செவ்வாய், 23 ஜூன், 2020

கொரோனா தடுப்பு மருந்து (favipiravir) கிளேன்மார்க் பங்குகள் எகிறியது 40 வீத ஏற்றம்



ஃபவிபிரவிர் மாத்திரைஃபவிபிரவிர் மாத்திரை
samayam .tamil : கொரோனா கொள்ளை நோயால் உலகம் முழுக்க மக்கள் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கின்றனர். இதற்கு ஒரு தடுப்பு மருந்து விரைவில் கண்டுபிடிக்கமாட்டார்களா என மக்கள் ஏங்கிக் கிடக்கின்றனர். மறுபுறம், கொரோனாவுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க மருந்து நிறுவனங்களும், ஆராய்ச்சி நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு பணிபுரிந்து வருகின்றன.இந்நிலையில், கிலென்மார்க் நிறுவனத்தின் ஃபவிபிரவிர் (favipiravir) மருந்தை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய அரசு அனுமதியளித்துள்ளது. 200 மில்லிகிராம் அளவுள்ள 34 ஃபவிபிரவிர் மாத்திரைகள் அடங்கிய பேக்கின் விலை ரூ.3,500 ஆகும்.
;இதைத்தொடர்ந்து, நேற்று கிலென்மார்க் நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 40% உயர்வை எட்டி சாதனை படைத்தது. மேலும், சிப்லா நிறுவனத்தின் பங்குகள் 9.5% உயர்ந்துள்ளன. இந்நிலையில், கிலென்மார்க், சிப்லா பங்குகளால் குறுகிய கால பயன் மட்டுமே கிடைக்குமே தவிர நீண்ட கால அடிப்படையில் லாபத்திற்கான வாய்ப்புகள் குறைவு என வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ரெம்தேசிவிர் மருந்து உற்பத்தியில் சிப்லா மட்டுமெல்லாமல் ஹெட்டிரோ, கேடிலா, ஜூபிலண்ட் லைஃப் சைன்சஸ், ஸ்ட்ரைட்ஸ் ஃபார்மா உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மேலும், கிலென்மார்க்கின் ஃபவிபிரவிர் மருந்து உற்பத்தியிலும் இரண்டு அல்லது மூன்று நிறுவனங்கள் களமிறங்கக்கூடும். ஒரே சந்தையில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கும்போது பங்குகளின் மதிப்பு சரிந்துவிடும்.


இதுமட்டுமல்லாமல், கொரோனாவிலிருந்து குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கையும், கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்தால், பங்குகள் மேலும் சரிந்துவிடும். இதுபோக, புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டும்போது அவற்றின் போட்டியையும் சமாளிக்க வேண்டும்.


அடுத்த 15-30 நாட்களில் கொரோனா மருந்து சந்தையில் குறைந்தது 3 அல்லது 4 நிறுவனங்கள் புதிதாக போட்டியிடும் என வல்லுநர்கள் கருதுகின்றனர். அரசு ஒப்புதல் அளித்ததால் கிலென்மார்க், சிப்லா மருந்துகளின் விற்பனை கணிசமாக உயர்வதற்கு அதிக வாய்ப்பிருந்தாலும், நீண்டகால அடிப்படையில் விற்பனை நிலையாக இருக்காது என இன்வெஸ்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: