரும், ஆண்டு ஒன்றுக்கு, 32 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.வரும், 2014ம் ஆண்டில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு, மக்களை கவரும் வகையில், இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
சமையல் காஸ் மற்றும் மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியம், மத்திய அரசின் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை, ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிவோருக்கு வழங்கப்படும் சம்பளம் போன்றவை, தற்போது, பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கப்படுவதில்லை. மறைமுகமாக, பல்வேறு வழிகளில் வழங்கப்படுகின்றன.இதை மாற்றி, ஒவ்வொரு குடிமகனுக்கும், பிரத்யேக அடையாள எண்ணுடன் வழங்கப்பட உள்ள, "ஆதார்' அடையாள அட்டை மூலம், மானியத்தையும், பண பலன்களையும், பயனாளிகளுக்கு நேரடியாக வழங்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. http://www.dinamalar.com/

வால்பாறையில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி? 40 பேர் படுகாயம்

  வால்பாறை மலையில் பஸ் கவிழ்ந்து விழுந்ததில் 2 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். படுகாயமுற்ற 52 பேர் மீட்கப்பட்டு பொள்ளாச்சி, கோவை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வால்பாறையில் இருந்து பழநி நோக்கி இரவில் அரசு பஸ் புறப்பட்டது. ஆழியாறு அருகே 3 வது கொண்டை ஊசிவளைவு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தடுப்புச்சுவரை இடித்து விழுந்தது. இதில் பயணிகள் அனைவரும் 200 அடி பள்ளத்திற்குள் விழுந்தனர். தீயணைப்பு படையினர் காயமுற்ற பயணிகளை மீட்டனர். இரவு நேரம் என்பதால் இன்னும் பயணிகள் பள்ளத்தாக்கில் சிக்கியிருக்கின்றனரா என மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
பஸ் கவிழ காரணம் என்ன ? :  http://www.dinamalar.com/

உதயநிதியின் ஜோடியானார் நயன்தாரா!

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.
அணில்(கள்) கடிச்ச பழத்துக்குதான் ஏக கிராக்கி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நயன்தாராவின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. தமிழிலும் தெலுங்கிலும் அவர் கால்ஷீட்டுக்கு கோடிகளில் கொட்டித் தரத் தயாராக உள்ளனர் தயாரிப்பாளர்கள்.
ஏற்கெனவே தமிழில் அஜீத்குமார் மற்றும் ஆர்யா படங்களில் நாயகியாக நடித்து வருகிறார் நயன்தாரா. தெலுங்கில் 4 படங்களில் நடிக்கிறார்.
இப்போது அடுத்த தமிழ்ப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ஓரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குப் பிறகு, உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

22 ஏழை குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைக்கும் நடிகை ரோஜா


நடிகை ரோஜா ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரச்சார பீரங்கியாக உள்ளார். இந்நிலையில் அவர் ஜெகன் கட்சியின் நகரி சட்டசபை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் ரோஜா அவ்வப்போது நகரி தொகுதிக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டு வருகிறார்.
இந்நிலையில் படிக்க வசதியில்லாத ஏழைக் குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் கல்விச் செலவை ஏற்க முடிவு செய்த அவர் 22 குழந்தைகளை தேர்ந்தெடுத்தார். அக்குழந்தைகளின் கல்விச் செலவுக்காக அவர்களுக்கு மாதம் ரூ.300 வழங்கவிருக்கிறார்.
இதற்கான நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட ரோஜா தான் தேர்வு செய்துள்ள 22 குழந்தைகள் தங்கள் படிப்பை முடிக்கும் வரை உதவித் தொகை வழங்கப்படும் என்றார். அவர் மேலும் கூறுகையில், பள்ளிக்கு செல்லும் ஒவ்வொரு ஏழைக் குழந்தைக்கும் மாதம் ரூ.500 உதவித் தொகை வழங்க ஜெகன்மோகன் ரெட்டி திட்டமிட்டுள்ளார். அவர் மட்டும் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு மேலும் பல பலன்கள் கிடைக்கும் என்றார்.

சனி, 24 நவம்பர், 2012

இதற்கெல்லாமா கைது செய்வார்கள்? Facebook twitter வயிற்றில் புளி

கருத்துரிமை – சட்டம் – கைதுகள்


இதற்கெல்லாமா கைது செய்வார்கள்? சமீபத்தில் செய்தித்தாள்கள் படித்தவர்களுக்கு நிச்சயம் இந்தக் கேள்வி எழுந்திருக்கும். அதே போல், சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது இந்தச் செய்திகள்.
எனில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்கள் கருத்தைச் சொல்பவர்கள் இனி கவனமாக இருக்கவேண்டுமா? கமெண்ட் போடுபவர்கள், லைக் போடுபவர்கள் இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டுமா?
சிவசேனா தலைவர் பால் தாக்கரே இறந்ததை முன்னிட்டு மும்பை நகரத்தில் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டது. இது குறித்து ஷஹின் தாதா என்ற பெண் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்து இது. ’இந்த முழு அடைப்பு தன்னிச்சையாக நடைபெறவில்லை. வலுக்கட்டாயமாக நடந்தேறியிருக்கிறது. இது போன்று முன் எப்போதாவது நடந்திருக்கிறதா? பகத் சிங், சுகதேவ் போன்ற சுதந்தரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் இதுவரை இரண்டு நிமிடமாவது மௌன அஞ்சலி செலுத்தியிருப்போமா? ஒருவர் மீதுள்ள மதிப்பு என்பது, தானாக வருவது. அது பெறப்படுவதில்லை. மும்பை ஸ்தம்பித்திருப்பதற்கு காரணம் மரியாதையால் இல்லை, பயத்தால் மட்டுமே.’
இந்த கருத்தை வெளியிட்டதற்காக ஷஹின் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இந்தச் செய்திக்கு ஃபேஸ்புக்கில் லைக் போட்ட ரேணு சீனிவாஸ் என்ற அவர் தோழியும் கைது செய்யப்பட்டார். இவ்வாறு நடக்கும் என்று இந்த இருவரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.
மேற்படி இருவரும் தகவல் தொழில் நுட்பச் சட்டம் (Information Technology Act, 2000) 66 A பிரிவின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 295 A பிரிவின் கீழும் கைது செய்யப்பட்டனர்.

ஆம் ஆத்மி கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டி : கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: தமது ஆம் ஆத்மி கட்சியானது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று, அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். வரும் திங்களன்று டெல்லி ஜந்தர்மந்தரில் ஆம் ஆத்மி கட்சி தொடக்கம் பற்றி, முறைப்படி அறிவிக்கப்படும் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார். மற்ற அரசியல் கட்சிகளுக்கு தமது கட்சி சவாலாக அமையும் என்றும், கட்சியின் தேசிய செயற்குழுவில் 30 பேர் இடம்பெறுவர் என்றும் கூறியுள்ளார்.
நாட்டில் சுயராஜ்ஜியத்தை கொண்டுவர வேண்டுமென்பதே கட்சியின் லட்சியம் என்று கூறியுள்ளார். அரசியல் மாற்றம் நிகழும் வரை லோக்பால் சட்டமசோதா நிறைவேறாது என்று குறிப்பிட்டுள்ளார்

ஜாதி வெறியர்களுக்கு ரத்தக் கொதிப்பை ஏற்றும் திராவிடர் கழகம்; ‘இப்ப என்னா பண்ணுவ?’


ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு எதிராக, குறிப்பாக தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண், ஜாதி இந்து பெண்ணை திருமணம் முடித்தால் வெறிகொள்கிறார்கள் சூத்திரர்கள்.
தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளை தீ யிட்டு முற்றிலுமாக அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிற, அவர்களை கொலை செய்கிற இன்றைய ஜாதி வெறியர்களின் மோசமான செயல்களுக்கு நடுவே,
திராவிடர் கழகத்தின் இந்த விழா முக்கியமான ஒரு பெரியார் பணி.
ஜாதி மறுப்பு திருமணத்தை ஆதரித்து பேசுகிற தலித் அல்லாத முற்போக்காளர்கள் கூட, தன் ஜாதி பெண்ணை தலித் இளைஞன் திருமணம் முடிக்கிறான் என்றால், அதை எப்படியாவது தடுக்கப் பார்க்கிறவர்கள் மத்தியில்,இன்னும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது தி.க வின் ஜாதி மறுப்பு திருமண விழா.
ஆகையால், திராவிடர் கழகத் தோழர்களுக்கு நமது வாழ்த்துகளையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்வது, நிச்சயம் நமது கடமை.http://mathimaran.wordpress.com/

50,00​0 பேர் திரண்ட வீரபாண்டி ஆறுமுகம் இரங்கல் கூட்டத்தில் தலைவர்கள் கண்ணீர்!





வீரபாண்டி ஆறுமுகம் உடல் அவரின் சொந்த ஊர் சேலம் பூலாவரிக்கு கொண்டு வரப்பட்டது. மத்திய அமைச்சர் மு.க அழகிரி, முரசொலி செல்வம், எ.வ.வேலு, சுப்புலட்சுமி ஜகதீஷன், சுப இளவரசன், பா.ம.க கோ.க மணி உட்பட அனைத்து கட்சியினரும் வந்திருந்து இரங்கலை தெரிவித்தனர். கோ.க மணி 'வீரபாண்டியார் என்ற பெயரை எங்கள் கட்சி தான் அவருக்கு 1984 இல் சூட்டி புகழாரம் செய்தோம். அவர் இழப்பு தி.மு.க வுக்கு மட்டுமல்ல வன்னிய இனத்திற்கே பேரிழப்பு தான்' என்றார்.

ஏ.பி.நாகராஜன் வாழ்வு பிறரிலிருந்து மிகவும் வேறுபட்டது.அரசியல் நோக்கு கொண்டிருந்தார்



A. P. Nagarajan
ஏ.பி.நாகராஜன் ஆரம்பகாலத்தில் நாடகத்தில் ஸ்திரிபார்ட் ரோல் செய்தவர். டி.கே.எஸ் பிரதர்ஸ் ’குமாஸ்தாவின் பெண்’ நாடகமாக நடத்தப்பட்டபோது அதில் கதாநாயகியாக நடித்தவர் ஏ.பி.நாகராஜன்!நால்வர்(1953),பெண்ணரசி(1955),நல்லதங்காள்(1955) ஆகிய படங்களில் கதாநாயகன் ஏ.பி.நாகராஜன்! இந்தப்படங்களுக்கு வசனமும் இவரே தான். பொன்னே,புதுமலரே,பொங்கிவரும் காவிரியே மின்னும் தாரகையே வெள்ளி நிலவே……அந்த நாள் மறைந்ததம்மா ஆனந்தம் போனதம்மா’ இந்த டி,எம்.எஸ் பாடல் ’நல்லதங்காள்’ படத்தில் ஏ.பி.நாகராஜனுக்குத்தான். ’நால்வர்’ படத்தில் என்.என்.கண்ணப்பாவும் நடித்தார்.விஜயகுமாரி கூட ஒரு சின்னரோலில் நால்வர் படத்தில் நடித்தார். அதே வருடம் கே.சோமு இயக்கி கண்ணப்பா கதாநாயகனாக நடித்த டவுன் பஸ் படத்திற்கு ஏ.பி.என் தான் வசனம். கே.சோமு இயக்கிய ’சம்பூர்ண ராமாயணம்’ படத்திற்கும் வசனம் இவரே.திரையுலகில் பல மாற்றங்கள்,மேடுபள்ளங்கள் கண்ட ஏ.பி.நாகராஜன் வாழ்வு பிறரிலிருந்து மிகவும் வேறுபட்டது.அரசியல் நோக்கு கொண்டிருந்தார். ம.பொ.சியின் தமிழரசுக்கழகத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலிகள் காதல் திருமணம்

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினரான சுந்தரலிங்கம்  சுதர்ஷன் என்பவர் அதே புலி அமைப்பில் பெண் போராளியாக இருந்து தற்போது புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள சிற்றம்பலம் பிரியதர்ஷினி என்பவரை காதல் திருமணம் புரிந்துள்ளார் . இந்த இளம் தம்பதிகள் இனிதே வாழ வாழ்த்துகிறோம் 
A disabled former LTTE cadre named Sunderalingam Sudharshan married his sweetheart and former LTTE woman cadre Chittampalam Priyadharshani of Mullaitivu at a ceremony at the Punthotam Rehabilitation Camp Vavuniya yesterday witnessed by Rehabilitation and Prison Reforms Minister Chandrasiri Gajadeera and ministry officials. http://www.dailynews.lk/2012/11/24/news30.asp

வீரபாண்டியார் கலைஞரை நோக்கி தைரியமாக சொன்னார்

கலைஞரின் 80வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் என்று நினைவு. சென்னை சின்னமலையில் நடந்தது. பேசியவர்கள் எல்லாருமே கலைஞரை வானளவு புகழ்ந்து அமர்ந்தார்கள். வீரபாண்டியார் எழுந்தார். “எங்களுக்கு நீங்கள் எல்லாமே செய்திருக்கிறீர்கள். ஆனால் பெரியார், அண்ணா சொன்னதைத் தவிர்த்து புதிய சிந்தனைகளை நாம் உருவாக்கி இருக்கிறோமா என்று சுயபரிசீலனை செய்துக் கொள்ள வேண்டும். திராவிட இயக்க சிந்தனைகளை காலத்துக்கு ஏற்ப மாற்றி, புதிய சிந்தனைகளை உருவாக்கும் பணியை நீங்கள்தான் செய்யவேண்டும். நீங்களும், பேராசிரியரும் அவற்றை உருவாக்கும் பணிகளை இனி மேற்கொள்ள வேண்டும்” கலைஞரின் முகத்தில் மகிழ்ச்சியா, வருத்தமா என்று தெரிந்துக்கொள்ள முடியாத ரியாக்‌ஷன். மேடையில் அமர்ந்திருந்த மற்றவர்களுக்கு கொஞ்சம் வருத்தம்தான். கட்சி, ஆட்சி போதும். தமிழ் சமூகத்துக்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுங்கள் என்று மறைமுகமாக கலைஞரை நோக்கி வீரபாண்டியார் தைரியமாக சொன்னார்.இந்த தைரியம் கட்சியில் வீரபாண்டியாருக்கு அதிகம். தலைவரோடு அடிக்கடி முரண்படும் மூத்த கட்சிக்காரர். http://www.luckylookonline.com/

மீண்டும் மீண்டும் தற்கொலைகளும் காரணங்களும்

துரத்தும் வாழ்க்கை – சிதறும் கனவுகள்!    ஐ.ஐ.டி மாணவர் தற்கொலை என்பதில் ஆரம்பித்து ஐந்தாம் வகுப்பு மாணவன் தற்கொலை வரை தற்கொலைகளின் காரணங்களும், அடிப்படைகளும் ஒன்றாகவே இருக்கின்றன.
தற்கொலை-3சென்னையைச் சேர்ந்த 29 வயதே நிரம்பிய ஜெயக்குமார் தற்கொலை செய்து கொள்வார் என்பதை அதற்கு ஒரு நாள் முன்பு அவரது நெருங்கிய நட்பு வட்டத்திலும், உறவினர்களிடமும் சொல்லியிருந்தால் நம்பியிருக்க மாட்டார்கள்.  பொறியியல் பட்டம் பெற்ற ஜெயக்குமார் மேல்படிப்புக்காக அமெரிக்கா சென்று திரும்பி சில மாதங்கள் தான் ஆகியிருந்தது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தனது மேல்படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு இந்தியா திரும்பிய ஜெயக்குமார், இங்கே சில தற்காலிக வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அமெரிக்க கலாச்சாரம் தனக்கு ஒத்துவரவில்லையென்றும், அந்தச் சூழலை ஜீரணித்துக்கொள்ள முடியவில்லையென்றும், எனவே மீண்டும் அங்கே சென்று படிப்பைத் தொடரும் எண்ணம் இல்லையென்றும் ஜெயக்குமார் சொல்லியிருந்தார். அவர் படித்த மேற்கு வெர்ஜினியா பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் வெர்ஜினியா பகுதி இனவெறிக்கும், நிறவெறிக்கும் பெயர் போனது. இந்நிலையில் அமெரிக்கப் படிப்பை அந்தஸ்தின் அடையாளமாகக் கருதிய பெற்றோர்,  ஜெயக்குமாரை மீண்டும் அமெரிக்கா செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால், தனது தாயின் சேலையைக் கொண்டு மின்விசிறியில் தூக்குமாட்டி உயிர் விட்டிருக்கிறார்.

சோனியா: 2ஜி விவகாரத்தால் ஆதாயம் பார்த்த BJP, ADMK

புதுடில்லி:"2ஜி' முறைகேடு குறித்து, சி.ஏ.ஜி.,யின் ஆய்வில், முரளி மனோகர் ஜோஷி குறுக்கிட்டதாக, புகார் எழுந்துள்ளது. இது குறித்து பார்லிமென்ட்டுக்கு வெளியே பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா கூறுகையில்,""2ஜி விவகாரத்தை கிளப்பி, ஆதாயம் பார்த்த பாரதிய ஜனதாவின் சாயம் வெளுத்துவிட்டது. இது குறித்து, பா.ஜ., தலைவர்கள் விளக்க வேண்டும்,'' என்றார்.
மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில்,""2ஜியில் குறிப்பிடப்பட்ட இழப்பு குறித்து சந்தேகம் எழுந்தது. உண்மை நிலை என்ன என்பது இப்போது வெளியாகிவிட்டது. இதை மக்கள் அறிந்து கொள்வர்,'' என்றார். 

வெள்ளி, 23 நவம்பர், 2012

சிறுமி மலாலாவிற்கு உள்ள பொறுப்பும் துணிச்சலும்


 ஆர். நடராஜ்
malala-1Malala"பெண்ணுக்கு பெண்தான் எதிரி' என்று மாமியார் மருமகள் சச்சரவு பற்றி  அங்கலாய்ப்பார்கள். பெண்ணுக்குப் பல முனைகளிலிருந்து பிரச்னைகள் வருகின்றன. பெண் சிசுவதை, பாலியல் கொடுமை, கல்வி மறுப்பு, வரதட்சணைத் தொல்லை, புகுந்த வீட்டில் பிரச்னை, அலுவலகங்களில் உரிமை பறிப்பு என்று திணற அடிக்கும் பிரச்னைகள் நமது நாட்டில். மேலை நாடுகளிலும் வேறுவிதமான எதிர்ப்புகள்.
 ஆனால் பின்தங்கிய நாடுகள், மூடப்பழக்கங்களில் உழலும் சமுதாயங்கள், தீவிரவாதம் அன்றாட நிகழ்வாக இருக்கும்  இடங்களில், பெண்கள் அதுவும் குழந்தைகள் பல கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள்.
 தீவிரவாதம் மிகுந்த இடங்களில் பள்ளிகள் முறையாக நடப்பதே அபூர்வம். நாட்கணக்காக மூடியிருக்கும். நடத்தப்படும் சில நாள்களிலும் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயம்; இந்தச் சூழலில் எவ்வாறு படிக்க முடியும்? உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு "கற்றலில் இனிமை' என்று அந்தப் பிஞ்சு உள்ளங்கள் கல்வியில் ஈடுபட முடியுமா?

கூவம் நதிக்கரையோரம்….எல்லாத்தையும் மனசுல அடக்கினு வாழறோம். வேற என்ன பண்ண முடியும்?”


பில்டர் காபி, இசிஆர் சாலை, ஷாப்பிங் மால்கள், ஹிந்து பேப்பர், சரவண பவன்கள் போன்றவை சென்னையின் அடையாளங்களாக உங்கள் மனதில் நிழலாடினால். உங்கள் கண்களையும் மனதையும் திறந்து வைத்துக்கொண்டு மேலே படியுங்கள்.
கூவம்சென்னையில் இன்று எந்த ஆற்றைக் கடக்கும் போதும், நமது கை அனிச்சைச் செயலாக மூக்கைப் பொத்தி விடுகின்றது, அல்லது சுவாசிப்பை சில விநாடிகளுக்கு நிறுத்த முனைகிறோம். சில விநாடிகள் அங்கு நிற்க வேண்டுமானால் கூட பல முறை “உச்” கொட்டி நொந்து கொள்கிறோம். ஆனால் சென்னையை தமது உழைப்பால் உயர்த்திக் கொண்டிருக்கும் உழைக்கும் மக்களும், சென்னையின் பூர்வ குடிகளும் அந்த ஆற்றங்கரைகளில் துர்நாற்றத்தின் மத்தியில் தான் பல ஆண்டுகளாக வாழ்கிறார்கள்.
ஃபில்டர் காபி, மைலாப்பூர், எல்ஐசி, இசிஆர் சாலை, ஷாப்பிங் மால்கள், ஹிந்து பேப்பர், அதை படிக்கும் நடுத்தர வர்க்கம் சென்னையின் அடையாளங்களாக உங்கள் மனதில் நிழலாடினால். உங்கள் கண்களையும் மனதையும் திறந்து வைத்துக்கொண்டு மேலே படியுங்கள்.
சென்னை நகர வளர்ச்சியின் உண்மையான சாட்சியாக இருக்கும் மக்களை துர்நாற்றம் வீசும் ஆறுகளின் ஓரங்களில் நீங்கள் பார்க்கலாம். துர்நாற்றத்தைத் தாங்கிக்கொண்டு சில நொடிகள் நிற்க முடிந்தால் அவர்கள் உலகத்தினுள் நாம் நுழைந்து விடலாம்.

தர்மபுரியில் மாயாவதி தலைமையில் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் நடந்த காதல் திருமணம் தொடர்பாக அங்குள்ள நத்தம் காலனியில் உள்ள வீடுகள் சேதப்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் ஆறுதல் கூறி வருகிறார்கள். தற்போது இப்பிரச்சினையை பகுஜன் சமாஜ் கட்சியும் கையில் எடுத்துள்ளது.இந்த தாக்குதல் தொடர்பான விவரங்களை தமிழக பகுஜன் சமாஜ் நிர்வாகிகளிடம் இருந்து அக்கட்சி தலைவர் மாயாவதி கேட்டறிந்தார். வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக இழப்பீடு வழங்கக்கோரியும், தாக்குதலில் தொடர்புடைய நபர்களை கைது செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக நிர்வாகிகளுக்கு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.தர்மபுரி வன்முறை நடந்த கிராமத்திற்கு வருகிற 26-ந்தேதி மாயாவதி வருகிறார். அவரது தலைமையில் அன்று தர்மபுரியில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடக்கிறது. தர்மபுரி வன்முறை நடந்த கிராமத்திற்கு அம்பேத்கரின் பேரன் பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே வந்தார். அவர் அங்கு சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் ஆறுதல் கூறினார்.

வீரபாண்டி ஆறுமுகம் என்ற தூணை இழந்துவிட்டோம் கண்ணீர் விட்டு அழுத கலைஞர்

சென்னை: உடல் நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமான முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் உடலுக்கு திமுக தலைவர் கலைஞர்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது கலைஞர் கண்ணீர் விட்டு அழுதார்.
 former minister veerapandi arumugam dead
வீரபாண்டி ஆறுமுகம் மறைவுச் செய்தி கேட்டதும் கருணாநிதி உடனடியாக போரூர் மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு வைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் உடலைப் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் வீரபாண்டி ஆறுமுகம் உடல் மீது மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில், திமுக மிகப் பெரிய தூணை இழந்து விட்டது. ஒரு போர்ப் படை தளபதியை திமுக இழந்துள்ளது. அவருடன் பழகிய நாட்களை மறக்க முடியாது. என்னில் பாதி அவர். மாறன் மறைந்த அதே நாளில் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் மறைந்து எங்களை மீளாத் துயரில் ஆழ்த்தி விட்டார் என்றார்.
3 நாள் துக்கம்.. கொடிகள் அரை கம்பத்தில்: http://tamil.oneindia.in/

திமுகாவிற்கு எதிராக பின்னப்பட்ட மாபெரும் சதி... 2 G ஸ்பெக்ட்ரம் . தகிடுதித்தம் வெளியே வந்துள்ளது

2ஜி: ''ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்ட அறிக்கை என்னுடையதல்ல; கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினர்''


Posted by: டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிஏஜி வினோத் ராய் கூறிய தகவல்கள் முழுக்க முழுக்க அவரது சொந்த கற்பனை என்ற விவரம் மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே வினோத் ராயின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகவே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட்டிருந்தால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி கிடைத்திருக்கும் என்றார் வினோத் ராய். ஆனால், சமீபத்தில் இதை ஏலம் விட்டபோது வாங்கக் கூட ஆள் இல்லாமல் வெறும் ரூ. 9,000 கோடிக்கே அது விற்பனையானது. இதிலிருந்தே ஸ்பெக்ட்ரத்தின் விலை தொடர்பாக வினோத் ராய் கூறிய 'மனக் கணக்கு' எந்த அளவுக்கு ஏற்றிச் சொல்லப்பட்ட ஒன்று என்பது நிரூபணமாகிவிட்டது.
இந் நிலையில் வினோத் ராய் மற்றும் அவரது துணை அதிகாரியான ரேகா குப்தாவின் அடுத்த தகிடுதித்தம் வெளியே வந்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை குறித்து உண்மையிலேயே ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்க வேண்டியது, மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் பணியாற்றிய டைரக்டர் ஜெனராலான ஆர்.பி.சிங் தான். இவர் தான் தொலைத் தொடர்பு மற்றும் தபால் துறைக்கான சிஏஜியின் தணிக்கை அதிகாரி ஆவார்.
ஆனால், வினோத் ராய் அண்ட் கோ ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தாங்களே ஒரு அறிக்கையை தயார் செய்து அதில் ஆர்.பி.சிங்கிடம் கட்டாயப்படுத்தி வாங்கியுள்ளது. இந்த நஷ்டக் கணக்கு சரியானதல்ல என்று ஆர்.பி.சிங் கூறியும் கூட அவரது உயர் அதிகாரியான வினோத் ராய் அதில் கையெழுத்து போட வைத்துள்ளார். இதை ஆர்.பி. சிங் இப்போது வெளியே கூறியுள்ளார்.  http://tamil.oneindia.in/

அதிமுக அரசு அலைகழித்ததே வீரபாண்டி ஆறுமுகம் உடல்நிலை மோசமடைந்ததற்கு காரணம்: கலைஞர் பேட்டி

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் 23.11.2012 வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக தலைவர் கலைஞர், சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவர் வீரபாண்டியார் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.வீரபாண்டி ஆறுமுகம் மறைவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கலைஞர், மிகப்பெரிய தூணை திமுக இழந்துவிட்டது. குண்டர் சட்டத்தின் மூலம் அதிமுக அரசு வீரபாண்டி ஆறுமுகத்தை அலைகழித்ததே அவரது உடல்நிலை மோசமடைந்ததற்கு காரணம் என்றார்.

குண்டர் சட்டத்தில் வீரபாண்டி ஆறுமுகம் கைதாகி, கடந்த மாதம் வேலூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்


 Veerapandi Arumugam Passed Away
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை 11 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.
சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
கடந்த 1937ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி சேலம் மாவட்டம் பூலாவாரியில் பிறந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் கடந்த 1957ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். 1958ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை பூலாவாரி ஊராட்சி தலைவராக இருந்தார். அதன் பிறகு அவர் 1970-76ல் பஞ்சாய்தது யூனியன் தலைவராக இருந்தார். பின்னர் 1973ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தார்.

தர்மபுரி வன்முறையில் பாமக நிர்வாகிகளின் தூண்டுதலும் காரணம்: திமுக குழு அறிக்கை

தர்மபுரி வன்முறைக்கு பாட்டாளி மக்கள் கட்சியில் உள்ள சில்ரது தூண்டுதலும் பங்கும் இருக்கிறது என்று திமுகவின் உண்மை அறியும் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தர்மபுரியில் தலித் வீடுகள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக அமைப்புச் செயலர் பெ.வீ.கல்யாணசுந்தரம், திமுக தொண்டர் அணி செயலர் பொள்ளாச்சி மா. உமாபதி உள்ளிட்டோர் தலைமையிலான குழு அங்கு ஆய்வு செய்தது.
ஆய்வுக்குப் பின் இக்குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தர்மபுரி கலவரம் திட்டமிடப்பட்டுள்ளது. காதல் திருமணம் மட்டுமே இதற்குக் காரணமில்லை. பாமகவில் உள்ள சில நிர்வாகிகளின் தூண்டுதலும் பங்கும் உள்ளது.
காவல் துறையில் பணியாற்றும் இரண்டு சமூகத்தைச் சார்ந்த இரு காவல்துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற அணுகுமுறையால், இந்தப் பிரச்சனை இன்னும் பெரிதாகி உள்ளது. காவல் துறையினரின் அலட்சியத்தால் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசின் நிவாரணங்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாகச் சென்றடையவில்லை. ஒரு சிலருக்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை. இழப்பீடு தொகையான ரூ. 50 ஆயிரம் போதுமானதாக இல்லை.இரு தரப்பு மக்களிடமும் இன்னும் பதற்றமும் அகலவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.oneindia.in/

Toronto 4 தமிழர்கள் மில்லியன் Dollar மோசடி


Toronto man who staged car collisions in an insurance fraud is sent to prison

டொராண்டோவில் வியாபார கடன் மோசடியில் ஈடுபட்டதாக 4 தமிழர்கள் உள்ளிட்ட ஆறு பேர் மீது கனடிய சிறப்பு காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். இவர்கள் 2006 - 2007 காலப்பகுதியில் போலி ஆவணங்களை தயாரித்து கனடிய வங்கிகளிடம் இருந்து 2 மில்லியன் டொலருக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக சிறப்பு காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
  இவர்கள் போலியான வியாபார நிலையங்களை உருவாக்கி, அதற்கு தேவையா உபகரணங்களை வாங்குவதாகவும், அதனை அபிவிருத்தி செய்வதாகவும் கூறி, போலியான ஆவணங்களை வங்கிகளில் சமர்ப்பித்து இந்த மோசடியை செய்துள்ளதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதில் சுரேஷ் பரமலிங்கம் (33), பாலமுருகன் பாலகிருஷ்ணன் (32), பவன் சிவகுருநாதன் (31), ஆனந்தருபன் வையாபுரி (35), சுல்தான் ஜாபர் (44), மட்தேவ் புச்கின்காம் (31) மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது . இவர்கள் அனைவரும் 60 Queen Street West நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  

An insurance-scamming “choreographer” of 13 staged collisions on Toronto’s busy streets was sent to prison for 3½ years Thursday.
Uthayakanthan “Mano” Thirunavukkarasu, 38, was one of the leaders of a criminal organization that recruited and directed a deceitful cast of participants, including dozens of so-called drivers and passengers who faked injuries for fraudulent insurance claims costing insurers $1.5 million.
Of that, $1.2 million flowed through Thirunavukkarasu’s business account. He has been ordered to pay restitution of $375,000.

ஜி.கே.வாசன். கார்த்தி சிதம்பரம் திருச்சி MP தொகுதி கோரி மனு

திருச்சி மக்களவைத் தொகுதியை பெறுவதற்கு மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் மல்லுக்கட்டி வருகின்றனர் காங்கிரஸ் பொதுச்செயலர் ராகுல் காந்தியால் திருச்சி மக்களவைத் தொகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் மேலிடப் பார்வையாளரான கேரள மாநிலத்தின் பி.வி. தாம்பனிடம் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் ஜி.கே.வாசனின் ஆதரவாளர்களும் போட்டிபோட்டு மனுக்கொடுத்தனர். ஜி.கே.வாசனுக்கும் கார்த்தி சிதம்பரத்துக்கும் திருச்சி தொகுதியைக் கோரி மனு கொடுத்திருக்கின்றனர். அதேபோல் திமுக கூட்டணியிலேயே வரும் தேர்தலிலும் நீடிக்க வேண்டும் என்றும் இருதரப்பும் மனு கொடுத்திருக்கின்றனர்.

லக்கா, கிக்கா அடம் பிடித்த ரோஜா. லட்ச ரூபா புடவை வேணும்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘லக்கா, கிக்கா' நிகழ்ச்சி நடத்தும் ரோஜா புடவை சரியில்லை என்று நிகழ்ச்சியின் சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டாராம்.
சின்னத்திரையில் சினிமா நடிகைகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அதிக செலவு என்றால் அவர்களுக்கான காஸ்ட்யூம்தான். ஜீ தமிழ் டிவியில் ரோஜா ‘லக்கா கிக்கா' நிகழ்ச்சியில் புடவை, நகை அலங்காரம் பிரம்மாண்டமாக இருக்கும். புடவை மட்டுமே ஒரு லட்சம் ரூபாயாம்.
சமீபத்தில் டிவி நிர்வாகம் சார்பில் வேறு புடவை கொடுத்திருக்கின்றனர். ஆனால் அதை உடுத்த மறுத்துவிட்டாராம் ரோஜா. ஒரு லட்சம் ரூபாய் புடவை தந்தால்தான் நிகழ்ச்சிக்குத் தருவேன் என்று சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டராம். டிவி நிர்வாகத்தினர் பாடுதான் திண்டாட்டமாகிவிட்டது.

TV சீரியல் வீட்டுக்குள் நுழைந்து விடுகிறது.

டிவி-சீரியல்தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு (சீரியல்களுக்கு) அடிமையானவர்களை மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட பலி ஆடுகளுக்கு ஒப்பிடுவதா, டாஸ்மாக் அடிமைகளுக்கு ஒப்பிடுவதா என்று தெரியவில்லை. சீரியல் நேரம் நெருங்க நெருங்க கைவேலையை முடிப்பதில் பதட்டம் காட்டும் பெண்களைப் பார்க்கும்போது, அவர்களை கட்டிங்குக்காக தவிக்கும் குடிமகனுடன் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. குடிகாரன் குடல் வெந்து சாவோம் என்று தெரிந்தேதான் குடிக்கிறான். சீரியல் அடிமைகளுக்கோ, தங்கள் சிந்தனை காவு கொடுக்கப்படுவது குறித்துத் தெரிவதில்லை. அந்த வகையில் இவர்கள் பலியாடுகளை ஒத்தவர்கள். இந்த நெடுந்தொடர்களில் வருகின்ற கதைகளும் அவை தோற்றுவிக்கும் கருத்துகளும் தனியொரு ஆய்வுக்குரியவை.
ஆனால் இத்தொடர்களின் கதைகள் எவ்வாறு தயாராகின்றன என்பதை இதனுடன் கட்டிப் போடப்பட்டுள்ள ரசிகர்கள் தெரிந்து கொள்வது அவசியம். ஒரு வளர்ப்பு நாயை விடக் கேவலமான முறையில் தாங்கள் ஆட்டிப் படைக்கப்படுவதைத் தெரிந்து கொள்வது, இந்த அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள உதவும்.