சனி, 15 ஜனவரி, 2022

நடிகை நந்திதா தாஸ் : நான் நடிச்சதுலயே ‘அழகி’ படம் மட்டும் தான் ஹிட் – அழகி 2 பற்றி மனம் திறந்த கதாநாயகி


tamil.behindtalkies.com : தமிழ் சினிமா வரலாற்றிலேயே பொன் மகுடம் சூடிய அழகி படம் வெளியாகி இன்றோடு 20 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது.
இதை கொண்டாடும் விதமாக பலரும் சோசியல் இதை வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமா உலகில் வெளிவந்த பிரபலமான படங்களில் ஒன்றாக அழகி படம் திகழ்கிறது.
இந்த படத்தை இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கி இருந்தார்.
இந்த படத்தில் பார்த்திபன், நந்திதா தாஸ், தேவயானி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இளையராஜா இந்த படத்திற்கு இசை அமைத்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்திருந்தது
மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது என்று சொல்லும். இன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளது.



ஒவ்வொருவரின் வாழ்க்கையை புரட்டிப் இடம் பார்க்க வைக்கும் டைரி போல பள்ளி காதல், வாழ்வின் மீது ஏற்படும் தாக்கம் என பல விஷயங்களை காவியமாக சொன்ன படம் அழகி. இன்றும் இளைஞர்களால் பாராட்டப் படக்கூடிய அழகி படம் வெளியாகி இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதனால் படக்குழுவினர் அனைவரும் கொண்டாடி இருந்தார்கள். பலரும் சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும், இதுகுறித்து இந்த படத்தில் நடித்த பல பிரபலங்கள் சோஷியல் மீடியாவில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த படத்தின் மூலம் மக்கள் வகையில் பிரபலமானவர் நடிகை நந்திதா தாஸ். தமிழ் சினிமா உலகின் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர் நந்திதாதாஸ். இவர் நடிகை மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர் ஆவார். மேலும், இவர் முதன்முதலாக இயக்கிய ஃபிராக் என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தது. இந்த படம் மூலம் இவருக்கு பல விருதுகளும் கிடைத்தது. இவர் முதன்முதலாக நாடக குழுவில் தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார்.

அதற்குப் பிறகு இந்தியில் பல படங்களில் நடித்தார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் ஹிந்தி, ஆங்கிலம், பெங்காலி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மலையாளம், படங்களிலும் நடித்து இருக்கிறார். இருந்தாலும் இவரை தமிழில் வெளிவந்த அழகி படத்தின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். இப்படி ஒரு நிலையில் அழகிபடம் இன்றோடு வெளி வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நந்திதா தாஸ் தன்னுடைய மகிழ்ச்சியை சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

அழகி படம் வெளியாகி 20 வருடங்கள் கடந்துவிட்டது. இதை நம்பவே முடியவில்லை. எனக்கு நரைத்த முடி, கண்ணாடி எல்லாம் வந்து விட்டது. ஆனாலும் 20 வருடங்கள் வந்து நம்பமுடியவில்லை. அழகி நினைவுகள் இன்னும் பசுமையாகவே என் மனதில் உள்ளது. இப்படி ஒரு அற்புதமான படத்தில் நடிக்க வைத்ததற்காக இயக்குநர் தங்கர் பச்சனுக்கு நன்றி. அதேபோல் என்னுடன் நடித்த அற்புதமான நடிகர்களான பார்த்திபன், தேவயானி, சாயாஜி ஷிண்டே என்று பல பேருக்கும் நன்றி.

என்னுடைய ஒரே வெற்றிப் படம் என்றால் அழகி தான். அதற்கு முக்கிய காரணம் இசைஞானி இளையராஜா உடைய பாடல்கள். என்றென்றும் என் மனதில் நீங்கா இடம் என்றென்றும் இசையை தந்ததற்காக அவருக்கும் நன்றி. மீண்டும் அழகி 2 படம் எடுக்கப்பட்டு அதில் நாங்கள் அனைவரும் இணைந்து அந்த பழைய மேஜிக்கை நிகழ்த்த வேண்டும் என ஆசைப்படுகிறேன். மீண்டும் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி இவர் பதிவிட்ட போஸ்ட் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் நடிகர் பார்த்திபனும் அழகி படம் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி ட்விட்டரில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், “அழகி age 20! ஊரான் அவர், ஊட்டி வளத்தா,தன் காதலி தானா வளருவான்னு காதலூர் பக்கம் கா(த்)து வாக்குல சொல்லுவாங்க… அப்படி ஆகச்சிறந்த கலைஞன் தங்கர் பச்சானின் அழகியை நான் ஜீவனூற்றி காதலிக்க, அந்தக் காதலை ஊரே போற்றி கொண்டாடி இரு பத்து ஆண்டுகள் இன்றோடு என்று பதிவிட்டிருக்கிறார்.

மின்னம்பலம் : தமிழ் சினிமாவில் ‘அழகி’ படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. ஒவ்வொருவரின் வாழ்க்கையை புரட்டி பார்க்கும் டைரியை போன்று, பள்ளிக் கால காதல், வாழ்வின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை அழகான காவியமாக சொன்ன படம் ‘அழகி’.
இயக்குநர், ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் இயக்கத்தில், பார்த்திபன், நந்திதாதாஸ், தேவயானி நடித்த இப்படம் தமிழகத்தில் வெள்ளி விழா கொண்டாடியது.
இப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவு பெற்றதை ஒட்டி, தங்கர்பச்சான், பார்த்திபன் இருவரும் படம் குறித்த நினைவுகள், அனுபவங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர்.
அதேபோன்று சினிமா ஆர்வலர்கள், ரசிகர்கள் படம் குறித்த தங்கள் மலரும் நினைவுகளை இணையமெங்கும் பகிர்ந்து வருகின்றனர்.

இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்து படம் பார்ப்போரின் மனதை கவர்ந்த நடிகை நந்திதா தாஸ், இந்தப் படத்தில் நடித்தது குறித்து கூறியிருப்பதாவது, “எல்லோருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ‘அழகி’ படம் வெளியாகி 20 வருடங்கள் கடந்து விட்டது. இதை நம்பவே முடியவில்லை. எனக்கு இப்போது நரைத்த முடி, கன்ணாடியெல்லாம் வந்து விட்டது. ஆனாலும் 20 வருடங்கள் கடந்ததை நம்ப முடியவில்லை. படத்தின் நினைவுகள் இன்னும் பசுமையாக மனதில் உள்ளது. என்னை இப்படி ஒரு அற்புதமான படத்தில் நடிக்க வைத்ததற்காக, இயக்குநர் தங்கர்பச்சானுக்கு நன்றி. அதே போல் உடன் நடித்த அற்புதமான நடிகர்கள் பார்த்திபன், தேவயானி, சாயாஜி ஷிண்டே மற்றும் அனைவருக்கும் நன்றி. மிக முக்கியமாக இசைஞானி இளையராஜா அவர்களுக்கு. என்றென்றும் மனதில் நிற்கும் அற்புதமான பாடல்களையும், இசையையும் தந்ததற்காக நன்றி. மீண்டும் ‘அழகி-2’ எடுக்கப்பட்டு, அதில் நாங்கள் அனைவரும் இணைந்து அந்த மேஜிக்கை நிகழ்த்த வேண்டும் என ஆசைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார்.

இராமானுஜம்


கருத்துகள் இல்லை: