செவ்வாய், 23 ஜூன், 2020

சீனாவுடன் ரூ.5,000 கோடி ஒப்பந்தங்களை நிறுத்திய மகாராஷ்டிரம்!

சீனாவுடன் ரூ.5,000 கோடி ஒப்பந்தங்களை நிறுத்திய மகாராஷ்டிரம்!மின்னம்பலம் : எல்லைப் பிரச்சினையில் சீன நிறுவனங்களுடனான ரூ.5,000 கோடி மதிப்பிலான மூன்று ஒப்பந்தங்களை மகாராஷ்டிர அரசு நிறுத்தி வைத்துள்ளது.
சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 2.0 என்ற முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இதில் சீன நிறுவனங்களுடன் ரூ.5,000 கோடி மதிப்பிலான மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்த நிலையில் எல்லைப் பிரச்சினைகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களைத் தொடர்ந்து இந்த மூன்று ஒப்பந்தங்களை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய், “மத்திய அரசுடன் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனங்களுடன் மேலதிக ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம் என்று வெளிவிவகார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் மொத்தம் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது, இதில் சிங்கப்பூர், தென்கொரியா, அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் பல இந்திய நிறுவனங்கள் அடங்கும். மற்ற ஒன்பது புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாநில அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது” என்று கூறியுள்ளார்.
ராஜ்

கருத்துகள் இல்லை: