வெள்ளி, 26 ஜூன், 2020

தலித் ஜாதி வெறிக்கு எதிராக பொங்க மறுப்பது ஏன்?

Kathiravan Mayavan : ஜாதி ஒழிப்புக்கவே உயிர் வாழுகிற
போராளிகளின் கவனத்திற்கு ..
இன்னும் இந்த கொடுமையை பற்றி பேச மறுப்பது என்?
சுய ஜாதியிலேயே மறு திருமணம் செய்து கொண்ட கௌசல்ய பற்றி பேசுபவர்கள் தலித் ஜாதி வெறிக்கு எதிராக போங்க மறுப்பது என்?
ஜாதி ஒழிப்பு என்பது பிற்படுத்த மக்களுக்கு எதிராக மட்டும் தானா ? > சேரியில் உள்ள ஜாதிவெறிக்கு எதிராக பேச மறுப்பவர்கள் இனியாவது பேசுவார்களா? அல்லது தொடர் கள்ள மௌனம் இருப்பார்களா? ..
கோவை தடாகம் இடையர்பாளையத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகம் சார்ந்த கார்த்திகேயன் என்பவர் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தமிழினி என்ற பெண்ணை காதலித்து சுயமரியாதைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்!
இவர்கள் திருமணத்திற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு என்பதனால் அவர்கள் மணமகன் வீட்டில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் தமிழினியின் தந்தை முன்னாள் காவல்துறை அதிகாரி என்பதனால் நள்ளிரவில் வீடு புகுந்து மணமகனையும், அவரது குடும்பத்தவரையும் கொடூரமாகத் தாக்கிய தமிழினியின் உறவினர்கள் தமிழினியைக் கடத்திச் சென்றுள்ளனர்!
மேலும் மணமகனை ஆணவப்படுகொலை செய்வதாகவும் மிரட்டிச் சென்றுள்ளனர்!

தற்போதைய நிலவரப்படி தமிழினியின் தந்தை தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அனைத்தையும் செய்யத் துணிந்துள்ளார்!
சட்டம் தன் கடமையைச் செய்யுமா?

கருத்துகள் இல்லை: