வியாழன், 17 அக்டோபர், 2019

பிரபாகரன் இலங்கையின் ஒருமைபாட்டுக்கும் சிங்களன் பலம் பெருகவும் உழைத்த நல்ல இலங்கை குடிமகன்

Stanley Rajan : பிரபாகரன் என்பவர் யார்? "பிரபாகரன் ஒரு தீவிரமான
இலங்கை வெறியர், இலங்கை எனும் நாட்டுக்கு அவர்  செய்த உதவியும் சேவையும் அர்பணிப்பும் கொஞ்சமல்ல‌ இலங்கையில் ஈழம் கேட்டு பல தமிழ்குழுக்கள் போராடியபொழுது அவர்களை எல்லாம் ஒழித்து இலங்கை அரசுக்கு பெரும் உதவியாக இருந்தவர்  அவர்..
பல்வேறு தமிழ்குழுக்களை இலங்கை அரசு ஒழிக்கமுடியாமல் திகைத்தபொழுது அவர்களை எல்லாம் ஒழித்துகட்டி ந்து இந்திய படைகளை விரட்டிய வீரமான குடிமகன்
இலங்கை அரசுக்கு உதவியவன் இந்தியபடை இலங்கையினை ஆக்கிரமிக்க வந்தபொழுது தன் புலிபடையால் அதை எதிர்த்து பிரேமதாசாவுடன் இணை
இலங்கைக்கு அச்சுறுத்தலாக இருந்த ராஜிவினை சிங்களன் ராஜமுனி துப்பாக்கியால் அடித்தும் கொல்லமுடியாமல் போக, அந்த ராஜிவினை இந்தியாவுக்குள்ளே சென்று கொன்று இலங்கைக்கு
மிரட்டலை நீக்கியவன்
கடைசியாக எல்லா தமிழ்குழுக்களையும் ஒழித்துவிட்டு, அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களையும் ஒழித்துவிட்டு இனி போராட யாருமே இல்லை எனும் நிலையில் தானே சிங்கள ராணுவத்திடம் தலையில் கொத்து வாங்கி செத்த தியாகி
ஆம் அவன் மட்டும் இல்லையென்றால் ஈழத்தில் நல்ல தலைவர்கள் உருவாகியிருப்பார்கள், இந்திய ராணுவம் நிலைபெற்றிருக்கும் ஈழ எல்லைக்கோடு வகுக்கபட்டிருக்கும், எந்நாளும் இலங்கையின்
ஒருமைபாட்டுக்கு அச்சுறுத்தல் இருந்திருக்கும் இலங்கைக்கு யார் யாரெல்லாம் எதிரியோ அவர்களை ஒவ்வொருவராக கொன்ற மாவீரன்
அவர்  தமிழருக்கான போராட்டம் என சொல்லி முழுக்க முழுக்க
இலங்கையின் ஒருமைபாட்டுக்கும் சிங்களன் பலம் பெருகவும் உழைத்த நல்ல இலங்கை குடிமகன்

அவன் தனக்கு முன்னாலும் பின்னாலும் யாரும் இலங்கை அரசை எதிர்த்துவிட கூடாது என்பதற்காக வல்வெட்டிதுறையின் தன் சகாக்களையும் தன் சொந்த குடும்பத்தினரையுமே பலிகொடுத்த தியாகி அவர்!
பிரபாகரனே இலங்கையினை காத்தவன், கொழும்பு இலங்கை அரசுக்கு அவன் செய்த உதவிகள் கொஞ்சமல்ல.!

 அந்த வீர தியாகிக்கு இலங்கை பாராளுமன்றத்தில் சிலை அமைக்கபட்டு அனுதினமும் அஞ்சலி செலுத்தபடுகின்றது....."
இன்னும் 10 ஆண்டுகளில் இலங்கை மாணவர்கள் படிக்கபோகும் வரலாற்று பாடமிது

கருத்துகள் இல்லை: