ஞாயிறு, 13 அக்டோபர், 2019

சீமான் : ராஜீவ் காந்தியை தமிழர் தாயகத்தில் கொன்று புதைத்தோம் .... ஒப்புதல் வாக்குமூலம்! ஏன் இன்னும் சீமான் கைது செய்யப்படவில்லை?


[Vivekanadan T : 1991  ஆம் ஆண்டு தமிழகத்தில்   வன்முறை மூலம் ராஜிவ் உட்பட 15  தமிழர்களை  உயிர்   இழந்து  ரத்தம் சிந்திய நிகழ்வை கொடுமையை நியாயப்படுத்தி சீமான் பேசிய  காணொளியில் அவன் பேசியவுடன் அந்த கூட்டத்தில் கை தட்டி பாராட்டும் அந்த  மனிதர்களை நினைத்தால் தான் பயமாக இருக்கிறது......சில நாட்கள் முன் தனக்கு  ஓட்டு போடாதவர்களை பனை மட்டையால் அடிப்பேன் என்று பேசி  இருக்கிறார்....அதற்கும் அங்கே கை தட்டினார்கள்....எல்லாவற்றயும் காவல்  துறையும் அரசு எந்திரங்களும் தெரிந்தும் அமைதியா இருப்பது காரணம் என்ன ..? அவனை  போல பல கைதட்டும் காட்டுமிராண்டிகளை  உருவாக்கி வைத்து   இருக்கிறான்......முற்றிய மனோவியாதி என்று என்னால்  ஒதுக்கமுடியாது........ஹிட்லரை விட அவனின் கொள்கை பரப்பு தலைவன்  கோயல்பால்ஸ் செயல்படுத்திய 19 விதிகளை தான் சீமான் ஒன்று ஒன்றாக பேசி  வருகிறான்....இது மிக மிக திட்டமிடலோடு நடத்த படுகிறது.....
இதை போல்  வடக்கில் அர்னாப் கோப்ஸ்வாமி  இதை போல பேசி வருகிறார்கள்.....
தமிழகத்தில்  பாண்டே , H ராஜா போன்றவர்கள்  எங்கே எங்கே தோல்வி அடைகிறார்களோ  , அந்த  இடைவெளியை  சீமான் நிரப்ப வேண்டும் என்பது தான் அவனுக்கு  விடுக்கப்பட்ட  கட்டளை .....  அதை நிறைவேற்றும்வரை அவனை கைது செய்யமாட்டார்கள்....2021  ஆட்சி திமுகவிடம் வந்த பிறகு அவருக்கு நல்ல treatment கொடுக்கவேண்டும்  என்று தலைமையை வேண்டிக்கொள்கிறேன்...அது தியானம் யோகா பயிற்சி என்று  நீங்கள் நினைத்து கொள்ளலாம்....அதுவரை இளம் தலைமுறையை   இவனிடம் இருந்து  காப்பாற்றவேண்டுமே

கருத்துகள் இல்லை: