செவ்வாய், 6 ஜூலை, 2021

ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெறுக - மு.க.ஸ்டாலின் கடிதம்

 மாலைமலர் :ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா தொடர்பாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை திரும்பப் பெறுக - மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவை கடந்த ஜூன் 18-ம் தேதி வெளியிட்டது மத்திய அரசு. அந்த மசோதா வெளியானதிலிருந்து கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகை சேர்ந்த கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
தமிழ் திரையுலகில் இந்த மசோதாவுக்கு கமல், சூர்யா, கவுதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், விஷால், கார்த்தி உள்ளிட்ட பலரும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்து உள்ளனர்.


நேற்று தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமசாமி, நடிகர் கார்த்தி, நடிகை ரோகிணி ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதா தொடர்பாக தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து ஆதரவு கோரினர்.

இந்நிலையில், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்துக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “கருத்து சுதந்திரத்தை பறிக்கும் ஒளிப்பதிவு வரைவு திருத்த மசோதா, மாநில அரசுகளின் அதிகாரங்களையும் குறைக்கிறது. உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய அதிகாரத்தையும் குறைக்கிறது. வயது வாரியாக சென்சார் சான்று வழங்குவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே இந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: