புதன், 11 செப்டம்பர், 2019

எடப்பாடி அரசின் பச்சை துரோகம் ... தமிழக வேலைகள் வடநாட்டவர்க்கே .EB Department AE,

பாரதீய சனதாக் கட்சியின் எடுபிடியான அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் அவல  நிலை..
இந்தப் பெயர்களை எல்லாம் படிங்க, இவர்கள் தான் இனி உங்கள் பகுதியின்
EB Department AE,
1) Satya Kumar Behera
2) Pendyala Jothsna Praveena.P
3) Nimmalameher Santhosh
4) Suparna .M Das
5) Soni Kumari.S
6) Guru Prasad Reddy.V
7) Awin Gupta
8)Ramasubba Reddy.Poli
9) Nukala Vijayabhaskar.N
10) Mangala Bhargava Kumar.M
11) Nageswara Rao.Gonna
12) Geddamyugandhar.G
13) Aklavya Kumar.Nil
14) Vamsi Krishna.Yele
15) Prudhvi Raj.Saibaba
16) Deepak Kumar.Nill
17) Anil Kumar.Polisetty
18) Raghava Rao.B
19) Venkata Ramaiah.Midde
20) Senapti Naga Venkata Sai Phanindra
21) Neelam Siva.Sankar Reddy
22) Naga Venkata Vamshi Kumar.V
23) Wien.R
24) Ashutosa Kumar Trapathi.Na
25) Mangala Veera Sekhar
26) Shadab Usmani.Su
27) Sai Krishna.Chintha Ginjala
நம்மையெல்லாம் எதிரியாகப் பாவித்த, நாம் நம்முடைய எதிரியாக வரித்துக்கொண்ட ஜெயலலிதா செய்யத்துணியாத தமிழ்த் துரோகத்தை, நாமெல்லாம் துச்சமாக எண்ணும், கோமாளிகள் எனக் கேலி பேசும் எடப்பாடியும், ஓபிஎஸ்சும் செய்திருக்கிறார்கள்.
சில தவறுகளை நம்மால் திருத்தவே முடியாது. அப்படியான தவறு தமிழகம் 2016 தேர்தலில் செய்தது. அந்தத் தவறு கூட இந்த கேட்டைத் தந்திருக்காது ஜெயா உயிரோடு இருந்திருந்தால்.

அந்தத் தவறைத் திருத்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பை 2019ல் பயன்படுத்தி இருந்தால் கூட இந்தத் துரோகத்தில் இருந்து தப்பியிருக்கலாம். அதையும் மானாமதுரை, பரமக்குடி, அரூர் உள்ளிட்ட 9 தொகுதி மக்கள் கெடுத்தனர்.
விளைவு, ஒட்டுமொத்த தமிழகத்தின் மீது இறங்கியிருக்கிறது.
இன்று 29.05.2019 தமிழ்நாடு மின் வாரியத்தில் 325 நபர்களுக்கு உதவி மின் பொறியாளர் பதவிக்கு தமிழக முதல்வரால் பணி ஆணை ( முதல் கட்டமாக 5 நபர்களுக்கு) வழங்கப்பட்டது இதில் ஆந்திரா, கேரளா, மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சேர்ந்த 25 பேர் உட்பட 38 நபர்களும் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்
*தமிழ்நாடு அரசு 2016இல் செய்த திருத்தம் என்பது*
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு இந்தியா முழுவதும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பதுதான்.
மேலும், நேப்பாளம், பூட்டான் ஆகிய வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று கூறுகிறது.
அதுமட்டுமின்றி, பாகிஸ்தான், திபெத் போன்ற நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் விண்ணப்பிக்கலாம் என்றும் கூறுகிறது.
இவ்வாறு வருபவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக்கொண்டால் போதும் எனச் சலுகை அளிக்கிறது தமிழ்நாடு அரசு.
அதன் அடிப்படையில் தான் தமிழக மின்வாரியத்தில் 38 பேர் வெளிமாநிலத்தினர் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பொறியாளர் பட்டம் பெற்று எத்தனையோ இளைஞர், இளைஞிகள் வேலை இல்லாமல் தவித்து வரும் வேலையில் தமிழக மாணவர்களுக்குக் கிடைக்கக் கூடிய வேலை வாய்ப்புகளைத் தமிழர்களுக்கு வழங்காமல் வெளி மாநிலத்தவர்களுக்கு வழங்கிய தமிழக அரசே *தமிழர்களுக்கே பணி வழங்க வேண்டும்* என்ற கோரிக்கை நியாயமானது.
ஆந்திரம், கர்நாடகம், மகாராட்டிரம் போன்ற பல மாநிலங்கள் மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் போது நாம் கேட்பதில் தவறில்லை.
கேட்டால் கிடைக்காது அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே இந்த நிலையை மாற்றிட முடியும்.
இரயில்வேயில் நடந்த போது மெளனம் காத்தோம்.
இப்போது TNEB -ல்
நாளை தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் .
தமிழகஅரசுவேலை தமிழருக்கே
மாணவ, மாணவிகளே இனியும் நீங்கள் விழிக்கவில்லை என்றால் உங்களின் உரிமை பறிபோகும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.

கருத்துகள் இல்லை: