சனி, 18 ஜூலை, 2020

ராஜாஜியின் அத்தனை தடைகளையும் தாண்டி வெளியான பாராசக்தி ..( 1952 அக்டோபர் 17ல் )

Rebel Ravi : பராசக்தியும் Barppana சதியும்...
காந்திஜி,நேருஜி வரிசையில் 'ராஜாஜி' என்று அழைக்கத்தேவையில்லை.
'சி.ராஜகோபாலாச்சாரி' என்று அரசு ஆவணத்தில் அழைக்கப்பட்டது போல் அழைத்தால் போதுமானது.
'ராஜகோபாலாச்சாரி' என்பவர் 'பார்ப்பனிய வெறியர்' என்பது 'குலக்கல்வி' திட்டத்தை செயல்படுத்த முனைந்ததன் மூலம் நாடறியும்.
நாடறிந்த பூணுலுக்கு புது விளக்கம் கொடுத்து எழுத்தாளர் ஜெயமோகன் தொடர்ந்து விஷ விதைகளை விதைத்து வருவதை பழைய கட்டுரை ஒன்றின் மூலம் அறிந்தேன்.
பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் கல்வி கற்பதை தடை செய்யும் நோக்கில் பள்ளிகளை மூடியதற்கு மூளையை தோண்டி திருகி கற்பனைகளை கட்டவிழ்த்து இருக்கிறார்.
'ராஜகோபாலாச்சாரி' படிக்காத பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்ட மக்கள் திரைப்படங்கள் மூலம் வரலாறை, சமூக நீதியை அறிந்து பகுத்தறிவு பெறுகிறார்கள் என்பதால் 'மதுவைப்போல் திரைப்படமும் ஒழிக்கப்பட வேண்டியது' என்று மொழிந்து இருக்கிறார்.
திரையரங்குகளில் சாதி பேதமின்றி அனைவரும் ஒன்றாக அமர்ந்து இருப்பது ராஜகோபாலாச்சாரி போன்ற பார்ப்பனிய வெறியர்களுக்கு வெறியேற்றி இருக்கிறது.

'கலை என்பது கோவில் மண்டபங்களில் மட்டுமே நிகழ்த்தப்பட வேண்டும்' என்பதை ராஜகோபாலாச்சாரி போன்ற பார்ப்பனிய கோஷ்டி வலியுறுத்தி வந்திருக்கிறது.
கோவில் என்றால் 'அவாள்' மட்டுமே அமர்ந்து தொடையை தட்டி 'பேஷ்..பேஷ்' போடலாம்.
1952ல் அக்டோபர் 17ல் வெளி வந்த 'பராசக்தி' திரைப்படம் ராஜகோபாலாச்சாரி முதல்வராக இருந்த போது கடும் நெருக்கடியை சந்தித்து இருக்கிறது.
தமிழகமெங்கும் பார்ப்பனிய சக்திகள் எட்டுக்கும் மேற்பட்ட வழக்குகளை போட்டு 'பராசக்தி' திரைப்படத்தை அலைக்கழித்து இருக்கிறார்கள்.
வழக்கு பற்றிய செய்திகள் தினமும் பத்திரிக்கைகளில் பரபரப்பு செய்தியாக வெளி வந்ததால் பொதுமக்கள் அலைஅலையாக திரையரங்கை தேடி வந்து நிறைத்திருக்கிறார்கள்.
'தடை செய்யப்படும்' என்ற அச்சத்தில் திரையரங்குகளும் உடனடியாக புதிய பிரிண்டுகளை போட்டு திரையிட்டு மக்களிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார்கள்.
தணிக்கை துறையால் நீக்கப்பட்ட மூன்று காட்சிகள் இணைக்கப்பட்டு திரையரங்குகளில் காட்டப்படுவதை கண்டு பிடித்து ஒரு பார்ப்பனர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
தயாரிப்பாளர் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் காங்கிரஸ்காரர்.
எனவே அதற்கு மன்னிப்பு கடிதம் கொடுத்து தணிக்கை துறையை சமாதானப்படுத்தி விட்டார்.
'பராசக்தி படத்தில் 'பூசாரி' வேடத்தில் நடித்தவர் ஒரு இஸ்லாமியர். எனவே அவர் வேண்டுமென்றே மிக கொடூரமாக கோவில் பூசாரியை சித்தரித்தார்' என பார்ப்பனிய சிந்தையுடைய பெண் ஒருவர் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.
பார்ப்பனிய சிந்தையுடைய ஒரு கத்தோலிக்க நீதிபதியும் வழக்கு தொடர்ந்தார்.
'என்னைப்போன்ற படித்தவர்களையே இத்திரைப்படம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பாமர மக்கள் இதனால் கோவிலுக்கு வருவதற்கே பயப்படுவார்கள்' என்பது அவரது வாதம்.
10 April 1952 – 13 April 1954 வரை ராஜகோபாலாச்சாரி முதல்வராக இருந்த போது பார்ப்பனிய சக்திகள் தலைவிரித்து ஆடி இருக்கிறது.
அதில் ஒரு கூட்டம்தான் 1952ல் அக்டோபர் 17ல் வெளி வந்த 'பராசக்தி' திரைப்படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றங்களுக்கு படை எடுத்தது.
படத்தை பார்வையிட்டு தடை செய்வதற்காக அறிவாளிகள் கொண்ட குழுவை ராஜகோபாலாச்சாரி மத்திய அரசை நிர்ப்பந்தித்து வரவழைத்தார்.
வந்தவர்கள் 'பார்ப்பனியர்கள்' அல்ல.
வந்தவர்கள் 'அறிவாளிகள்'.
படத்தை பார்த்து பாராட்டி அறிக்கை சமர்ப்பித்து விட்டார்கள்.
அறிக்கையை பார்த்த ராஜகோபாலாச்சாரிக்கு வந்த பேதி பல நாட்கள் நிற்கவில்லை.
உலக சினிமா பாஸ்கரன்.

கருத்துகள் இல்லை: