வியாழன், 16 ஜூலை, 2020

கம்போடியா...... யார் இந்த தேவர்கள்?! மது அருந்துவோர் தேவர் ... அருந்தாதோர் அசுரர் ...

Dhinakaran Chelliah : யார் இந்த தேவதை.. . இல்லை இல்லை யார் இந்த
தேவர்கள்?! சுராபானம்  அருந்தாதவர்கள் அ+சுரர்கள், அதாவது அசுரர்கள், ஆனால் அவர்களை இதிகாச புராணங்களில் கொடியவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.மதுபானம் அருந்திய தேவர்கள் நல்லவர்களாக இதிகாச புராணங்களில் சித்தரிக்கப்படுகிறார்கள். அசுரர்கள் தங்கள்  மக்களுக்கு நல்லதையே செய்திருக்கிறார்கள், அதற்கு நல்ல உதாரணம் மகாபலி சக்ரவர்த்தி.அதனால்தான் கேரள மக்கள் இப்போதும் மகாபலியை தங்கள் மன்னனாகப் பாவிக்கிறார்கள், அவர்கள் தங்கள் மன்னனை அவமதித்த விஷ்ணுவின் வாமன அவதாரத்தைப் போற்றுவதில்லை.
பிரமணர்களுக்கு நல்லவன் எனும் அர்த்தத்தில் உள்ள பெயர்தான் சு+பிராமணியன், அதாவது சுப்பிரமணியன். வைதீக பிராமணீயத்திற்கு சம்பந்தமே இல்லாதவர்களுக்கும் இவர் கடவுளாகிவிட்டார்.
வட மொழியில் சுத்தம் என்ற சொல்லுக்கு முன் “அ” சேர்க்கப் படும் போது அதன் எதிர் பதமாகிவிடுகிறது. உதாரணத்திற்கு,
சுத்தம் என்பதற்கு முன்பு “அ”சேர்கப் படும் போது அசுத்தமாகிவிடுகிறது.அதே போன்று நியாயம் என்பதற்கு முன்பு “அ” சேர்க்கப் படும்போது அநியாயம் ஆகிவிடுகிறது. அப்படித்தான் அ+சுரா வும்.
இதே போன்று வடமொழியில் “சு” என்றால் நல்ல என்று பொருள்,
உதாரணத்திற்கு சு+கன்யா என்பது நல்ல பெண்ணைக் குறிக்கும்! அப்படியே சு+பிரமணியன் என்பது நல்ல பிராமணன் அல்லது பிராமணர்களுக்கு நல்லவன் அல்லது பிராமணர்களுக்கு பிரியமானவன் என அறியப்படுகிறது.
தேவர்கள் என்பவர்கள் வைதீக ஆரியர்களே, அசுரர்கள் என்பவர்கள் ஆரியர்களின் வருகைக்கு புன்பு இந்திய துணைக் கண்டம் முழுதும் பரவி வாழ்ந்த பழங்குடி மக்களே என்கிறார் ராகுல சாங்கிருத்தியாயன். இவர்களிடையே நிலவிய கடும் போட்டியின் கதையே பாற்கடலைக் கடையும் நிகழ்வும்,இவர்களுக்கிடையே நடந்த யுத்தமே நான்கு வேதங்களிலும் வர்ணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகிறார். அசுரர்களில் ஆயுதமேந்தி கடுமையாக ஆரிய வைதீகர்களை எதிர்த்தவர்கள், தஸ்யூக்கள் என்று வேத நூல்கள் குறிப்பிடுகின்றன.அசுரர்களில் ஆரியர்களுக்கு அடக்குமுறைக்கு ஒடுங்கி இருந்தவர்களை தாஸர்கள் என்று அழைக்கப்பட்டனர்.பின்னாளில் தஸ்யூக்கள் தாஸர்கள் இன்னும் பலரைச் சேர்த்து சண்டாளர்கள் என பட்டம் சூட்டினர் வைதீக ஆரியர்கள்.
அசுரர்களை கெட்டவர்களாக சித்தரித்து அதை அவர்களே நம்ப வைத்திருப்பதில்தான் வைதீகத்தின் வெற்றி அடங்கியுள்ளது!
கம்போடியாவில் இந்து மதம் என்ற பிரயோகம் சமீப காலம் வரை வழக்கில் இல்லை. இன்றும் பிராமணீய மதம் (வைதீகம் அல்லது சனாதன மதம்)என்றே இந்து மதத்தைக் குறிப்பிடுகிறார்கள், எழுதுகிறார்கள்.கம்போடிய அரசு அருங்காட்சியக அறிவிப்பு பலகைகளும் கம்போடிய மன்னரின் அரண்மனையில் உள்ள குறிப்புக்களும் மற்றும் கம்போடிய வரலாற்று நூல்களுமே இதற்குச் சான்று.
கம்போடியாவில் பிராமணீய மதத்தைப் போற்றி ஆட்சியை அமைத்த வைதீக அடிமை மன்னர்கள், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த சண்டைகளையும் பாற்கடலைக் கடைந்த கதையையும் பல கோயில்களில் சிற்பங்களாக வடித்து வைத்திருக்கிறார்கள். அதே போன்று இரண்ய வதம், ராவண வதம்வா, வாலி வதம் என பல கதைகள் சிற்பங்களாக வடிக்கப் பட்டுள்ளன. இந்த சிற்பங்கள் எல்லாம் ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிவிக்கிறது, அது கம்போடிய தேச இந்திய வம்சாவழி அரசர்கள் அனைவரும் வைதீகத்தை பிராமணீயத்தை பின்பற்றியவர்களாக இருந்தார்கள் என்பதே!
ஒரே ஒரு ஆறுதல் வர்ணாசிரம நிலையில் பிராமணர்களும் சத்திரியர்கள் மட்டுமே கல்போடியாவில் உண்டு,பாழாய் போன சூத்திரர்களும், சண்டாளர்களும் அங்கு இல்லை.
வட இந்தியாவில் ராவணனின் பொம்மை எரிப்பதையும், தெற்கில் நரகாசுரனை வதம் செய்வதையும் தீபாவளியாக கொண்டாடுவதை வைதீக ஆரியர்கள் நியாயப் படுத்தலாம், ஆனால் ஆரிய வைதீர்களின் வருகைக்கு முன்பே இந்தியா முழுதும் பரவியிருந்த பழங்குடி மக்கள் இதை ஒருக்காலும் கொண்டாட மாட்டார்கள்.தவிர இறப்பைக் கொண்டாடுவது மனித நேயச் செயல் அல்ல, அது எதிரியாகவே இருந்தாலும்!
நிழற்படம்: கம்போடியா Bayon கோயிலின் முப்பில் அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடையும் சிற்பம்! இந்தச் சிலைகளுக்குக் கீழே நீர் நிலை உள்ளது.

1 கருத்து:

SRI சொன்னது…

தென்னங்கள், பனங்கள் போன்றவை இயற்கையாய் மரங்களில் சுரப்பவை, கடின உடல் உழைப்பாளிகள், உழைப்பின் மூலம் சூடேறிய உடலுக்கு இவை குளிர்ச்சி தருபவை. நம் தமிழர்கள் இயற்கை சார்ந்த வாழ்வியலை (Pagan Cultured) அடிப்படையாக கொண்டவர்கள். இத்தகைய கள்ளினை உண்டு களிப்படைந்தனர். வந்தேறி ஒட்டுண்ணி பிராமணர்களுக்கு உழைப்பென்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் சுரக்காத பானம் செய்தனர் - அதாவது சாராயம் காய்ச்சினர் அதனால் அது சுரா பானமாயிற்று. அத்தகைய சுரா பானமருந்தாதவர்களை அசுரர் என வகைப்படுத்தினர்.