செவ்வாய், 10 செப்டம்பர், 2019

துரைமுருகன் : திமுகவினரே தமிழில் பெயர்கள் வைப்பதில்லை ... திராவிட இயக்கம் வளர்த்த ...

வெப்துனியா :திமுக வின் பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் திமுகவினரே இப்போது தமிழில் பெயர் வைப்பதில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் நூல் என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அன்பகத்தில் நேற்று நடைபெற்றது. அதில், தி.க. தலைவர் கி.வீரமணி, திமுக பொருளாளர் துரைமுருகன், ஆ.ராசா, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய துரைமுருகன் ’இந்தியைக் கற்றுகொள்வதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தாய் மொழியான தமிழின் அதிகப்பற்று வேண்டும். இப்போது யாரும் தமிழில் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில்லை. இதில் திமுகவினரும் அடக்கம். திமுக காரர் ஒருவரிடம் பேத்தியின் பெயரைக் கேட்டேன். அவர் அனிஜா என்கிறார். இன்னொருவர் அஸ்வின் என்கிறார். இப்படி திமுகவினரே தமிழில் பெயர் சூட்டாத சூழல்தான் நிலவுகிறது. இந்த நிலை மாற வேண்டும்’ எனக் கூறியுள்ளார்<

கருத்துகள் இல்லை: