வியாழன், 15 செப்டம்பர், 2022

“சென்னை அண்ணா விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள்” அப்புறப்படுத்த படுகின்றன

“சென்னை ஏர்போர்ட்டில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள்” :  அதிரடி முடிவு எடுத்த அதிகாரிகள் !
“சென்னை ஏர்போர்ட்டில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள்” :  அதிரடி முடிவு எடுத்த அதிகாரிகள் !

கலைஞர் செய்திகள் : சென்னை விமான நிலையத்தில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, முன்னாள் விமான நிறுவனங்களை சோ்ந்த 12 பழைய விமானங்களை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன.
சென்னை விமான நிலையத்திலிருந்து ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு, என்.இ.பி.சி., கிங்பிஷர்,ஜெட் ஏா்வேஸ், டெக்கான் ஏா்லைன்ஸ், பேராமவுண்ட் ஆகிய விமான நிறுவனங்களை சோ்ந்த விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் தற்போது அந்த விமான நிறுவனங்கள் செயல்பாட்டில்லை.


இந்த செயல்பாட்டில் இல்லாத டெக்கான் ஏா்லைன்ஸ், பேராமவண்ட் ஆகிய விமான நிறுவனங்களின் விமானங்கள் எதுவும் சென்னை விமானநிலையத்தில் நிறுத்தி வைக்கப்படவில்லை. ஆனால் என்.இ.பி.சி., கிங்பிஷா், ஜெட் ஏா்வேஸ் ஆகிய விமான நிறுவனங்களின் 12 பயன்படுத்தப்படாத 12 விமானங்கள், சென்னை விமான நிலையத்தின் வட மேற்கு பகுதியில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள.
“சென்னை ஏர்போர்ட்டில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள்” : அதிரடி முடிவு எடுத்த அதிகாரிகள் !

இதில், என்.இ.பி.சி., விமானங்கள் 4, ஜெட் ஏர்வேஸ் விமானம் 1, ஆகிய 5 விமானங்கள், கடந்த 2021ஆம் ஆண்டில், முறைப்படி தமிழ்நாடு அரசின் வருவாய்துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடு, அப்புறப்படுத்தப்படும் பணிகள் நடந்தன. விமானங்களை உடைத்து அப்புறப்படுத்தும்போது, அதனால் சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்தப்படாத நிலையில் பணிகள் நடந்தன.

இந்நிலையில், கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 7 விமானங்களில், 2 விமானங்களை அப்புறப்படுத்தும் பணி, சில மாதங்களுக்கு முன் நடந்தது. அதில், பயன்படுத்தும் நிலையில் இருக்கும், இன்ஜின்கள் உட்பட, தொழில்நுட்ப கருவிகள், முக்கியமான பாகங்கள் தனியே பிரித்து எடுத்து வைக்கப்பட்டுள்ளன. அவைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருப்பதாக கூறப்படுகிறது.
“சென்னை ஏர்போர்ட்டில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள்” : அதிரடி முடிவு எடுத்த அதிகாரிகள் !

இந்நிலையில் தற்போது, மீதி பழைய விமானங்களையும் அப்புறப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்தப்பணிகளை அந்த விமான நிறுவனங்கள் எடுத்து வருகின்றன. அதன்படி முதற்கட்டமாக, அந்த விமானங்களின் மதிப்புகளை மதிப்பீடு செய்யும் பணிகள் தொடங்கப்படுகின்றன.

இதன் மதிப்புகள் கணக்கிட்ட பின்பு, அவற்றை அப்புறப்படுத்தும் பணி துவங்கும். விமானங்களின் இன்ஜீன்கள், மற்றும் முக்கிய உதரி பாகங்கள் பயன்படுத்தக்கூடிய நல்ல நிலையில் இருப்பவைகள், தனியாக எடுத்து பாதுகாப்பாக வைக்கப்படும்.

இந்த பழைய விமானங்களை அப்புறப்படுத்துவதன் மூலமாக, 2012 முதல், தற்போது வரையிலான விமான நிறுத்தக் கட்டணம், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும். இதனால், சென்னை விமான நிலையத்திற்கு கூடுதல் வருவாய் மொத்தமாக கிடைக்கும்.
“சென்னை ஏர்போர்ட்டில் பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள்” : அதிரடி முடிவு எடுத்த அதிகாரிகள் !

இது தவிர, சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தி வைக்கும் இடங்களை இந்த பழைய விமானங்கள், பல ஆண்டுகளாக ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. இப்போது இந்த விமானங்கள் அகற்றப்படுவதால், மற்ற விமானங்களை நிறுத்துவதற்கு கூடுதல் இடவசதிகள் கிடைக்கும்.

இவைகள் தவிர மேலும் முக்கியமாக, இந்த பழைய விமானங்கள் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக தொடா்ந்து நிறுத்தப்பட்டிருந்ததால், அகற்றுவதன் வாயிலாக, பல்வேறு வகையான பறவைகள், அந்த விமானங்களுக்குள் கூடுகட்டி, வசித்து , இனவிருத்தி செய்து வந்தன. இதனால், விமானங்கள் புறப்படும்போதும், தரையிறங்கும்போதும், பறவைகளால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. இனிமேல் அதைப்போன்று, விமானங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறையும் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

கருத்துகள் இல்லை: