சனி, 10 ஜூலை, 2021

21 எழுத்தாளர்களுக்கு தமிழ்நாடு அரசு விருதும், ஊக்கத்தொகையும் வழங்கியது

 மின்னம்பலம் : சென்னை தலைமை செயலகத்தில் 21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான விருது மற்றும் ஊக்கத்தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் நலத் துறை சார்பாக சிறந்த படைப்புகளை அடையாளம் கண்டு விருதும், ரூ.40,000 ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி 2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டிற்கு தேர்வான 21 சிறந்த படைப்புகளின் எழுத்தாளர்களுக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முதல் தவணைத் தொகையாக தலா இருபதாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கெளரவித்தார்.
விருதுபெற்ற எழுத்தாளர்கள்
முனைவர் ந.அறிவரசன்- கபிலரின் செயற்கையற்ற வாழ்வும் மொழிநடையும்,
திருமதி.எஸ்.வசந்தா -திருக்குறளில் பௌத்தம்
திரு.எம்.பிரேம்குமார்-மாமன்னர் அசோகர்


முனைவர் சு.அ. அன்னையப்பன் - தொண்டை மண்டலப் பண்பாட்டில் திரௌபதியம்மன்,
திரு.சு.சுகிர்தராஜா - வஞ்சிக்கப்பட்டவனின் வாய்க்கரிசி,
திருமதி.இரா.கலாராணி- பௌத்த தியானம்,
திருமதி.டி.மோனிகா - பேரறிஞர் அம்பேத்கர்,
திரு.மு.ரமேஷ் - சங்க இலக்கியத்தில் நிலங்கள், குடிகள், வழிபாடுகள்
செல்வி.கே. பரமேஸ்வரி - தடை அதை உடை புதிய சரித்திரம் படை - உளவியல் கட்டுரை,
திரு.அன்பாதவன் - இப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் குதிரை,
திரு.ம.இளங்கோவன்- தமிழரின் பண்பாட்டுப் பதிவுகள்
திரு.அ.கருப்பையன்- தடையும் ஒரு நாள் உடையும்,
திரு.ச. சண்முகசுந்தரம் - குப்பத்து ராஜாக்கள்,
முனைவர் க. மோகன்- உயிர்த்தாள் உயிர் நீங்கினாள்,
திரு.எ. பாரதிராஜா - வெற்றி முழக்கங்கள்,
முனைவர் செ. காளிமுத்து- தமிழ் இலக்கியங்களில் மருத்துவம்,
திரு. அண்டனூர் சுரா - எத்திசை செலினும்,
திரு. மீனாசுந்தர் (எ) மா. மீனாட்சி சுந்தரம் - படைப்பு வெளியில் பதியும் பார்வைகள்,
திருமதி.ஆர்.கமலம் சின்னசாமி - நலம் தரும் நாட்டு வைத்தியம்,
முனைவர் ம. ராஜா - உலக மயமாக்கல் சூழலில் நாட்டுப்புறக் கலைகள்-ஓர் பன்முகப் பார்வை - கட்டுரைத் தொகுப்பு,
திரு.மு.வெ.ஆடலரசு - இசை மொழியும், ஆதி இனமும்
இந்நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்
கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் இறையன்பு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் க. மணிவாசன், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் சோ. மதுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.   -வினிதா

கருத்துகள் இல்லை: