வியாழன், 25 ஜூன், 2020

பொட்டம்மான் தமிழ்செல்வன் நடேசன் ..... கருணா .. ஒரு கிழக்கு போராளியின் குரல்

Reginold Rgi :  யார் இந்த கருணாம்மான் என்ற
கேள்விக்கு 1983ம் ஆண்டு காலப்பகுதிக்கு  செல்ல வேண்டும் ஆம் மட்டக்களப்பு மாவட்டத்தின் 80% நிலப்பரப்பையும் அம்பாரை மாவட்த்தின் 30%
நிலப்பரப்பையும் தனது பூரண கட்டுப்பட்டுக்குள் வைத்திருந்த ஒரு மாவீரனின் வரலாறு ஒரு புறம்மறைக்கப்பட தமிழீழமே எமது மூச்சு என்று எமது சொந்தங்கள் பந்தங்கள் சொத்து சுகங்களை இழந்து போராடப் புறப்பட்ட நான்கு நண்பர்களின் கதை ஆம் வீரம் விளைநிலம் என்று மார்தட்டிக் கொள்ளும் மட்டக்களப்பில் உள்ள எழுவான்கரைதான் எனது சொந்த ஊர் ஆரம்பத்தில் மட்டக்களப்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்றுக்கொண்டிருந்தேன் அந்த நேரத்தில் சிங்கள பௌத்த பேரினவாதிகளாலும் முஸ்லிம் ஊர்காவல் படையாலும் நாளுக்கு நாள் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே இருந்தன எங்கெல்லாம் தமிழ் மக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கும் போதெல்லாம் ஒரு மாவீரனின் பெயரை மட்டக்களப்பிலும் அம்பாரையிலும் வாழும் தமிழ் மக்கள் உச்சரித்து கொண்டே இருப்பார்கள்
யார் அந்த மாவீரன் என்றால் கேணல்.கருணா என்று அழைக்கப்படுகிற மட்டு /அம்பாரை சிறப்பு தளபதி எங்களின் மீட்பர் வருவார் எங்களை காப்பாற்றுவார் என்று கிழக்கில் உள்ள அனைத்து தமிழர்களின் நாவிலிருந்து வரும் அந்த வீரம் செறிந்த நாமம் கருணா எங்கெல்லாம் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறை நிகழ்கிறதோ அங்கெல்லாம் இந்த மாவீரனின் படைகள் எங்கும் செல்வோம் எதிலும் வெல்வோம் என்ற வாசகங்களை எழுதி பெரும் தாக்குதல்களை நடத்தி பலநூறு எதிரிகளை கொன்று குவித்து கொண்டிருந்தார்கள் என் மனதுக்குள் ஆயிரம் கேள்விகள் யார் இந்த மாவீரன் எதற்காக இந்த மாவீரனை தமிழர்களின் மீட்பர் என்று கிழக்கு மக்கள் கொண்டாடுகிறார்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது இந்த மாவீரனை பார்க்க முடியாத என்று எங்கிக்கொண்டிருந்த எனக்கு தமிழ் பத்திரிகைவாயிலாக அந்த மாவீரனின் முகத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது வரி சீருடையுடன் நீண்ட அந்த கம்பிரமான உருவத்தை பார்க்கும் போது
என்னையறியாமலே மேல் சிலிர்த்தது
அந்த காலகட்டத்தில் தான் தமிழ் மக்கள் சென்றுகொண்டிருந்த BUS ஒன்றின் மீது ஸ்ரீலங்காவின் விசேட அதிரடி படை என்றழைக்கப்படும் STF படைகளால் நான்கு தமிழர்கள் ஈவு இரக்கம் இல்லாமல் சுட்டு கொன்றார்கள் இதை கேள்விப்பட்ட நானும் எனது நண்பர்களும் கிளர்த்தெழுந்தோம் இனியும் பொறுமையை இருக்க முடியாது
என்று பாடசாலை முடிந்து வீட்டுக்கு சென்ற நான் எனது அம்மாவுக்கு கடிதம் ஒன்றை எழுதினேன் அம்மா இதுவரை நீங்கள் எனக்கு எந்த குறையும் வைக்கவில்லை நான் என் இனத்துக்காக போராட போகிறேன் என்னை தேட வேண்டாம் ஒருவேளை நான் போரில் இறக்க நேரிட்டால் உன் மகன் மாவீரனாகவே இறப்பான்
நானும் எனது நண்பர்களும் புலி உறுப்பினர் ஒருவரை தொடர்பு கொண்டு புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டோம் அது ஒரு புது அனுபவமாக இருந்தது கிழக்குப் பிரதேசத்தில் புலிகளின் கட்டமைப்பு வன்னியிலுள்ள கட்டமைப்பை விட முற்றிலும் வேறுபட்டது கிழக்கில் புலிகள் புலிகளாக இருந்தனர் அதாவது எப்போதும் தமது சீருடையில் இருந்தனர் இராணுவ சம்பந்தமான ஒன்றுகூடல்கள் அடிகடி நடைபெறும் அத்துடன் பயிட்சிப்பாசறைகள் என போராளிகளின் மனம் எப்பொழுதும் போராட்ட சிந்தனையில் இருந்தது
அந்த நேரத்தில் எங்கள் பயிற்சி முகாமுக்கு வந்த என் தேடலின் கதாநாயகனை நேரில் பார்த்தேன் என் மனம் மகிழ்ச்சிடைந்தது அந்த நிகழ்வை வாழ்நாளில் மறக்க முடியாது
கொலைக்களம் வன்னி நோக்கிய பயணம் கருணா அம்மானுடன்
3000 போராளிகள் இரவு பகலாக உணவின்றி குடிக்க தண்ணீர் இல்லாமல் காடுகள் மலைகள் என்று பல மைல் தொலைவில் உள்ள வன்னி களம் நோக்கி புறப்பட்டோம் ஒருவழியா வன்னிக்கு வந்த எங்களை வன்னி மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்ரார்கள் கிழக்கு பெடியல் வந்துட்டாங்க இனி நிம்மதியாக உறங்கலாம் என்று வன்னி மக்கள் துள்ளிக் குதித்தார்கள்

கருணா அம்மான்ட பெடியள்  இறங்கினா ஆமிட தலை சிதறும் என்று வன்னி மக்கள் முணுமுணுப்பு  எங்கள் காதுகளில் கேட்க நாங்களோ கால் நடையாக வந்த களைப்பை மறந்து கனரக ஆயுதங்களை கொண்டு தீவிர பயிற்சியில் ஈடு பட்டொம்
கருணா தலைமையில் கிழக்கு போராளிகள் களமுனையில் படைத்த வீர சாகசங்களை எழுத்துவதென்றால் எழுதி கொண்ட போகலாம் கருணா அம்மானும் தனக்கு கொடுக்கப்பட்ட கடமைகளை பல களமுனைகளில் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் .
 உதாரணமாக ஆணையிறவு சமர் முல்லைச்சமர் ஜெயசிக்குறுச் சமர் என பல்வேறு சமர்களில் பங்கெடுத்து பிரபாகரனின் நன்மதிப்பை பெற்றார்கள்
ஜெயசிக்குறுச் சமரை முறியடித்ததன் மூலம் ஜெயசிக்குறு கதாநாயகன் என்ற பட்டத்தை கருணா அம்மானுக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் வழங்கி கௌரவித்தார்

அதுமட்டுமன்றி பல களமுனைகளில் வெற்றிகளை குவித்ததன் மூலம் கருணா அம்மானுக்கு ஐந்துக்கு மேற்பட்ட விசேட விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்
தனது உயிர் ஆன்மா அனைத்தயும் அர்ப்பணித்து போராடிய ஒரு மாவீரனை துரோகியாக்கிய பெருமை வடக்கு தளபதிகளையே சேரும் இதெற்கெல்லாம் யார் காரணம் யாழ்ப்பாண ஏகாதிபத்திய மனநிலை கொண்ட தமிழ் செல்வனும் மேட்டுக்குடி கொள்கையை கொண்ட பொட்டு அம்மான் நடேசனும் தானே
போற்றப்பட வேண்டிய ஒரு மாவீரனை இப்படி தூற்றுகீறிர்களே

கருத்துகள் இல்லை: