

இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: விவசாயிகள் பயன் பெறுவதற்காக நகை கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல் இதர வாடிக்கையாளர் களுக்கும் கடன் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் விவசாய நகை கடனுக்கான வட்டி குறைப்பால் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட 5 சதவீத தொகையை மத்திய அரசு வழங்கும். ஆனால் நடப்பு பட்ஜெட்டில் 5 சதவீதத்திற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. அதனால் வங்கிகள் நஷ்டத்திற்கு உள்ளாகும்.
இந்த காரணத்திற்காக விவசாய நகை கடன் திட்டத்தை நிறுத்த அனைத்து வங்கிகளும் திட்டமிட்டுள்ளன. அதன் துவக்கமாக விவசாய நகை கடன் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது. வரும் அக். முதல் விவசாய நகை கடன் திட்டம் ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும். அதேநேரத்தில் 9 சதவீத வட்டியில் வழங்கப்படும் அனைவருக்குமான நகை கடன் தொடரும். இவ்வாறு அவர்கள் கூறினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக